
தனது கட்சியின் உண்மையான பலத்தை அறிவதற்காக 2026 சட்டசபைத் தேர்தலில் விஜய் கட்சி தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்ற அறிவிப்பு வெளிவரக் காரணம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அதைத் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்தார். கட்சியின் கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது.
அக்டோபர் 27-ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் முதலாவது மாநாட்டையும் விஜய் நடத்தினார். அதில் முக்கிய அறிவிப்புகளையும், கொள்கைகளையும் வெளியிட்டார்.
திராவிடமும், தமிழ்த்தேசியமும் இரு கண்கள் எனக் குறிப்பிட்டார். ஒரு சில தலைவர்களைப் போல வீர வசனம் பேசாமல் செயலில் காட்டுவேன் எனவும் தெரிவித்தார்.
தனது கொள்கை எதிரி பா.ஜ.க. என்றும், அரசியல் எதிரி தி.மு.க. என்றும் வெளிப்படுத்தினார். அத்துடன் 2026 சட்டசபைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று தெரிவித்த அவர், கடைசி நேரத்தில் யாராவது கூட்டணிக்கு வந்தால் அவர்களுக்கும் ஆட்சியில் பங்களிக்கப்படும் என்றும் கூறினார்.
هذه القصة مأخوذة من طبعة November 19, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 19, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்சுக் மு.க.ஸ்டாலின் பாராட்டு!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார்.
சென்னையில் 3 மண்டலங்களில் மார்ச் 21 முதல் 26 வரை குடிநீர் நிறுத்தம்!
கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணி!!
சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தோறும் பழைய வழக்குகள் விசாரணை!
சென்னை உயர்நீதிமன் றத்தில், 20ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமானபலதரப் பட்ட வழக்குகள் நிலுவை யில் உள்ளன. இந்த வழக்கு களைமுடிவுக்குகொண்டுவர சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
விமான பயிற்சியாளர் வீட்டில் 35 சவரன் நகை திருடிய வாலிபர் கைது!
சென்னை சூளைமேடு கில்நகர் முதலாவது தெருவில் வசித்து வருபவர் வெங்கட சுப்பிரமணியம் (வயது 40).

குஜராத் அடுக்குமாடி வீட்டில் ரூ.100 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்!
ரூ.1.37 கோடி மதிப்பிலான உயர் ரகக் கடிகாரங்களும் சிக்கின!!
சென்னையில் ஏ.சி. பஸ்களில் செல்ல ரூ. 2000 பாஸ் அறிமுகம்!
சென்னையில் ஏ.சி. பஸ்களிலும் செல்லும் வகையில் ரூ.2000 மதிப்புள்ள மாதாந்திர பயண அட்டையை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்தார்.

விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக பிரித்துக் கொடுக்க அனுமதிக்க முடியாது!
விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக பிரித்துக் கொடுக்க அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் பி. மூர்த்தி கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் பிறந்தநாள்விழா!
சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் பிறந்த நாள் விழா கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

விண்ணில் நீண்ட நாள் தவித்த சுனிதாவில்லியம்ஸ் பூமிக்குதிரும்பினார்.
அவருடன் மேலும் 3 வீரர்களும் வந்தனர்; அனைவரும் நலமுடன் இருப்பதாக நாசா தகவல்!!

தாம்பரத்தில் பயங்கரம்: தி.மு.க. தொழிற்சங்கத் தலைவர் காரில் கடத்திக் கொலை!
நில ஆக்கிரமிப்பு கும்பல் வெறிச்செயல்; பிணத்தை செஞ்சிக்கு அருகே புதைத்தனர்!!