CATEGORIES
فئات
கார்கே, ராகுலுடன் நிதீஷ், தேஜஸ்வி சந்திப்பு: எதிா்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட உறுதி
காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி ஆகியோரை பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா், துணை முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோா் தில்லியில் புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா்.
500 மதுக் கடைகள் மூடப்படும்: அமைச்சா் வி.செந்தில்பாலாஜி
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படும் என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி அறிவித்தாா்.
பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு: தமிழக வீரர்கள் இருவர் உள்பட 4 பேர் பலி
பஞ்சாப் மாநிலம், பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் அடையாளம் தெரியாத இருவா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 வீரா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களில் இருவா் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்: கடும் நடவடிக்கை - |முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரவையில் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தாா்.
கரோனா பரவல்: அச்சம் தேவையில்லை
கரோனா தொற்றுப்பரவலைக் கண்டு மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
6 நகரங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 6 நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டைகடந்து பதிவானது.
கரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு
தமிழகத்தில் மேலும் ஒருவர் கரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 87 வயது முதியவர் ஒருவர் இணைநோய்களுடன் கரோனா பாதிப்புக்குள்ளாகி தனியார் மருத்துவமனையில் பலியானதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
பாஜகவுக்கு அஞ்சமாட்டேன்: ராகுல் காந்தி
நான் பாஜகவுக்கு அஞ்சமாட்டேன் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
பொறியியல் கல்லாரிகளில் ரூ. 22 கோடியில் திறன், வேலைவாய்ப்பு மையம்
அனைத்து அரசுப் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 'நான் முதல்வன்’ திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையம் ரூ.22 கோடியில் நிறுவப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழகத்தில் ஒரு மாதத்துக்குப் பிறகு கரோனா உயிரிழப்பு செங்கல்பட்டில் பெண் பலி
தமிழகத்தில் ஏறத்தாழ ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் கரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
ஆசியா & ஓசியானியா செஸ்: சாம்பியன் ஆனார் டி.குகேஷ்
ஜெர்மனியில் நடைபெற்ற உலக செஸ் ஆர்மகெடான் ஆசியா & ஓசியானியா போட்டியில் இந்திய இளம் வீரர் டி.குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.
அம்ருத்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளி கைது
காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ருத்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளி பாபல்ப்ரீத் சிங்கை பஞ்சாப் காவல் துறை கைது செய்துள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13 வரை அவகாசம்
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
நாடு முழுவதும் கரோனா தடுப்பு ஒத்திகை
இந்தியாவில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தொற்று தடுப்புக்கான தயார்நிலையை உறுதிபடுத்த நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பு ஒத்திகை திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இரு நகரங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் இரு நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி ஞாயிற்றுக்கிழமை பதிவானது.
ஈஸ்டர்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து
ஈஸ்டர் பண்டிகையையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதால் 210 மெகா வாட் மின் உற்பத்தி தடைபட்டது.
16 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்: ரஷியாவிலிருந்து இறக்குமதி புதிய உச்சம்
கடந்த மார்ச் மாதம் ரஷியாவில் இருந்து இந்தியா தினமும் 16.4 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து புதிய உச்சத்தை எட்டியது.
தமிழில் சிஆர்பிஎஃப் தேர்வு: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்
மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஈஸ்டர்: குடியரசுத் தலைவர் வாழ்த்து
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சார்லஸ்டன் ஓபன்: ஜெஸிகா முன்னேற்றம்
அமெரிக்காவில் நடைபெறும் சார்லஸ்டன் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், உள்நாட்டு வீராங்கனை ஜெஸிகா பெகுலா அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
திமுக-பாஜக போட்டி முழக்கம்
பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட அரசு நிகழ்ச்சியில் திமுக, பாஜகவினர் போட்டி போட்டு முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐபிஎல் சூதாட்டம்: இடைத்தரகர் அனில் ஜெய்சிங்கானி கைது
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், இடைத்தரகர் அனில் ஜெய்சிங்கானியை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
கோட்டை முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ ஏப்.11-ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டிருந்த கோட்டை முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பரிசு கூப்பன் பண மோசடி: சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை
பரிசு கூப்பன் பணம் மோசடியில் பொதுமக்கள் சிக்காமல் இருப்பதற்கு விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பயணிகள் முன்கூட்டியே விமான நிலையம் வர அறிவுறுத்தல்
சென்னை விமான நிலையத்தில் பிரதமர் நரோந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறுகிறது.
நீலகிரிக்கு பிரதமர் வருகை: ஹெலிகாப்டர் ஒத்திகை
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு பிரதமர் வருவதையொட்டி, மசின குடியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தில் ராணுவ ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகை பார்க்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
'ஆப்கன் வெளியேற்ற குளறுபடிக்கு டிரம்ப் காரணம்'
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் கடந்த 2021-ஆம் ஆண்டில் வெளியேறியபோது ஏற்பட்ட குளறுபடிகளுக்கு, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்தான் காரணம் என்று இப்போதைய அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.
ஹைதராபாதை வென்றது லக்னௌ
ஐபிஎல் போட்டியின் 10ஆட்டத்தில் -ஆவது லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் 5 விக் கெட்டுகள் வித்தியாசத்தில் ரைசர்ஸ் ஹைதராபாதை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
நாட்டில் வாரிசு அரசியலுக்கு ஆபத்து: அமித் ஷா
'நாட்டில் ஜனநாயகம் ஆபத்தில் இல்லை; வாரிசு அரசியல்தான் ஆபத்தில் இருக்கிறது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூ றினார்.