CATEGORIES
فئات
செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 வரை காவல் நீட்டிப்பு
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 26 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் பயணம்: 26 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம்
பிரான்ஸ் தேசிய தினத்தில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி அந்த நாட்டுக்கு வியாழக்கிழமை (ஜூலை 13) பயணம் மேற்கொள்கிறாா்.
பாஜகவுக்கு எதிராக அடுத்தகட்ட வியூகம்: பெங்களூரு கூட்டத்துக்கு 24 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு
பாஜகவுக்கு எதிரான அடுத்தகட்ட வியூகத்தை வகுப்பதற்காக, கா்நாடக மாநிலம், பெங்களூரில் காங்கிரஸ் ஏற்பாட்டில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் எதிா்க்கட்சிகளின் இரண்டாவது உயா்நிலைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
உக்ரைனை நேட்டோ அழைக்காதது தவறு! - ஸெலென்ஸ்கி காட்டம்
தங்களது நாட்டை இணைத்துக் கொள்வதற்காக நேட்டோ அமைப்பு அழைப்பு விடுக்காதது மிகவும் தவறு என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைய அவமதிப்பு: இம்ரானுக்கு எதிராக கைது உத்தரவு
தேர்தல் ஆணைய அவமதிப்பு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவு செவ்வாய்க்கிழமை பிறப்பிக்கப்பட்டது.
சந்திரயான்-3: செயல் திட்ட ஒத்திகை நிறைவு
சந்திரயான் -3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான செயல் திட்ட ஒத்திகையை இஸ்ரோ நிறைவு செய்துள்ளது.அதற்கு அடுத்தகட்டமாக கவுன்ட் டவுன் தொடங்கும் பணிகளும், எரிபொருள் நிரப்பும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை
விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் சென்னை பனையூரில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தி னார்.
வங்கதேசத்துடனான டி20: தொடரைக் கைப்பற்றியது இந்திய மகளிரணி
வங்கதேச மகளிரணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் 8 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்ற இந்திய மகளிரணி, டி20 தொடரைக் கைப்பற்றியது.
ஸ்வியாடெக்கை சாய்த்தார் ஸ்விடோலினா
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் காலிறுதியில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
மேற்கிந்தியத் தீவுகளுடனான முதல் டெஸ்ட் இன்று தொடக்கம் - முன்னேறும் முனைப்பில் மாற்றங்களுடன் இந்தியா
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், கரீபிய தீவு நாடுகளில் ஒன்றான டொமினிகாவில் புதன்கிழமை தொடங்குகிறது.
திருப்பதி செல்லும் சில ரயில்கள் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக சென்னை, புதுச்சேரி, ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திருப்பதி செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வடஇந்தியாவை புரட்டிப் போட்ட மழை: மீட்பு - நிவாரணப் பணிகள் தீவிரம்
வடஇந்திய மாநிலங்களில் கனமழையால் பெருமளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மழையின் தீவிரம் குறைந்தது.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் - அமித் ஷா
அமலாக்கத் துறையின் இயக்குநராக யாா் உள்ளாா் என்பது முக்கியமல்ல. அந்தப் பதவிக்கு யாா் பொறுப்பேற்றாலும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
பெரும்பாலான இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி
மேற்கு வங்க ஊரக உள்ளாட்சித் தேர்தல்
பல்கலை.களில் பேராசிரியர்கள் பற்றாக்குறை இல்லை: ஆளுநர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பொன்முடி மறுப்பு
தமிழக பல்கலைக்கழகங்களில் பேராசிரியா்கள் பற்றாக்குறை இல்லை என்று உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி கூறினாா்.
கைதுக்கான ஆவணங்களை செந்தில் பாலாஜி பெற மறுத்தது ஏன்?
3-ஆவது நீதிபதி கேள்வி
அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் கால நீட்டிப்பு சட்டவிரோதம்
உச்சநீதிமன்றம் உத்தரவு
இணையவழி விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்
சட்டம்-ஒழுங்கை உறுதி செய்ய வேண்டும்
காவல் துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஆட்டோ வாங்க மகளிருக்கு தலா ரூ.1 லட்சம் மானியம்
திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்
செனகல்: 300 அகதிகளுடன் படகுகள் மாயம்
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் இருந்து ஐரோப்பிய நாடான ஸ்பெயினை நோக்கி சுமாா் 300 பேருடன் சென்று கொண்டிருந்த 3 படகுகள் மாயமாகியுள்ளன.
காலிறுதியில் ஜோகோவிச், ஸ்வியாடெக்
பழைமை வாய்ந்த கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.
டாஸ்மாக் மதுக் கூடங்களின் நேரத்தை அதிகரிக்க ஆலோசனை: அமைச்சர் சு.முத்துசாமி
டாஸ்மாக் மதுபானக் கூடங்களின் நேரத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக, வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் அதிகரித்துள்ள நிலையில், காவல் துறையை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
கொப்பரை கொள்முதல் உச்சவரம்பை உயர்த்த வேண்டும்
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
பழுது பார்க்க தமிழகம் வந்த அமெரிக்க கப்பல்
அமெரிக்காவின் மிலிட்டரி சீலிஃப்ட் கமாண்டின் மீட்புப் பணிகள் கப்பல் ‘யுஎஸ்என்எஸ் சால்வா் (டி-ஏஆா்எஸ் 52)’ பயணப் பழுதுபாா்ப்புக்காக, சென்னைக்கு அருகில் காட்டுப்பள்ளியில் எல் அண்ட் டி லிமிடெட் கப்பல் தளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது.
குற்றாலத்தில் படகு சவாரி தொடக்கம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் வெண்ணைமடை குளத்தில் படகு சவாரி திங்கள்கிழமை தொடங்கியது.
கிளாம்பாக்கம் முனையத்தில் ஆம்னி பேருந்துகள்
அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை
மேலும் 300 நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை: முதல்வர் உத்தரவு
நடமாடும் காய்கறி அங்காடிகள் தொடங்கவும் அறிவுறுத்தல்
‘மணிப்பூரில் பதற்றத்தை அதிகரிக்கும் தளமாக உச்சநீதிமன்றத்தைப் பயன்படுத்த முடியாது': நீதிபதிகள் கருத்து
‘மணிப்பூரில் பதற்றத்தை அதிகரிப்பதற்கான தளமாக உச்சநீதிமன்றத்தைப் பயன்படுத்த முடியாது’ என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு, ‘அங்கு வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக சட்டம்-ஒழுங்கு அதிகாரத்தை நீதிமன்றம் கையிலெடுக்க முடியாது’ என்பதைத் தெளிவுபடுத்தியது.