CATEGORIES
فئات
1-9 வகுப்பு இறுதித் தேர்வுகளை ஏப். 28-க்குள் முடிக்க அறிவுறுத்தல்
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வுகளை ஏப்.28-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை
சென்னை-கோவை 'வந்தே பாரத்' ரயில், புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
உ டக்ரைன்: அமைதிப் பேச்சை தொடங்க சீன அதிபர் வலியுறுத்தல்
ரஷிய - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமைதிப் பேச்சு வார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் வியாழக்கிழமை வலியுறுத்தினார்.
பெங்களூரு படுதோல்வி: கொல்கத்தா முதல் வெற்றி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
காங்கிரஸுக்கு தலைவர் ராகுல்; கார்கே அல்ல!
'காங்கிரஸ் கட்சியை இன்னும் ராகுல் காந்தி தான் ரிமோட் மூலம் இயக்கி வருகிறார்; அக்கட்சிக்கு ராகுல்தான் தலைவர், மல்லிகார்ஜுன கார்கே அல்ல' என்று முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டினார்.
ரூ.33 கோடியில் 100 நேரடி கொள்முதல் நிலையங்கள்
விவசாயிகளின் நலனுக்காக ரூ.33 கோடியில் 100 நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அறிவித்தார்.
தமிழ்நாடு வான்வழி இணைப்புத் திட்டத்துக்கான வழிமுறை வகுக்கப்படும்
தமிழ்நாடு வான்வழி இணைப்புத் திட்டத்துக்கான வழிமுறை வகுக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
காசநோய் ஒழிப்பில் தமிழகத்துக்கு மத்திய அரசின் பதக்கம் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு முதல்வர் வாழ்த்து
காசநோய் இல்லாத நிலையை நீலகிரி மாவட்டம் எட்டியதற்காக மத்திய அரசு சார்பில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட பதக்கத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்து மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை வாழ்த்து பெற்றனர்.
சட்ட வரையறையை ஆளுநர் மீறிவிட்டார் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
நிர்வாக ரீதியான விஷயங்களை மாணவர்கள் மத்தியில் பேசி, அரசியல் சட்ட வரையறைகளை மீறி ஆளுநர் செயல்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மசோதா நிலுவை நிராகரிப்பு என பொருள் - ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாவைப் பொருத்தவரை அதை ஆளுநர் நிறுத்திவைத்தால் கூடங்குளம் நாகரிகமாக நிராகரிப்பதாக பொருள் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
ஐசிசி தரவரிசை: ஷுப்மன் கில் அதிரடி முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அதிரடி வீரர் ஷுப்மன் கில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ட்விட்டர் லோகோ மாற்றம்: நீலக்குருவியிலிருந்து நாய்!
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் சின்னமான (லோகோ) நீலக்குருவிக்கு பதில் நாய் படம் மாற்றப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு 242-ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் புதிதாக கரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 242-ஆக புதன்கிழமை அதிகரித்துள்ளது.
நெசவாளர்களுக்கு மின்கட்டண சலுகை வழங்க ரூ. 5 கோடி ஒப்புதல்
கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு ரூ. 4.93 கோடி மானியம் வழங்க அரசுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: இன்று தொடக்கம்
தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வியாழக்கிழமை முதல் தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் மேலும் 4 நாள்கள் மழைக்கு வாய்ப்பு
காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை முதல் சனிக்கிழமை (ஏப்.8) வரை 4 நாள்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிர்ஜிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
ஏஎஃப்சி மகளிர் ஒலிம்பிக் தகுதிச் சுற்று கால்பந்து போட்டியில் கிர்ஜிஸ்தானை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.
கேரள ரயிலில் தீ: சிறப்புக் குழு விசாரணை
கேரளத்தில் ரயிலில் பயணிகளுக்கு மர்ம நபர் தீவைத்த சம்பவம் தொடர்பாக சிறப்புக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்
ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட ஆசிய பணக்காரர்கள் பட்டியல் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3%: உலக வங்கி கணிப்பு
நிகழ் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று கடந்த டிசம்பரில் மதிப்பிட்டிருந்த உலக வங்கி, அதனை 6.3 சதவீதமாக குறைத்துள்ளது.
ராகுல் பதவி பறிப்பு: பிரதமருக்கு அஞ்சலட்டைகள் அனுப்பும் இயக்கம் தொடக்கம்
ராகுல்காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் சார்பில் பிரதமருக்கு அஞ்சலட்டைகள் அனுப்பும் இயக்கத்தை அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
கரோனா சிகிச்சையில் 1.086 பேர்!
தமிழகத்தில் தற்போது 1,086 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
ஐபிஎல் ரசிகர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கம்
ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை விமான நிலையத்துடன் 2 தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் 2,000 பேருக்கு வேலைவாய்பு
சென்னை விமான நிலையத்துடன் 2 தனியார் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன.
இணையவழி சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார்
சட்டப்பேரவையில்2-ஆவதுமுறையாக நிறைவேற்றி அனுப்பிய இணைய வழி சூதாட்ட மசோதாவுக்கு தடை ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை (ஏப்.7) வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
நேரடி வரி வசூல் ரூ.16.61 லட்சம் கோடி: 17.63% அதிகரிப்பு
கடந்தநிதியாண்டில் ரூ.16.61 லட்சம் கோடி நேரடி வரி வசூலாகியுள்ளது.
சிசோடியாவின் நீதிமன்றக் காவல் ஏப்.17 வரை நீட்டிப்பு
கலால் கொள்கை வழக்கில் கைதான முன்னாள் தில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 17-ஆம் தேதி வரை தில்லி சிறப்பு நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
ராகுலுக்கு ஜாமீன்
'மோடி' என்ற பின்னொட்டுப் பெயரைக் கொண்டவர்களை அவமதித்ததாகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
பி.வி. சிந்துவுக்கு இரண்டாம் இடம்
ஸ்பெயினின் மாட்ரிட் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்துவுக்கு இரண்டாம் கிடைத்தது.