தமிழகத்தின் புதிய நிதியமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதியமைச்சர் ஏற்கெனவே பொறுப்பு வகித்த பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில் நுட்பத் துறை வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மனோதங்கராஜுக்கு பால் வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக அமைச்சரவையில் இடம்பெற்றடி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
பால்வளத் துறை அமைச்சராக இருந்த ஆவடி சா.மு.நாசர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக டி.ஆர்.பி.ராஜா சேர்க்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை கடந்த 9-ஆம் தேதி வெளியிட்டது.
இந்நிலையில், அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவியேற்கும் விழா ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. டி.ஆர்.பி.ராஜா வுக்கு பதவிப் பிரமாணத்தையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார்.
முன்னதாக, ஆளுநருக்கு டி.ஆர்.பி.ராஜாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். 8 நிமிஷங்களில் பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவடைந்தது. தொடர்ந்து, புதிய ஆளுநர், முதல்வர், அமைச்சராகப் பொறுப் பேற்ற டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பரஸ்பரம் பூங்கொத்துகளை வழங்கி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
هذه القصة مأخوذة من طبعة May 12, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة May 12, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நட்பு நாடுகளின் அழைப்பை நிராகரித்தது இஸ்ரேல்
ஹிஸ்புல்லாக்களுடன் சண்டை நிறுத்தம்
சண்டிமல் சதம்: இலங்கை - 306/3
வீரர்களுடன் கலந்துரையாடல்
வங்கதேச டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
கான்பூரில் இன்று 2-ஆவது ஆட்டம் தொடக்கம்
மார்க்சிஸ்ட் தலைவர் எம்.எம்.லாரன்ஸ் உடலை ஏற்றுக்கொண்டது களமசேரி மருத்துவக் கல்லூரி
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் எம்.எம்.லாரன்ஸின் உடலை தானம் செய்வது குறித்து எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து, அவரது உடலை கலமசேரி மருத்துவக் கல்லூரி ஏற்க முடிவு செய்து, உடற்கூறியல் துறைக்கு உடலை மாற்றியது.
எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி
கடந்த 10 ஆண்டுகளில் எதிா்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த மோடி
ஹரியாணா பிரசாரத்தில் ராகுல்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் எழாது
‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் புதைக்கப்பட்டு விட்டது, அது மீண்டும் எழப்போவதில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை தொடர் ஆய்வு செய்ய வேண்டும்
தமிழகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிலுள்ள மருத்துவமனை மற்றும் பிற முக்கிய கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.
குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்
‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’, மதங்களைக் கடந்து அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.