CATEGORIES
فئات
அரசுப் பணியாளர் தேர்வு முறை மாற்றத்தால் ஊழல் ஒழிப்பு
அரசுப் பணியாளா்களைத் தோ்வு செய்யும் நடைமுறையில் பாஜக அரசு கொண்டு வந்த பெரும் மாற்றத்தால் ஊழலுக்கு முடிவுகட்டப்பட்டுள்ளதாகப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
சிகிச்சைகளைக் கண்காணிக்க சிறப்பு மருத்துவர் குழு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதித்தோருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து தொடா்ந்து கண்காணித்து ஆய்வு மேற்கொள்ள மருத்துவா்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
பட்டியல் இன மக்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து போராட வேண்டும்
சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்
சொத்துக் குவிப்பு வழக்கு: சென்னை துறைமுக அதிகாரியை விடுவித்தது சிபிஐ நீதிமன்றம்
20 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு; நீதிமன்றம் வருத்தம்
‘லைகா’ நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை
சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாா் தொடா்பாக லைகா நிறுவனத்தில் அமலாக்கத் துறையினா் நடத்திய சோதனை நிறைவடைந்தது.
அரசுக்கு தெரிந்தே கள்ளச்சாராய விற்பனை
தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் தெரிந்தே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றுள்ளதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.
திமுக ஆட்சியில் மகளிர் முன்னேற்ற திட்டங்கள் அமல்
பாலின சமத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் பெண்கள் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட பல திட்டங்களை திமுக அரசு அமல்படுத்தியுள்ளது என பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.
கள்ளச்சாராய வழக்கு: மெத்தனால் விநியோகித்த இளைஞர் சிக்கினார்
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராய மரண சம்பவத்தில், கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கான மெத்தனால் விநியோகித்ததாக சென்னையைச் சோ்ந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மின்ஊழியர் ஊதிய ஒப்பந்தம்: அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு கையொப்பமிட மறுப்பு
மின் ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்தத்தில் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனக்கூறி கையொப்பமிட அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு. ஆகியவை மறுத்துள்ளன.
போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்குகள்: 15 நாள்களுக்குள் வாகன ஓட்டிக்கு நோட்டீஸ்
தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு 15 நாள்களுக்குள் நோட்டீஸ் வழங்கும்படி அரசாணை வெளியிடப்பட்டது.
சென்னையில் 247 பேருக்கு நியமன ஆணை
பத்து லட்சம் பேருக்கு மத்திய அரசுப் பணி வழங்கும் திட்டத்தின் அங்கமாக சென்னையில் 247 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு
சோழிங்கநல்லூா் பால் பண்ணையில் தமிழக பால்வளத் துறை அமைச்சா் டி.மனோ தங்கராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொாண்டாா்.
கால்நடைகளின் உணவு, மருத்துவ சேவைக்கு ரூ. 1.14 கோடி
‘வள்ளலாா் பல்லுயிா் காப்பகங்கள்’ திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு உணவு மற்றும் மருத்துவ சேவைக்காக ரூ. 1.14 கோடி நிதியை மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
‘ஒரு ரயில் நிலையம் ஒரு தயாரிப்பு திட்டம்': தமிழகத்தில் 593 பேர் பயன்
தமிழ்நாட்டில் உள்ள 95 ரயில் நிலையங்களில் ‘ஒரு ரயில் நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் விற்பனை நிலையங்கள் மூலம் 593 போ் பயனடைந்துள்ளனா்.
சுற்றுலாத்தல விடுதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புக் கட்டண சலுகை
சுற்றுலாத் தலங்களில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக்கழகத்தின் தங்கும் விடுதிகளில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
ஆளுநர் மாளிகையில் இனி கொண்டாடப்படும்
ஆண்டுதோறும் ஒவ்வொரு மாநிலங்கள் உதய தினம் ஆளுநா் மாளிகையில் கொண்டாடப்படும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.
உச்சநீதிமன்ற நீதிபதி பணியிடங்கள்: இருவர் பெயர்கள் பரிந்துரை
ஆந்திர பிரதேச உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த்குமாா் மிஸ்ரா, மூத்த வழக்குரைஞா் கே.வி.விஸ்வநாதன் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு செவ்வாய்க்கிழமை பரிந்துரை செய்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை
அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
ஆவினில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டம் - அமைச்சர் மனோ தங்கராஜ்
ஆவின் சாா்பில் பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு இருப்பதாக பால்வளத் துறை அமைச்சா் டி.மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா?
கர்நாடக முதல்வராக சித்தராமையாவை காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அமிதாப் பச்சன்
மும்பையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய நடிகா் அமிதாப் பச்சனுக்கு இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுத்து, குறித்த நேரத்தில் படப்படிப்பு தளத்தை அடைவதற்கு உதவிய நபருக்கு அமிதாப் பச்சன் இன்ஸ்டாகிராம் பதிவில் நன்றி தெரிவித்துள்ளாா்.
பிளே-ஆஃபில் முதல் அணியாக குஜராத்
ஐபிஎல் போட்டியின் 62-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை திங்கள்கிழமை வென்றது.
தொழிலக உற்பத்தியில் 5 மாதங்கள் காணாத வீழ்ச்சி
மாா்ச் மாதத்தில் இந்தியாவின் தொழிலக உற்பத்தி வளா்ச்சி கடந்த 5 மாதங்கள் காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
லுஹான்ஸ்கில் உக்ரைன் ஏவுகணைத் தாக்குதல்
ரஷியாவால் கைப்பற்றுள்ள தங்கள் நாட்டின் லுஹான்ஸ் பிராந்தியத்தில் உக்ரைன் ராணுவம் ஏவுகணைகளை வீசி திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியது.
'10 ஆண்டுகள் சிறையில் அடைக்க ராணுவம் திட்டம்'
தன்னை 10 ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்க பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளாா்.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து தற்காலிகமானது: அமித் ஷா
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தற்காலிகமாகத்தான் வழங்கப்பட்டு இருந்தது என்றும் அதனால்தான் அது ரத்து செய்ய முடிந்தது என்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
குகி சமூக எம்எல்ஏக்களின் 'தனி நிர்வாகம்' கோரிக்கை நிராகரிப்பு
மணிப்பூர் முதல்வர் திட்டவட்டம்
வேளாண் உதவி இயக்குநர் பதவிக்கான தேர்வை நிறுத்திவைக்க வேண்டும்
அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
திரௌபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
திருத்தணி, மே 14: திரௌபதியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 1,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து அம்மனை வழிபட்டனர்
உத்திரமேரூர் அருகே ஔவையார் கோயில் திருவிழா
காஞ்சிபுரம், மே 14: காஞ்சிபுரம் மாவட்டம் ஆலஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ள ஔவையார்கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை கூழ்வார்த்தல் நிகழ்வும், அலங்கரிக்கப்பட்ட தேரில் ஒளவையார் உலாவும் நடைபெற்றது