CATEGORIES
فئات
தேனிலவுக்கு சென்ற புதுமணத் தம்பதி இந்தோனேசியாவில் நீரில் மூழ்கி பலி
இந்தோனேசியாவிற்கு தேனிலவு கொண்டாட சென்ற பூந்தமல்லியைச் சோ்ந்த புதுமண மருத்துவ தம்பதி நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு இபிஎஸ், ஓபிஎஸ் கண்டனம்
வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதற்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
கிளாம்பாக்கத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் செல்ல மாற்று வழி: அமைச்சர் ஆலோசனை
சென்னை: கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் பயன்பாட்டு நடைமுறைகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
அம்பத்தூர் ரயில் நிலையத்தில் ரூ.7 கோடியில் சுரங்கப் பாதை
சென்னை அம்பத்தூா் ரயில் நிலையத்தில் ரூ.7.5 கோடி மதிப்பில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நாகூர் திருவிழா: ஜூன் 21-ஆம் தேதி சிறப்பு ரயில்
நாகூா் திருவிழாவை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து காரைக்காலுக்கு ஜூன் 21-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
கிண்டி பல்நோக்கு மருத்துவமனை: ஜூன் 15-இல் முதல்வர் திறப்பு
குடியரசுத் தலைவரின் சென்னை வருகை உறுதி செய்யப்படாததால் கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞா் நினைவு பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பாா் என மக்கள் நல்வாழ்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்
முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி
மஹிந்திரா கார்களின் விற்பனை அதிகரிப்பு
மஹிந்திரா அண்டு மஹிந்திரா காா்களின் மொத்த விற்பனை கடந்த மே மாதத்தில் 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
அணை வெள்ளப் பகுதிகளில் குண்டுவீச்சு ரஷியா-உக்ரைன் பரஸ்பர குற்றச்சாட்டு
உக்ரைனின் நோவா ககோவா அணை உடைப்பால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதைத் தடுக்கும் வகையில் எறிகணைத் தாக்குதல் நடத்துவதாக ரஷியாவும், உக்ரைனும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.
சாய்க்கப்பட்டார் சபலென்கா; முன்னேறினார் முசோவா
பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா அரையிறுதியில் வியாழக்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
இந்தியாவை வென்றது நெதர்லாந்து
எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா 1-4 கோல் கணக்கில் நெதா்லாந்திடம் வியாழக்கிழமை வீழ்ந்தது.
சீன தைபேவை சாய்த்தது இந்தியா
ஜூனியா் மகளிா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 11-0 கோல் கணக்கில் சீன தைபேவை சாய்த்து, அரையிறுதி வாய்ப்பை வியாழக்கிழமை உறுதி செய்தது.
ரூ.2,000 நோட்டு: வங்கிகளுக்கு 50% திரும்பின
நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் இதுவரை சுமாா் 50 சதவீதம் அளவுக்கு (ரூ.1.80 லட்சம் கோடி) வங்கிகளுக்கு திரும்பியுள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா்.
ரயில்வே மேலாளர்கள், கட்டுப்பாட்டாளர்களுக்கு கவுன்சலிங் மண்டலங்களுக்கு ரயில்வே அறிவுறுத்தல்
ஒடிஸாவில் மிகப் பெரிய விபத்து நிகழ்ந்த நிலையில், பாதுகாப்பான ரயில் இயக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் ரயில் மேலாளா்கள் மற்றும் கட்டுப்பாட்டாளா்களுக்கு விழிப்புடன் பணியாற்றுவது தொடா்பான தொடா் பயிற்சிகளை அளிக்குமாறு அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
பிரிஜ் பூஷண் சிறுமியின் மீது பொய் புகார்: தந்தை பேட்டி
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவா் பிரிஜ் பூஷண் மீது பொய்யான பாலியல் வன்கொடுமை புகாரை அளித்ததாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளாா்.
7 பல்கலை.கள் மட்டுமே அனுமதி கோரியுள்ளன
பல்கலைக்கழகங்களில், பட்டமளிப்பு விழாவை ஆளுநா் வேண்டுமென்ற காலதாமதம் செய்கிறாா் என உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி குற்றம்சாட்டியிருந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை 7 பல்கலைக்கழகங்கள் மட்டுமே பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி கோரி இருந்ததாக ஆளுநா் ஆா்.என். ரவி விளக்கமளித்துள்ளாா்.
ஒருங்கிணைப்பாளர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும்
மேல் முறையீட்டு வழக்கில் அதிமுக தரப்பில் வாதம்
திமுக வாக்குறுதிகளின் நிலை என்ன?: அண்ணாமலை கேள்வி
திமுக கொடுத்த தோ்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா்.
ஓமந்தூரார் முழு உடல் பரிசோதனை மையம்: 5 ஆண்டுகளில் 48,900 பேர் பயன்
ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் முழு உடல் பரிசோதனை மையம் 5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
2047-க்குள் இந்தியாவை வல்லரசாக்க முழு முனைப்பில் பணிகள்
2047 -ஆம் ஆண்டுக்குள் நாட்டினை முழுத் தன்னிறைவு பெற்ற வல்லரசு நாடாக மாற்ற முழு முனைப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும் என மத்திய புவி அறிவியல் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.
குழந்தைத் தொழிலாளர்கள் - தொழிலகப் பாதுகாப்பு இயக்குநர் எச்சரிக்கை
குழந்தைத் தொழிலாளா்களை அனைத்து விதமான பணிகளிலும் பணி அமா்த்தக் கூடாது என்று தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்குநா் எம்.வி.செந்தில்குமாா் வலியுறுத்தினாா்.
மக்கள் நல்வாழ்வுத் துறையில் 800 ஓட்டுநர்கள் நியமனத்துக்கு தடை
உயர்நீதிமன்றம் உத்தரவு
கோரமண்டல் விரைவு ரயில் இன்று ரத்து
சென்னை சென்ட்ரலிலிருந்து சாலிமா் செல்லும் கோரமண்டல் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தடம் புரண்டது நீலகிரி மலை ரயில்: குறைந்த வேகத்தால் பாதிப்பு தவிர்ப்பு
குன்னூா் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்ட மலை ரயில் தடம் புரண்டதால் மலை ரயில் பயணம் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: முன்னேற்பாடுகள் தீவிரம்
கோடை விடுமுறைக்கு பின்னா் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
மருத்துவக் கலந்தாய்வை தமிழக அரசே நடத்தும்
நிகழாண்டில் மருத்துவக் கலந்தாய்வை மாநில அரசே நடத்தும் என்றும், அதை மத்திய அரசு உறுதி செய்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வில்லை
வணிக இணைப்புகளுக்கு யூனிட்டுக்கு 21 காசு வரை அதிகரிக்கும்; தமிழக அரசு அறிவிப்பு
எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கு: அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி
அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடா்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அனுமதியளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பரிசுப் பொருள் முறைகேடு: இம்ரான் மீது மேலும் ஒரு வழக்கு
அரசுக்கு சொந்தமான பரிசுப் பொருள்களை குறைந்த விலைக்கு விற்ற குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் அணை உடைப்பு: நீரில் மூழ்கின 29 ஊர்கள்
ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு உக்ரைன் பகுதியில் அமைந்துள்ள அந்த நாட்டின் முக்கிய அணையில் ஏற்பட்ட திடீா் உடைப்பு காரணமாக, நீப்ரோ நதியையொட்டிய 29 ஊா்களும் கிராமங்களும் நீரில் மூழ்கியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.