In this issue
June 02, 2025
ரூ.1,071 கோடியில் புதிய திட்டங்கள், பாலங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

1 min
கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: கர்நாடக அரசு அறிவுரை
மாநிலத்தில் கோவிட்19 பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகள் இருந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

1 min
தேசவிரோத குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் ஆன மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவு
தேசவிரோத செயலில் ஈடுபட்டதாக கூறி தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன மாணவரை தேர்வெழுத அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min
அரசுப் பணி காலத்தில் போதைப் பொருள் பயன்பாடு ஊடக குற்றச்சாட்டுக்கு எலான் மஸ்க் மறுப்பு
அமெரிக்காவின் அரசு செயல்திறன் துறையில் பணியாற்றிய காலத்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தினார் என்ற 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையின் குற்றசாட்டினை உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் மறுத்துள்ளார்.

1 min
தமிழ்நாடு பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சேலம் மாவட்ட தேர்தல்
சேலம் தமிழ்நாடு பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சேலம் மாவட்ட தேர்தல் கோட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
1 min
ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகை கடன் நிபந்தனைகளை உடன் கைவிட வலியுறுத்தி தஞ்சாவூரில் திமுக விவசாய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக விவசாயிகள், நடுத்தர சாதாரண மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு எதிராக மத்திய அரசின் கை ப்பாவையாக செயல்படும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகை கடன் நிபந்தனைகளை உடன் கைவிட வலியுறுத்தி திமுக விவசாய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

1 min
ஹர்ஷமித்ரா புற்றுநோய் மற்றும் பொது மருத்துவமனை சார்பில் திருச்சியில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை திருச்சி மற்றும் ஹாஷ்மிதரா புற்றுநோய் மற்றும் பொது மருத்துவமனை இணைந்து நடத்தும் புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரியில் முடிவு பெற்றது.
1 min
கலசபாக்கம் அருகே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வரவேற்று பாஜகவினர் பிரமோஸ் மாதிரி ஏவுகணையுடன் தேசிய கொடியேந்தி ஊர்வலம்
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே ஆதமங்கலம் புதூரில் கலசபாக்கம் மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் தேசிய கொடியேந்தி பாஜகவினர் ஊர்வலமாக சென்றனர்.
1 min
சேலத்தில் தனியார் வங்கியின் கடன் தொல்லையால் விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
சேலம் விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை நடவடிக்கை எடுக்க கோரி மனைவி மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.

1 min
ஆட்டோ மீட்டர் கட்டணம் குறித்து தலைமைச் செயலர் ஆலோசனை: அமைச்சர் சிவசங்கர் தகவல்
ஆட்டோ மீட்டர் கட்டணம் குறித்து தலைமைச் செயலர் ஆலோசித்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

1 min
கம்பத்தில் உலக புகையிலை ஒழிப்பு
தினத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
1 min
நொளம் பூர்பகுதியில் பணம்கொடுக்கல் வாங்கல்தகராறில் இருவரை கடத்திய வழக்கில் ஒருவர் கைது இளஞ்சிறார் சிறார்நீதிகுழுமத்தில் ஆஜர்
சென்னை, முகப்பேர் மேற்குபகுதியில் கல்லூரிமாணவர் ஆகாஷ், வ/19, த/பெ. பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்துவருகிறார். ஆகாஷ்க்கும் அதேபகுதியைச் சேர்ந்த அபிஷேக் என்பவருக்கும்பணம் கொடுக்கல் வாங்கல்தகராறு இருந்து வந்துள்ளது.

1 min
அரும்பாக்கம் பகுதியில் உதவி இயக்குனரை காரில் கடத்தி, மிரட்டிய 5 நபர்கள் கைது
பணம் ரூ.29,000/ உடன் 2 இருசக்கரவாகனங்கள், 7 செல்போன்கள் பறிமுதல்

1 min
நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது
சென்னை பெருநகரகாவல், மேற்கு மண்டலம் சைபர்குற்றப் பிரிவுகாவல் நிலையத்தில்கடந்த 28.05.2025 அன்று சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த 42வயது பெண் கொடுத்த புகாரில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் பக்கத்தில் சரவணவிக்ரம் என்ற நபருடன் நட்பாக பழகி தொடர்ந்து இருவரும் தொலைபேசி மூலமாகவும் முகநூல் பக்கம் குறுஞ்செய்திகள் வீடியோ கால், ஆடியோ கால் வழியாக பேசி பழகி வந்ததாகவும், இந்திலையில் சரவணவிக்ரம் தன்னை அவனது கட்டுப்பாட்டுக்குள் வரவழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னை யாருடனும் தொலைபேசியில் பேசக்கூடாது என்றும் சரவணவிக்ரமுடன் மட்டும் தொடர்பில் இருக்க வேண்டும்.

1 min
பெரியமேடு பகுதியி ல்தங்கநகை பட்டறையில் தங்கநகைகள் திருடிய வழக்கில் இருவர் மேற்கு வங்க மாநிலத்தில் கைது சுமார் 382 கிராம்தங்க நகைகள் பறிமுதல்
சென்னை, ஜூன்.2சென்னை, சூளை, ராஜமுத்தையா சாலையில் நரேஷ்குமார், வ/49, த/ பெ.பன்சிலால் என்பவர் NK ஜீவல்லரி என்றபெயரில் தங்கநகைபட்டறை நடத்தி வருகிறார். இவரது தங்க நகைபட்டறையில் சுமார 50 நபர்கள் வேலைசெய்து வருகின்றனர்.

1 min
சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் : தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சேலம் மாவட்டகுழு சார்பில் கோட்டை மைதானத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை முறையாக, உடனடியாக நடத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு திருநங்கை ஒலிப்பு முன்னணி சார்பில் கண்ணன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
காமராஜ் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா (கே.எப்.ஐ) மாநில பொதுக்குழு கூட்டம்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில், திருச்சியில் நடத்துவது ஜூன் 20 மார்த்தாண்டத்தில் காமராஜர் பிறந்த நாளை கொண்டாடுவது, ஜூலை 16 தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் நடத்துவது, ஜூலை 20 ராமநாதபுரம், இளங்கோவன் காமராஜ் தஞ்சாவூர் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெயக்குமார் ராமநாதபுரம் அன்வர் அலி, மார்த்தாண்டத்தைச் சேர்ந்த, தஞ் சாவூர் சுப்பையா இந்த கமிட்டி மாநில மாநாட்டை ராமநாதபுரம் மாவட்டம்.
1 min
பழனிசாமியுடன் சுதீஷ் திடீர் சந்திப்பு
மாநிலங்களவைத் தேர்தலில் இடம் ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை, தேமுதிக பொருளாளர் சுதீஷ் சந்தித்து பேசினார்.

1 min
தஞ்சாவூர் மாவட்டத்தில் 10,12ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்-கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 12ம் வகுப்பு பொது தேர்வு 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.

1 min
400 கிலோவோல்ட் திறனில் மின்வழித் தடங்களை அமைக்கிறது மின்வாரியம்
பசுமை வழித்தடம் திட்டம் 3ல், துணைமின் நிலையங்களுக்கு அதிக மின்சாரம் எடுத்துச் செல்லும் வகையில், 400 கிலோவோல்ட் திறனில் மின்வழித் தடங்களை மின்வாரியம் அமைக்க உள்ளது.

1 min
இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் திமுக படுதோல்வி: அன்புமணி விமர்சனம்
ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் ஆண்டில் இடையில் ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்பதால், மே மாத இறுதியில் ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். மற்ற மாதங்களில் சராசரியாக 4 ஆயிரம் பேர் ஓய்வு பெறுவதாக வைத்துக் கொண்டாலும் ஆண்டுக்கு ஒட்டுமொத்தமாக 50 ஆயிரம் பேர் அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்கள். ஆனால், அந்த இடங்களை நிரப்பத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறதா? இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் திமுக படுதோல்வி அடைந்து விட்டது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min
பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு விருதுகள்
சுதந்திர தின விருது 2025ற்கு, பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து, தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

1 min
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, (ஜூன் 1) முதல் ஜூன் 6ம் தேதி வரை, அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 mins
இதுவரை ஊழல் செய்யாதவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்: மாணவர்களுக்கு விஜய் அறிவுரை
உறுதியாக இருந்தால் நிச்சயம் சாதிக்க முடியும் என்று பள்ளி மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுரை வழங்கியுள்ளார்.
1 min
தமிழகத்துக்கான என் குரல் மாநிலங்களவையில் ஒலிக்கும்: கமல்ஹாசன் தகவல்
முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று சந்தித்து, மாநிலங்களவைத் தேர்தலில் மநீமக்கு இடம் ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்தார்.

1 min
சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி திருவள்ளுவர்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து
சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி வள்ளுவர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.

1 min
‘தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா பாதிப்பு; பதற்றம் தேவையில்லை’ அமைச்சர் மா.சுப்பிரமணியன்
\"தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு உருமாற்றம் பெற்று வருகிறது; ஆனால், இது குறித்து மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் மட்டும் முகக்கவசம் அணிந்து கொள்ளலாம். மற்றபடி வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.” என்று கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

1 min
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலகம் திறப்பு விழா
மத்திய நிதித்துறை முன்னாள் இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் குத்து விளக்கு ஏற்றினார்

1 min
உற்பத்தி துறையில் உலகளவில் சாதனைகளைப் படைத்து நாட்டுக்கே வழிகாட்டும் தமிழகம்: அரசு பெருமிதம்
உற்பத்தி துறையில் உலகளவில் சாதனைகளைப் படைத்து நாட்டுக்கே தமிழ்நாடு வழிகாட்டுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 mins
கேரளாவில் கனமழை; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரளாவின் பலமாவட்டங்களில் கனமழை தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

1 min
பிஆர்எஸ் கட்சியை பாஜக உடன் இணைக்க முயற்சி
பிஆர்எஸ் கட்சியை பாஜக உடன் இணைக்க தொடர் முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சியின் மேலவை உறுப்பினருமான கவிதா குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உளள்து.

1 min
“நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு”
“நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு. அது ரொம்ப பெருசு” என தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

1 min
Cancel Anytime [ No Commitments ]
Digital Only