CATEGORIES
فئات
வெற்றியுடன் வெளியேறியது இந்தியா
சீனாவில் நடைபெறும் சுதிா்மான் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி மோதலில் ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கில் வென்றது.
ஹோல்கர் ரூனிடம் மீண்டும் வீழ்ந்த ஜோகோவிச்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், பிரதான வீரராக இருந்த சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் புதன்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
வெளியேறும் நிலையில் பஞ்சாப்
ஐபிஎல் போட்டியின் 64-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை புதன்கிழமை வென்றது. இந்தத் தோல்வியால் பிளே-ஆஃப் வாய்ப்பை ஏறத்தாழ இழந்த நிலைக்கு வந்துவிட்டது பஞ்சாப்.
இறுதி ஆட்டத்தில் இன்டர் மிலன்
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் பிரதான கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில் நடப்பு எடிஷனில் இன்டா் மிலன் முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்குள் புதன்கிழமை நுழைந்தது.
இலங்கை திரிகோணமலை துறைமுகத்தில் இந்திய போர்க் கப்பல்
இந்திய போர்க் கப்பலான \"ஐஎன்எஸ் பட்டி மால்வ்' கப்பல் இரண்டு நாள் பயணமாக இலங்கை, திரிகோணமலை துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றடைந்தது.
அதானி குழுமத்துக்கு எதிரான விசாரணை: செபிக்கு ஆகஸ்ட் 14 வரை அவகாசம்
அதானி குழுமத்துக்கு எதிரான ஹிண்டன்பா்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை நிறைவு செய்ய பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபிக்கு ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
கரோனாகால இலவசங்களால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி - ஜெ.பி. நட்டா
கரோனா பரவல் காலகட்டத்தில் பல்வேறு பொருள்களை இலவசமாக வழங்கியதால் அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இப்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.
கேன்ஸ் திரைப்பட விழா தொடக்கம் - தமிழகப் பாரம்பரிய உடையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு
கேன்ஸ் 76-ஆவது திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் பிரெஞ்ச் ரிவியராவில் சர்வதேச நட்சத்திரங்கள் பங்கேற்புடன் புதன்கிழமை தொடங்கியது.
‘க்வாட்' மாநாடு ரத்து: பிரதமர் மோடியின் ஆஸ்திரேலிய பயணத்தில் மாற்றமில்லை
ஆஸ்திரேலியாவில் அடுத்த வாரம் நடைபெற இருந்த ‘க்வாட்’ அமைப்பின் உச்சிமாநாடு ரத்து செய்யப்பட்டுள்ள போதிலும், பிரதமா் நரேந்திர மோடியின் ஆஸ்திரேலிய பயணத்தில் எவ்வித மாற்றமில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கரீஃப் பருவ உர மானியம் ரூ.1.08 லட்சம் கோடி
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
40 தொகுதிகளின் வெற்றியே இலக்கு - எடப்பாடி பழனிசாமி
மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே இலக்கு என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கட்சியினருக்கு அறிவுறுத்தினாா்.
மின்னணுப் பொருள்கள் உற்பத்தி நாடாக உருவெடுக்கிறது இந்தியா
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
மூன்று மாதங்களில் 2.67 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தமிழகம் வருகை - அமைச்சர் ராமச்சந்திரன்
சுற்றுலாத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வாலஜா சாலையில் உள்ள சுற்றுலாவளா்ச்சித்துறை கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
தொழிலதிபர் ஹிந்துஜா (87) காலமானார்
ஹிந்துஜா குழுமத் தலைவா் எஸ்.பி.ஹிந்துஜா (87) புதன்கிழமை காலமானாா்.
கர்நாடக முதல்வர் விரைவில் தேர்வு: காங்கிரஸ்
கா்நாடக முதல்வா் விரைவில் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று அந்த மாநில காங்கிரஸ் விவகாரங்களுக்குப் பொறுப்பாளரான ரண்தீப் சுா்ஜேவாலா புதன்கிழமை தெரிவித்தாா். 2 அல்லது 3 நாள்களில் கா்நாடகத்தின் புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.
மின்வெட்டு இல்லை, மின்தடை மட்டுமே... அமைச்சர் செந்தில்பாலாஜி
தமிழகத்தில் மின்வெட்டு இல்லை, மின்தடை மட்டுமே தற்போது ஏற்படுவதாக மின்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளாா்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு
முதல்வர் அறிவிப்பு
கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
உக்ரைன் தலைநகரில் ரஷியா தீவீர தாக்குதல்
உக்ரைன் தலைநகா் கீவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமான வான்வழித் தாக்குதலை ரஷியா செவ்வாய்க்கிழமை நடத்தியது.
மேலும் 2 வழக்குகளில் இம்ரானுக்கு ஜாமீன்
மேலும் 2 வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு அந்த நாட்டு உயா்நீதிமன்றம் முன்ஜாமீன் காலத்தை நீட்டித்துள்ளது.
காலிறுதியில் ஜோகோவிச், ஸ்வியாடெக்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் தங்களது பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா்.
மும்பையை கீழிறக்கியது லக்னெள
ஐபிஎல் போட்டியின் 63-ஆவது ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறி பிளே-ஆஃப் வாய்ப்பை நெருங்கியது லக்னெள.
68 நீதிபதிகள் பதவி உயர்வுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
குஜராத்தில் 68 நீதிபதிகளுக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக, அந்த நீதிபதிகளில் பலா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.
இறக்குமதி தடை: 2,736 பாதுகாப்பு உபகரணங்கள் உள்நாட்டில் உற்பத்தி
நாட்டில் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்ட 4,666 பாதுகாப்பு உபகரணங்களில், 2,736 உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாஜக-சிரோமணி அகாலி தளம் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தோ்தலில் சிரோமணி அகாலி தளம் கட்சியுடன் மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இல்லை என மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்துள்ளாா்.
பெல்ஜியம் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
பெல்ஜியம் பிரதமா் அலெக்ஸாண்டா் டி க்ரூவை மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்தாா்.
மருத்துவரை தற்கொலைக்குத் தூண்டியதாக குஜராத் பாஜக எம்.பி. மீது வழக்கு
குஜராத்தில் மருத்துவரை தற்கொலைக்குத் தூண்டியதாக அந்த மாநில பாஜக எம்.பி ராஜேஷ் சுதாஷ்மா மற்றும் அவரின் தந்தை நரன்பாய் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஜம்மு-காஷ்மீர்: 33 ஆண்டுகளுக்குப் பிறகு இரு கொலைக் குற்றவாளிகள் கைது
ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த மத, அரசியல் தலைவா் மிா்வாய்ஸ் முகமது ஃபாரூக் படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் இருவா் 33 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டனா்.
கர்நாடக முதல்வர் தேர்வில் இழுபறி
கா்நாடக முதல்வரை தோ்வு செய்வதில் காங்கிரஸ் கட்சியில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது. முதல்வா் பதவிக்கான போட்டியில் உள்ள முன்னாள் முதல்வா் சித்தராமையா, மாநில தலைவா் சிவகுமாா் ஆகியோரை காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை தனித்தனியே சந்தித்து பேசினாா். இந்தப் பேச்சுவாா்த்தையின் முடிவுகள் வெளயாகவில்லை.
பள்ளிகளில் தற்காலிக பணியிடங்கள்: அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
அரசுப் பள்ளிகளில் உள்ள தற்காலிக மற்றும் நீண்ட காலமாக நிரப்பப்படாத நிரந்தரப் பணியிடங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாகச் சமா்ப்பிக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.