செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்த தக்னி முஸ்லிம் மதப்பிரிவைச் சேர்ந்தவர்கள் முகமது அப்துர் ரஹ்மான் - மும்தாஜ் பேகம் தம்பதி. அப்துர் ரஹ்மான், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றியவர்.
இந்த தம்பதிக்கு நான்கு மகள்கள். இவர்களில் கடைக்குட்டிதான் வஹீதா ரஹ்மான். 1938 பிப்ரவரி 3 அன்று பிறந்தார். சிறு வயதாக இருக்கும் போதே, இவரும் இவரது சகோதரிகளும் சென்னையில் பரத நாட்டியம் பயின்றனர்.
இப்படி நாட்டியம் பயின்றாலும் உண்மையில் வஹீதாவுக்கு மருத்துவராக வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், காலம் இவரை நடிகையாக அழகு பார்த்தது.குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வஹீதா வாழ்ந்து வந்தபோது ஒருநாள் இடி இறங்கியது.
ஆம். வஹீதாவின் இளமைக் காலத்திலேயே அவரது தந்தை அப்துர் ரஹ்மான் திடீரென்று காலமானார். விளைவு, குடும்பம் நிலைகுலைந்தது. அம்மாவின் உடல்நிலை சரியில்லாமல் போனது. போதும் போதாததற்கு குடும்பத்தின் பொருளாதார நிலையும் கவலைக்கிடமானது.
இச்சூழலில் தனது கனவான மருத்துவர் ஆசையை மூட்டை கட்டி வைத்துவிட்டு, கற்றுக்கொண்ட பரதம் துணையுடன் சினிமாவில் நடனக் கலைஞராக நுழைந்தார் வஹீதா ரஹ்மான்.
1955ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஜெய்சிம்மா’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதே ஆண்டு தெலுங்கில் வெளியான அக்கினேனி நாகேஸ்வர ராவின் ‘ரோஜுலு மாராயி’ (Rojulu Marayi) படத்தில் ஒரு நாட்டுப்புற பாடலில் மட்டும் நடனமாடினார். தொடர்ந்து தமிழில் எம்ஜிஆர், பி. பானுமதி நடிப்பில் வெளியான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ (1956) திரைப்படத்திலும் நடித்தார்.
இக்காலத்தில்தான் தற்செயலாக, இந்தி திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான குருதத் பார்வையில் வஹீதா விழுந்தார்.அதன்பிறகு இவரது வாழ்க்கை, இவரே எதிர்பார்க்காத அளவுக்கு மாறியது.உண்மையில் இதற்காக ஒரு எருமை மாட்டுக்குத்தான் வஹீதா நன்றி சொல்ல வேண்டும்!ஆம். குருதத் வாழ்க்கையில் ஒரு எருமை மாடு குறுக்கிட்டதன் வாயிலாகத்தான், அவர் வஹீதா ரஹ்மானைக் கண்டடைந்தார்.
هذه القصة مأخوذة من طبعة 13-10-2023 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة 13-10-2023 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!