![கணிப்புகளைக் கணித்தல்! கணிப்புகளைக் கணித்தல்!](https://cdn.magzter.com/1368717660/1707186506/articles/FAHZpMBCz1707908901313/1707908988060.jpg)
‘8250 பேரிடம் கருத்துக்கணிப்பை நடத்த ஒரு கோடி ரூபாய் வரையில் செலவாகியுள்ளது. இவ்வளவு பெரிய தொகை அந்த தொ.கா.வுக்கு கொடுத்தது யார்.. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? தி.மு.க.வின் பொய் பிரசாரத்தில் அந்த தொ.கா.வும் ஓர் அங்கமா?' என சரமாரியான கேள்விகளை எழுப்பியிருந்தது. பாட்டாளி மக்கள் கட்சி. கருத்துக் கணிப்புகளைக் கண்டு அரசியல் கட்சிகள் மிரளுவதற்கு இந்தச் சம்பவம், ஒரு சோறு பதம்.
- இந்தியாவில் ஜனநாயகத் திருவிழாவாக தேர்தல் பார்க்கப்படுகிறது. தேர்தல் காலம் வந்துவிட்டாலே கருத்துக்கணிப்புகளுக்கு கால் முளைத்துவிடுகிறது. இந்தியாவில் 1957 - ல் இரண்டாவது பொதுத்தேர்தல் நடந்தபோது டி காஸ்டா என்பவர் நடத்தியதுதான் நம் நாட்டைப் பொறுத்தவரை முதல் தேர்தல் கருத்துக்கணிப்பு.
அந்த கணிப்பின் முடிவுகள் சரியாகவே அமைந்திருந்தன. இதைத் தொடர்ந்து தேர்தல் கருத்துக்கணிப்புகள் அணிவகுக்கத் தொடங்கின. ஆனால், இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு 1980ம் ஆண்டு பொதுத் தேர்தலில் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கவனம் ஈர்த்தன. பிரனாய் ராய், அசோக் லகிரி, டேவிட் பட்லர் ஆகியோர் எடுத்த கருத்துக்கணிப்புகள் பெரிதும் கவனிக்கப்பட்டன. 1996ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போதுதான் தொலைக்காட்சிகளில் கருத்துக் கணிப்புகள் பிரதான இடம் பிடித்தன.
இதன் தொடர்ச்சியாக, கருத்துக்கணிப்புகளை மேற்கொள்வதற்காக பல தனியார் நிறுவனங்கள் உருவாயின. இந்த நிறுவனங்களோடு ஊடக நிறுவனங்களும் இணைந்து கருத்துக்கணிப்புகளில் ஆர்வம் செலுத்தின. சர்வே ஏஜென்சிகளுக்கு செலவு செய்ய முடியாத பத்திரிகை நிறுவனங்கள், தங்கள் நிறுவன ஊழியர்களை வைத்து கருத்துக்கணிப்புகளை மேற்கொண்டன.
ஒருவேளை கருத்துக்கணிப்பு முடிவுகள் காலை வாரினாலும், ‘யாருக்கு வெற்றி?' என வாசகர்களிடம் போட்டி வைத்து, அதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு பரிசுகளை வாரி வழங்கின. தற்போது சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால், யூட்யூபர்களும் தங்கள் பங்குக்கு கருத்துக்கணிப்புகளில் ஆர்வம் காட்டுகின்றனர். எப்படிப் பார்த்தாலும் ‘யார் மனசுல யாரு' என்ற ஆர்வத்தை வெளிக்கொண்டு வருவது, தேர்தல் சித்து விளையாட்டுகளின் ஓர் அங்கம். தேர்தல் பந்தயத்தில் அரசியல் கட்சிகளுக்கும் இது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
هذه القصة مأخوذة من طبعة FEB 24 من Andhimazhai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة FEB 24 من Andhimazhai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
![வாகை சூடிய வாழை! வாகை சூடிய வாழை!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/raacEgckn1725368257163/1725368402816.jpg)
வாகை சூடிய வாழை!
இந்த மாதம் செப்டம்பர் -விஜய் நடிக்கும் GOAT வெளியாவதாலோ என்னமோ ஆகஸ்ட்டில் சிலபல முக்கிய படங்கள் வரிசைகட்டி வந்தன.
!["தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி "தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/d5gs2IZuy1725367950559/1725368233497.jpg)
"தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி
\"பள்ளி நாட்கள்ல கலை மீது கொஞ்சம் கூட நாட்டமில்லாத, என்னை கிரிக்கெட் வெறியன் நான். கிரிக்கெட் மைதானத்திலிருந்து பலவந்தமா தூக்கிட்டுப்போய்தான் பைன்ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்த்தாங்க\" மெல்லிய புன்னகையுடன் பேசத்த தொடங்குகிறார் எஸ்.எஸ். மூர்த்தி. ‘தங்கலான்' படத்தின் தங்க ஆர்ட் டைரக்டர்.
![சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே! சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/49VeugPIm1725367691900/1725367872300.jpg)
சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே!
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5 அன்று பெரும்பாலான ஊடகங்களில் ஒளி, ஒலியுமாக நமக்குக் கடத்தப்படும் செய்தி 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' பற்றியதே! ஐக்கிய நாடுகளின் பொது அவை, ஜூன் ஐந்தாம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக 1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டில் அறிவித்தது.
![புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள் புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/aaoxDFZjL1725367447328/1725367579028.jpg)
புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள்
புவியின் 460 கோடி ஆண்டுகள் நீண்ட வரலாற்றில் உயிர்களின் வரலாறு 350 கோடி ஆண்டுகள் நீளமுடையது. அந்த நீளத்தின் இறுதி 50 லட்சம் ஆண்டுகளிலேயே மனித மூதாதையர் தோன்றி எழுச்சி பெற்றனர்.
![கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும் கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/dnLD99VfU1725367256802/1725367416455.jpg)
கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும்
இந்திய மக்களுக்கு 2004 ஆம் ஆண்டு ஒரு புதிய சொல் அறிமுகமானது- சுனாமி.
![வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்! வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/Qb-yDT7za1725367090237/1725367239520.jpg)
வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்!
வசதி, வளர்ச்சி எனும் ராட்சஸனின் ரத்த தாகம் தீர்க்க வயநாட்டில் உள்ள ஏழை எளியோரின் ரத்தம் இன்னும் எவ்வளவு தேவைப்படும் என்பது தான் முண்டக்கை வெள்ள நிலச்சரிவு எழுப்பும் வேதனையான கேள்வி. முண்டக்கையில் நடந்தது இயற்கையின் வன்முறை.
![அவன் மாதிரி ஒருத்தன் அவன் மாதிரி ஒருத்தன்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/7dEqdJpEg1725366882072/1725367057776.jpg)
அவன் மாதிரி ஒருத்தன்
கெவினிடம் மழைக் கோட்டு இல்லாததால் அவன் அதை அவன் மாட்டியிருந்த அணியவில்லை.
![அவர் கொடுத்த விலை மிக அதிகம்! அவர் கொடுத்த விலை மிக அதிகம்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/sLjWkrMQR1725366649818/1725366865709.jpg)
அவர் கொடுத்த விலை மிக அதிகம்!
அது அச்சுத்தொழிலில் இவ்வளவு கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத காலம். தமிழ்நாட்டில் தனி ஈழப்போராட்டத்துக்குப் பெரும் ஆதரவிருந்த நேரம்.
![அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல் அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/8GqlyYX7d1725366437188/1725366634658.jpg)
அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல்
மறைந்த அந்திமழை இளங்கோவன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 17 அன்று சென்னை, தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் நடைபெற்றது. அதில் திரளான எழுத்தாளர்களும் நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர்.
![தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா? தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா?](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/gmzkuPbMM1725366270279/1725366409865.jpg)
தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா?
'தங்கலான் கதையே புரியவில்லை. இது ஒரு கட்டுக்கதை. வரலாற்றுத் திரிப்பு. இது சாதியத்தை தூக்கிப்பிடிக்கிறது.