CATEGORIES
فئات
தக்காளியை முந்தியது சின்ன வெங்காயம்! கிலோ ரூ.210
சென்னையில் சில்லறை விற்பனைக்கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.180-க்கு விற்பனையானது. கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் தக்காளி விலை ரூ.140-க்கும், சின்ன வெங்காயம் ரூ.210-க்கும், இஞ்சி ரூ.230-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தமிழகம் சிறப்பாகச் செயல்படுகிறது
மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பாராட்டு
ஊழலுக்கு எதிரான பாஜகவின் யுத்தத்தில் அனைவரும் இணைய வேண்டும்
ஊழலுக்கு எதிரான பாஜகவின் யுத்தத்தில் அனைவரும் இணைய வேண்டும் என்று, தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.
சந்திரயான்-3 வெற்றிப் பயணம்
திட்டமிட்டபடி புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தம்
இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்றார் ஜோதி
மொத்தம் 6 பதக்கங்கள்
அரையிறுதியில் அல்கராஸ் - மெத்வதெவ்
லண்டன், ஜூலை 13: நடப்பாண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனின், அரையிறுதி ஒன்றில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் - ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் மோதுகின்றனா்
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்
வரலாற்றில் முதல் முறையாக நிகழாண்டு நடைபெறுகிறது
அமெரிக்க செனட் சபையில் வாக்களிப்பு: வரலாறு படைத்தார் கமலா ஹாரிஸ்
வாஷிங்டன், ஜூலை 13: அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்களுக்கு அதிக முறை வாக்களித்த துணை அதிபா் என்ற வரலாற்றுச் சாதனையை கமலா ஹாரிஸ் சமன் செய்துள்ளாா்
வடகொரியாவின் அணு ஆயுதத் திறன் அதிகரிக்கப்படும்
அதிபா் கிம் உறுதி
பிகார் பேரவை நோக்கி பேரணி: பாஜகவினர் மீது கண்ணீர்ப்புகை குண்டுவீச்சு, தடியடி
பாட்னா, ஜூலை 13: பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் அரசின் ஆசிரியா் நியமனக் கொள்கையை கண்டித்து, பாஜகவினா் சட்டப் பேரவை நோக்கி பேரணி செல்ல முயன்றனா்
ஆம் ஆத்மி கர்நாடக மாநிலத் தலைவர் நடிகர் 'முக்கிய மந்திரி' சந்துரு
பெங்களூரு, ஜூலை 13: ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவராக நடிகா் ‘முக்கிய மந்திரி’ சந்துரு நியமிக்கப்பட்டுள்ளாா்
பி.இ. கலந்தாய்வு ஜூலை 22-இல் தொடக்கம்
அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி
ரூ. 1,559 கோடியில் 45 ஐ.டி.ஐ.க்களில் நவீன தொழில்நுட்ப மையங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஆவின் பால் கொள்முதலை 70 லட்சம் லிட்டராக உயர்த்த இலக்கு
கோவை, ஜூலை 13: தமிழகத்தில் பால் உற்பத்தி, ஆவின் கொள்முதலை 70 லட்சம் லிட்டராக உயா்த்த திட்டமிட்டிருப்பதாக பால்வளத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் கூறினாா்
பொது சிவில் சட்ட அமலாக்க முயற்சியைக் கைவிட வேண்டும்..
சட்ட ஆணையத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மகளிர் உரிமைத் தொகை: எந்தச் சிக்கலும் இல்லை
முதல்வர் மு.க.ஸ்டாலின்
இன்று விண்ணில் பாய்கிறது சந்திரயான்-3
புதிய வரலாற்றைப் பதிவு செய்யக் காத்திருக்கும் இஸ்ரோ
இந்திய கடற்படைக்கு 26ரஃபேல் விமானங்கள்
மத்திய அரசு ஒப்புதல்
திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க சாஸ்த்ரா - பஜாஜ் நிறுவனம் ஒப்பந்தம்
ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றும் அளவுக்கு பொறியியல் பட்டதாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்காக தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகமும் - பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
ஜூனில் சரிவைச் சந்தித்த டீசல் விற்பனை
கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் டீசல் விற்பனை சரிவைக் கண்டுள்ளது.
துலீப் கோப்பை: தெற்கு மண்டலம் – 182/7
துலீப் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் மேற்கு மண்டலத்துக்கு எதிராக தெற்கு மண்டலம், முதல் நாள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.
ரோசியு டெஸ்ட்: மே.இ.தீவுகள் தடுமாற்றம்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் தனது முதல் இன்னிங்ஸில் 68 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றமான நிலையில் ஆடி உள்ளது.
ஐரோப்பிய யூனியனில் மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிக்க திட்டம்: இந்தியா எதிர்ப்பு
மணிப்பூரின் வன்முறை நிலவரம் குறித்து ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மணிப்பூா் நிலவரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என சம்பந்தப்பட்டவா்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாக வெளியுறவுச் செயலா் வினய் குவாத்ரா தெரிவித்தாா்.
முக்கிய நகரங்களில் தக்காளி விநியோகிக்க மத்திய அரசு நடவடிக்கை
நாட்டில் தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டுவர முதன் முறையாக மத்திய அரசு தேசியத் தலைநகர் தில்லி மற்றும் முக்கிய நகரங்களில் குறைந்த விலையில் சில்லறை விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.
வட மாநிலங்களில் பலத்த மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
வட இந்தியாவின் பல மாநிலங்களில் பலத்த மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொது சிவில் சட்டம் கூடாது: சட்ட ஆணையத்துக்கு திமுக கடிதம்
பொது சிவில் சட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று இந்திய சட்ட ஆணையத்தை திமுக வலியுறுத்தியுள்ளது.
கருணாநிதி நூற்றாண்டு விழா: 100 ஆட்சி மொழிக் கருத்தரங்குகள் நடத்தத் திட்டம்
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் 38 மாவட்டங்களிலும் 100 ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடத்தவுள்ளதாக தமிழ்வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.
ரூ.934 கோடியில் மேம்படுத்தப்படும் 90 ரயில் நிலையங்கள்
‘அம்ரித் பாரத் ஸ்டேஷன்’ திட்டத்தின் கீழ் ரூ.934 கோடி மதிப்பில் தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள 90 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
ஆளுநர் ரவி சென்னை திரும்பினார்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது தில்லி பயணத்தை முடித்துக் கொண்டு புதன்கிழமை சென்னை திரும்பினார்.
திருக்கோயில்களில் ஒருங்கிணைந்த பெருந்திட்டப் பணிகள்
விரைந்து முடிக்க அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்