![தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும் தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்](https://cdn.magzter.com/1711436984/1730768143/articles/BNMgsgguW1730783284371/1730783740417.jpg)
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.85 கோடி செலவில் முதல்வர் படைப்பகம், ரூ.80.90 லட்சம் செலவில் 3 பல்நோக்கு மைய கட்டிடங்கள் ஆகியவற்றை முதல்வர் நேற்று திறந்து வைத்தார். அத்துடன் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 77 மின்மாற்றி தடுப்புகள் அமைக்கும் பணி, ரூ.43 லட்சம் செலவில் மகளிர் உடற்பயிற்சி கூடம், ரூ.38.50 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் ஆகிய பணிகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும் ஜி.கே.எம். காலனியில் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் குளம் சீரமைக்கப்படும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த 107 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள், 350 மகளிருக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் சான்றிதழ்களையும், கலைஞர் இலவச கண் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்ற 2493 நபர்களுக்கு மூக்கு கண்ணாடிகளையும் வழங்கினார்.
அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: எவ்வளவு நெருக்கடியான வேலைகள் இருந்தாலும், பல்வேறு அரசு வேலையாக இருந்தாலும், கட்சி வேலைகளாக இருந்தாலும் அதற்கிடையில் கொளத்தூருக்கு வந்தால் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுவிடும். அதிலும் கொளத்தூருக்கு மட்டுமல்ல, அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் நிகழ்ச்சி என்று சொன்னால், அதைவிட அதிகமான உற்சாகம் வந்துவிடுகிறது. அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் படிக்கும் மாணவ, மாணவிகளை பார்க்கும்போது எனக்கு தானாக உத்வேகம் வந்துவிடும். அந்த உத்வேகத்தை பெறுவதற்காக நான் அடிக்கடி இங்கு வருவதுண்டு.
கடந்த 2017ம் ஆண்டு தங்கை அனிதா தற்கொலை செய்துகொண்டபோது, நாம் எல்லோரும் தாங்க முடியாத சோகத்திற்கும் பெரிய வேதனைக்கும் ஆளாகினோம். நீட் தேர்வு அவரின் கனவை சிதைத்து – அவரின் உயிரை பறித்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவ கல்வி கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் இன்று வரையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலுக்கு நிச்சயம் ஒருநாள் ஒன்றிய அரசு பணியத்தான் போகிறது.
هذه القصة مأخوذة من طبعة November 05, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 05, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
![திருவொற்றியூர் பகுதியில் மின் புதைவட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் வாரியத்தில் மனு திருவொற்றியூர் பகுதியில் மின் புதைவட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் வாரியத்தில் மனு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/BF3Uc5jZY1739772170097/1739772289925.jpg)
திருவொற்றியூர் பகுதியில் மின் புதைவட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் வாரியத்தில் மனு
திருவொற்றியூர், மணலி பகுதிகளில் மின் கம்பிகளை புதைவடமாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் மின் கம்பிகள் புதைவடமாக மாற்றப்பட்டுள்ளது.
பாமாயில் விலை உயர்வு
விருதுநகர் மார்க்கெட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, பாமாயில் கடந்த வாரம் ரூ.2,130க்கு விற்கப்பட்டது.
![மீண்டும் மொழிப்போரை உருவாக்க வேண்டாம் வேல்முருகன் எச்சரிக்கை மீண்டும் மொழிப்போரை உருவாக்க வேண்டாம் வேல்முருகன் எச்சரிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/-y3OhSx6F1739770918825/1739770946543.jpg)
மீண்டும் மொழிப்போரை உருவாக்க வேண்டாம் வேல்முருகன் எச்சரிக்கை
திருச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மும்மொழி கொள்கை மோசடி, ஏமாற்றும் கொள்கை. தாய்மொழி கொள்கை தான் உலகத்தில் தலை சிறந்த கொள்கை.
பட்டியல் சமூக மாணவியை காலில் விழ வைத்து கொடுமை
கோவில்பட்டியில் மாணவியை சக மாணவி காலில் விழ வைத்த தனியார் கல்வி நிறுவன கண்காணிப்பாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஓ காட் பியூட்டிஃபுல் டைட்டில் டீசர் ரிலீஸ்
பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் தயாரித்து இருக்கும் படம், ‘ஓ காட் பியூட்டிஃபுல்’.
![புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காதது வரவேற்கத்தக்கது வரியை வாங்கிட்டு நிதி கொடுக்க மறுப்பதா? - ஒன்றிய அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காதது வரவேற்கத்தக்கது வரியை வாங்கிட்டு நிதி கொடுக்க மறுப்பதா? - ஒன்றிய அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/iGI6kOxpH1739770946913/1739770999397.jpg)
புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காதது வரவேற்கத்தக்கது வரியை வாங்கிட்டு நிதி கொடுக்க மறுப்பதா? - ஒன்றிய அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி
நாம் தமிழர் கட்சியின் ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று அவிநாசியில் நடைபெற்றது.
![விலங்குகள் பாதுகாப்பு குறித்து செல்லப்பிராணியுடன் நாடு முழுவதும் பாதயாத்திரை பெங்களூரு வாலிபருக்கு குவியும் பாராட்டு விலங்குகள் பாதுகாப்பு குறித்து செல்லப்பிராணியுடன் நாடு முழுவதும் பாதயாத்திரை பெங்களூரு வாலிபருக்கு குவியும் பாராட்டு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/Hdc6FaK5U1739772488764/1739772530968.jpg)
விலங்குகள் பாதுகாப்பு குறித்து செல்லப்பிராணியுடன் நாடு முழுவதும் பாதயாத்திரை பெங்களூரு வாலிபருக்கு குவியும் பாராட்டு
கர்நாடக மாநிலம் பெருங்களூருவைச் சேர்ந்தவர் சுமன் அஸ்வின் (22). இவர், 3ம் ஆண்டு பொறியியல் பட்டய கல்வி படித்து வருகிறார்.
திருவள்ளூர் அடுத்த தொழுவூரில் இலவச மருத்துவ முகாம்
திருவள்ளூரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த தொழுநோயாளிகளுக்கு கால் புண்ணுக்கு சிகிச்சை அளித்ததுடன், 40 பேருக்கு கட்டு கட்டும் வகையில் சுய பாதுகாப்பு மருந்து பெட்டகமும் வழங்கப்பட்டன.
![துபாய் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லை தந்தை - மகன் பலி துபாய் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லை தந்தை - மகன் பலி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/kFJ0F9DTn1739773072916/1739773119643.jpg)
துபாய் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லை தந்தை - மகன் பலி
துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லையைச் சேர்ந்த தந்தை – மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நிதி கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்பதா? தமிழ்நாட்டை சீண்டுவது தீயை தீண்டுவதற்கு சமம் - ஒன்றிய அரசுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை
நிதி உரிமையை கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்பதா? என்றும், தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம் என்றும் ஒன்றிய அரசை உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.