2010 ஒருமுறை இல், கல்வி உரிமைக்கான ஐக்கிய நாடுகளின் (UN) அப்போதைய சிறப்பு அறிக்கையாளர், தனது பொதுச் சபைக்கான அறிக்கையில், 'பாலியல் கல்வியானது பன்முகத்தன்மைக்கான சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெனில் பாலீர்ப்பு அல்லது பால்நிலை அடையாளத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படாமல் ஒவ்வொருவருக்கும் அவரவர் பாலுணர்வைக் கையாள உரிமை உண்டு. பாலியல் கல்வியானது பலதரப்பட்ட பாலீர்ப்புகளைக் கொண்டவர்களுக்கு எதிரான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அடிப்படைக் கருவியாகும்' என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். உண்மையில், இலங்கையில் உள்ள தன்பாலீர்ப்பு பெண்கள், தன்பாலீர்ப்புள்ள ஆண்கள், இருபாலீர்ப்புள்ளோர் மற்றும் திருநர் (LGBT) மாணவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள் அடிப்படையில் அனைத்து மாணவர்களுக்குமான பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கு விரிவான பாலினக் கல்வியானது, பாலீர்ப்பு மற்றும் பால்நிலை அடையாளம் மற்றும் வெளிப்பாடு (SOGIE) பற்றிய கற்றலையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.
உலகெங்கிலும் உள்ள LGBT மாணவர்கள் தங்களுடைய இளம்பருவ வயதில் பள்ளியில் வழக்கமாகவே பாகுபாடு, கொடுமைப்படுத்துதல், துன்புறுத்தல், வன்முறை மற்றும் பிற வகையான துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டுவருகின்றனர். இலங்கையில் உள்ள பெரும்பான்மையான LGBT நபர்கள், தங்களைவிட இளைய மற்றும் மூத்த மாணவர்களினூடாக தாங்கள் அனுபவித்த பாலியல் வன்முறை சம்பவங்கள் உட்பட பல துஷ்பிரயோகங்களை மறக்காமல் நன்கு நினைவில் வைத்து பேசுகின்றனர். LGBT மாணவர்களுக்கு எதிரான இத்தகைய கொடுமைப்படுத்துதல், துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றின் பரவுகையானது அத்தகைய செயல்களை விரைவாக அடையாளம் காணவும் தடுக்கவும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களினுடைய அதிகாரிகளின் தரப்பிலிருந்து உடனடி நடவடிக்கையை அவசியப்படுத்துகிறது. ஆனால் அதற்கு மாறாக, அத்தகைய கல்வி நிறுவனங்களில் பொதுவாக நடப்பது யாதெனில், ஏற்கெனவே ஆபத்தில் உள்ள LGBT மாணவர்களை மேலும் துன்புறுத்தமளவிற்கு ஏனைய மாணவர்கள் தூண்டப்படுகிறார்கள்.
هذه القصة مأخوذة من طبعة August 15, 2023 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة August 15, 2023 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
“வாய்ப்பை பெண்களுக்கு வழங்கவும்”
பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை பெண்களுக்கு வழங்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கஃபே அமைப்பு கேட்டுக்கொள்கிறது.
தென்னாபிரிக்காவை வென்றது அயர்லாந்து
தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் திங்கட்கிழமை (07) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அயர்லாந்து வென்றது.
ஜனாதிபதித் தேர்தலில் கையிஸ் சையத் வெற்றி
வடக்கு ஆபிரிக்க நாடான துனீஷியாவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கையிஸ் சையத் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இன்று இரண்டாவது போட்டி: இந்தியாவுக்கு சவர்லளிக்குமா பங்களாதேஷ்?
இந்திய, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியானது டெல்லியில் புதன்கிழமை (09) 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் மீண்டும் மிரட்டல்
கொரியயாவில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இங்கிலாந்து இந்திய, பங்களாதேஷ்
அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியானது டெல்லியில் புதன்கிழமை (09) 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் எச்.ஐ.வி அதிகரிப்பு
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இவ்வருடம் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்களின் துரித அதிகரிப்பு குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
2028 இல் கடனை அடைக்க வேண்டுமானால் “அரசியல் ஸ்திரத்தன்மை வேண்டும்”
2028ஆம் ஆண்டிற்கான கடனை அடைப்பதற்கு எமது நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைய வேண்டும். அந்நிய நேரடி முதலீடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும். இங்கு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையும் அரசியல் ஸ்திரத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும். புதிய முதலீடுகளுக்கு இங்குக் காணப்படும் சம்பிரதாய சட்ட திட்டங்கள் மாற்றியமைக்கப் பட வேண்டும்.
சட்டத்தரணிக்கு எட்டு வருட கடூழிய சிறை
காணி உறுதிகளை தயாரித்து மோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்ட சட்டத்தரணி ஒருவரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே, அவருக்கு செவ்வாய்க்கிழமை (08) அன்று 08 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
“மாயமான பக்கங்கள் குறித்து விசாரணை”
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பக்கங்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத், தெரிவித்துள்ளார்.