ஜனாதிபதியை தெரிவு செய்ய “வாய்ப்பு கிட்டியது”
Tamil Mirror|August 15, 2024
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பாடுபட்டதன் மூலம் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு இந்நாட்டு மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதியை தெரிவு செய்ய “வாய்ப்பு கிட்டியது”

அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து பாதுகாப்பு தரப்பு உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

அத்துடன், சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தி நாட்டில் சுதந்திரமான தேர்தலுக்கு ஒத்துழைப்பது ஜனாதிபதி என்ற வகையில் தனதும் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகிய தரப்பினரதும் பொறுப்பு என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஸ்ரீ ஜெயவர்தனபுர விசேட அதிரடிப் படை நடவடிக்கை மையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் செவ்வாய்க்கிழமை (13) கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டில் எந்த வகையிலும் வன்முறைகளுக்கும் இடமளிக்கக் கூடாது என வலியுறுத்திய ஜனாதிபதி, அது தொடர்பில் அனைவரும் பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொண்டார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர விசேட நடவடிக்கை மையத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கெளரவமாக வரவேற்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போதைப்பொருள் ஒழிப்புக்காக தற்போதுள்ள அனைத்து பொலிஸ், இராணுவ மற்றும் சிவில் நிறுவனங்கனை ஒன்றிணைத்து போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் தனியொரு நிறுவனமாக உருவாக்கி, அதற்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படும்.

பாதாள உலகக் குழுகளுக்கோ அல்லது போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கோ நாட்டை அழிக்க இடமளிக்க முடியாது என வலியுறுத்திய ஜனாதிபதி, இலங்கையில் பாதாள உலக செயற்பாடுகளுக்கு எதிராக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டு மக்களை சட்டம் ஒழுங்கின் கீழ் வாழ அனுமதிப்பது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனைச் சட்டத்தில் உள்ளடக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, "நாட்டு மக்களை சட்டம் ஒழுங்கின் கீழ் வாழ இடமளிப்பது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதாகும் என்தைக் கூற வேண்டும். அதை சட்டத்தில் சேர்க்கவும் நாம் எதிர்பார்க்கிறோம்.

هذه القصة مأخوذة من طبعة August 15, 2024 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة August 15, 2024 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من TAMIL MIRROR مشاهدة الكل
இராணுவ வீரர்களுக்கு விசேட அறிவிப்பு
Tamil Mirror

இராணுவ வீரர்களுக்கு விசேட அறிவிப்பு

வெளிநாட்டுப் பயிற்சி மற்றும் அமைதி காக்கும் பணிகளை விரைவு படுத்துவதற்காக, இராணுவ மேஜர் பதவிக்கு கீழே உள்ள அனைத்து வீரர்களின் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை அந்தந்த புந்த படைப் பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு இராணுவத் தலைமையகம் அனைத்து படைப்பிரிவு கட்டளை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
February 17, 2025
“கல்வித் தகைமை பிரச்சினை அல்ல"
Tamil Mirror

“கல்வித் தகைமை பிரச்சினை அல்ல"

தனது கல்வித் தகுதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்துள்ள முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல, அத்தகைய கோரிக்கைகள் வெறும் அரசியல் தந்திரோபாயங்கள் என்று கூறியுள்ளார்.

time-read
1 min  |
February 17, 2025
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் - கன்னி பாதீடு இன்று
Tamil Mirror

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் - கன்னி பாதீடு இன்று

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் குறித்த குழுநிலை விவாதம் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 4 சனிக்கிழமை நாட்கள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளன

time-read
1 min  |
February 17, 2025
பாதிக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை
Tamil Mirror

பாதிக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை

உங்களுக்காகக் கட்டப்படும் வீடுகளுக்கு நீங்களும் உதவி செய்ய வேண்டும்

time-read
1 min  |
February 17, 2025
நாட்டின் பொருளாதார உற்பத்திக்கு பாரிய சிக்கல்
Tamil Mirror

நாட்டின் பொருளாதார உற்பத்திக்கு பாரிய சிக்கல்

நாட்டிலுள்ள திறமையான தொழிலாளர்கள் வெளியேறுவதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 17, 2025
அனைத்தும் எதிரணியின் பிரசாரம்
Tamil Mirror

அனைத்தும் எதிரணியின் பிரசாரம்

நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டமை தொடர்பாக பல விமர்சனங்கள் தெரிவிக்கிப்படுகின்றன.

time-read
1 min  |
February 17, 2025
"தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சிகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை”
Tamil Mirror

"தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சிகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை”

உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 17, 2025
சுமந்திரன், சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு
Tamil Mirror

சுமந்திரன், சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு

அம்பாறை - பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (16) பொதுமக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு சென்ற ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
February 17, 2025
IMF வுடன் இன்று பேச்சு
Tamil Mirror

IMF வுடன் இன்று பேச்சு

நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கைக்கு கிடைக்கும்

time-read
1 min  |
February 17, 2025
இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டம்
Tamil Mirror

இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில், இன்று திங்கட்கிழமை (17) காலை, ஜனாதிபதி செயலகத்தில் விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.

time-read
1 min  |
February 17, 2025