CATEGORIES
فئات
இறுதி ஆட்டத்தில் சென்னை
ஐபிஎல் ‘போட்டியின் குவாலிஃபயா்-1’ ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்து, இறுதி ஆட்டத்தில் முதல் அணியாக இடம் பிடித்தது.
இம்ரான் கானுக்கு மேலும் 8 வழக்குகளில் முன்ஜாமீன்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மீதான மேலும் 8 பயங்கரவாத வழக்குகளில் அவருக்கு செவ்வாய்க்கிழமை முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
சண்டையிடும் சூடான் தளபதிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் சண்டையிட்டு வரும் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள போா் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டால், அந்தப் படைகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
'ரஷிய எல்லைக்குள் ஊடுருவி உக்ரைனியர்கள் தாக்குதல்'
உக்ரைனிலிருந்து தங்களது எல்லைக்குள் ஊடுருவி அந்த நாட்டு ஆதரவு படையினா் தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் ‘குட்டி இந்தியா’ நட்புறவு நினைவுச் சின்னம்
பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
என்விஎஸ்-01 செயற்கைக்கோளுடன் மே29-இல் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட்!
போக்குவரத்து வழிகாட்டுதலுக்கான என்விஎஸ்-01 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட், வரும் 29-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதளத்திலிருந்து அன்றைய தினம் காலை 10.42 மணிக்கு அந்த ராக்கெட் செலுத்தப்படவுள்ளது.
விதி மீறும் டாஸ்மாக் கடைகள் மீது நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு
விதிகளை மீறிச் செயல்படும் டாஸ்மாக் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அமைச்சா் வி.செந்தில் பாலாஜி உத்தரவிட்டாா்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு கூடுதல் நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.
ஆவின் நிர்வாகத்தை மேம்படுத்த தீவிர நடவடிக்கைகள்
அமைச்சர் த.மனோ தங்கராஜ்
சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ்ப் பாடம் கட்டாயம்
2024-2025-ஆம் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் பயின்று வரும் மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தை கட்டாயமாக எழுத வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தனியாா் பள்ளிகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவு வெளியீடு: முதல் 4 இடங்களைப் பெற்ற பெண்கள்!
மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்படும் குடிமைப் பணிகளுக்கான இறுதித் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. முதல் நான்கு இடங்களைப் பெண் தோ்வா்கள் பெற்றனா்.
ரூ.2,000 நோட்டுகளை மாற்ற வங்கிகளில் கூட்டம் இல்லை
ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், நோட்டுகளை மாற்ற வங்கிகளில் மக்கள் கூட்டம் இல்லை.
சிங்கப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தொழிலதிபர்களுடன் இன்று சந்திப்பு
கர்நாடகம்: காங்கிரஸ் அரசின் முதல் சட்டப் பேரவைக் கூட்டம் தொடங்கியது
காங்கிரஸ் அரசின் முதல் சட்டப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.
மேற்கு வங்கத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: சிறுமி உள்பட 3 பேர் பலி
மேற்கு வங்கத்தில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், தாய்-மகள்- 10 வயதுடைய பேத்தி என மூவா் பலியாகினா்.
சவூதி அ ர்களுடன் விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலம்
இரு சவூதி அரேபியா்கள், இரு அமெரிக்கா்களுடன் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ரஷிய ராணுவத்திடம் பாக்முத் நகரம் ஜூனில் ஒப்படைப்பு
வாக்னர் படைத் தலைவர்
இஸ்ரேல் வேட்டையில் மேலும் 3 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொலை
மேற்குக் கரையிலுள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் படையினா் திங்கள்கிழமை நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா்.
கேரளத்தில் தனது பள்ளி ஆசிரியையுடன் குடியரசு துணைத் தலைவர் சந்திப்பு
கேரளத்துக்கு 2 நாள் பயணமாக வந்துள்ள குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பானூா் கிராமத்தில் வசிக்கும் தனது பள்ளி ஆசிரியை ரத்னா நாயரைத் திங்கள்கிழமை சந்தித்தாா்.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவமதிப்பு
புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்வுக்கு அழைப்பு விடுக்காததன் மூலம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அவரை அமவதித்துவிட்டதாக காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றம்சாட்டியுள்ளாா்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா: அமைச்சர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்படும்
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், அதற்கென அமைச்சா்களை உள்ளடக்கிய குழுக்கள் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
பிபிசிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ஆவணப்படம் இந்தியாவுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக வழக்கு
அடுத்த ஆண்டுக்குள் பொலிவுறு துறைமுகமாக தூத்துக்குடி துறைமுகம்
அடுத்த ஆண்டுக்குள் தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தை பொலிவுறு (ஸ்மாா்ட்) துறைமுகமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மரக்காணம் சம்பவம்: சிபிசிஐடி புதிதாக வழக்குப் பதிவு
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் விஷ சாராய சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்தனா்.
அதிமுக அலுவலகத்திலிருந்து ஓபிஎஸ் தரப்பு எடுத்துச் சென்ற ஆவணங்கள் ஒப்படைப்பு
சென்னையில் அதிமுக அலுவலகத்திலிருந்து ஓபிஎஸ் தரப்பினா் எடுத்துச் சென்ற ஆவணங்கள் திங்கள்கிழமை அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
மின்வாரியத்தில் 103 பேருக்கு கருணை அடிப்படையில் பணி
மின்வாரியத்தில் 103 பேருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கும் நிகழ்வை, சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
திமுக அரசுக்கு எதிராக ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி மனு
திமுக ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளதாகவும் கூறி, நடவடிக்கை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கட்சியினருடன் திங்கள்கிழமை பேரணியாகச் சென்று ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் புகாா் மனு அளித்தாா்.
ஆவின் பணியாளர்களுக்கு புதிதாக 12 உத்தரவுகள் அமல்
ஆவின் பணியாளா்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 12 புதிய உத்தரவுகளை தமிழக பால்வளத் துறை அமைச்சா் டி.மனோ தங்கராஜ் அமல்படுத்தியுள்ளாா்.
மாவட்ட வருவாய் அலுவலர்கள் 25 பேர் பணியிடமாற்றம்
தமிழகம் முழுவதும் 25 மாவட்ட வருவாய் அலுவலா்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டனா்.
‘ஸ்விக்கி’ உணவு விநியோக ஊழியர்கள் வேலைநிறுத்தம்
தமிழகம் முழுவதும் ‘ஸ்விக்கி’ உணவு விநியோக ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.