

Dinamani Chennai - March 05, 2025

Magzter GOLDで読み放題を利用する
1 回の購読で Dinamani Chennai と 9,000 およびその他の雑誌や新聞を読むことができます カタログを見る
1 ヶ月 $14.99
1 年$149.99
$12/ヶ月
のみ購読する Dinamani Chennai
1年$356.40 $23.99
この号を購入 $0.99
この問題で
March 05, 2025
உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் நிறுத்திவைப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு

2 mins
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 4 நிரந்தர நீதிபதிகள் நியமனம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் நால்வர் நிரந்தர நீதிபதிகளாக செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டனர்.
1 min
ரயில்வே தேர்வில் முறைகேடு: 26 அதிகாரிகள் கைது
சிபிஐ நடவடிக்கை
1 min
தொகுதி மறுசீரமைப்பு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, தமிழக அரசின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை (மார்ச் 5) நடைபெறுகிறது.

1 min
அதிமுகவின் ஒரே எதிரி திமுகதான்!
அதிமுகவின் ஒரே எதிரி திமுகதான்; அதை வீழ்த்துவதே எங்களது தலையாய கடமை என்றார் அதிமுக பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி.

1 min
தனியார் மருத்துவமனை மருந்தகங்களில் அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை
தனியார் மருத்துவமனைகளுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் மருந்தகங்களில் வெளிச்சந்தையைவிட அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படும் விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

1 min
ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
ஆவடி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து
ஆவடி பணிமனையில் புதன்கிழமை (மார்ச் 5) நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் அதிகாலை 3.30 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் ஆவடி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
1 min
செயின்ட் கோபைன் ஆலையில் தேசிய பாதுகாப்பு தின விழா
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் செயின்ட் கோபைன் கண்ணாடி ஆலையில் தேசிய பாதுகாப்பு தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min
போக்குவரத்து போலீஸாருக்கு குளிரூட்டும் தலைக்கவசம்
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் போக்குவரத்து போலீஸாருக்கு குளிரூட்டும் தலைக்கவசம், தொப்பி, கண்ணாடிகளை ஆணையர் கி.சங்கர் வழங்கினார்.
1 min
அரசுப் பள்ளி வகுப்பறை மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயம்
வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி வகுப்பறை கட்டடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

1 min
காவலர் குறைதீர் முகாம்: 129 பேர் மனு
சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் துறை ஆணையரகத்தில் செவ்வாய்க்கிழமை காவலர் குறைதீர் முகாம் நடைபெற்றது.
1 min
மக்கள் மருந்தக விழா: சாதனை பெண்களுக்கு விருது
பிரதமரின் மக்கள் மருந்தக திட்டத்தின் வருடாந்திர கொண்டாட்டம் மார்ச் 1 முதல் 7-ஆம் தேதி வரை மக்கள் மருந்தக விழா எனும் பெயரில் நடைபெறும்.
1 min
வார இறுதி நாள்கள்: 677 சிறப்புப் பேருந்துகள்
வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8, 9) 677 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
1 min
ரூ. 21 கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல்
சென்னை ஏற்றுமதி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ரூ. 21 கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என மண்டல ஆணையர் அலெக்ஸ் பால் மேனன் தெரிவித்துள்ளார்.
1 min
சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் புத்தகப் பூங்கா பணிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு செய்து அதனை ஏப்ரல் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
1 min
கிழக்கு கடற்கரைச் சாலையில் சீரான போக்குவரத்துக்கு உயர்நிலைச் சாலை
கிழக்கு கடற்கரைச் சாலையில் சீரான போக்குவரத்தை உறுதிசெய்ய உயர்நிலைச் சாலை அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

1 min
மார்ச் 7-இல் சிஐஎஸ்எஃப் வீரர்களின் சைக்கிள் பேரணி: மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கிறார்
மார்ச் 7-ஆம் தேதி குஜராத் மற்றும் மேற்குவங்க மாநிலங்களிலிருந்து தொடங்கும் சிஐஎஸ்எஃப் சைக்கிள் பேரணியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலத்திலிருந்து காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.

1 min
ஒற்றை நுரையீரலுடன் பிறந்த குழந்தைக்கு நுட்பமான சிகிச்சை
பிறக்கும்போதே ஒற்றை நுரையீரலுடன் பிறந்த குழந்தைக்கு நுட்பமான அறுவைசிகிச்சை மேற்கொண்டு சென்னை எஸ்.ஆர்.எம் குளோபல் மருத்துவமனை மருத்துவர்கள் உயிர் காத்துள்ளனர்.
1 min
மளிகைக் கடையில் பணம் கேட்டு தாக்குதல்: ரவுடி கைது
சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள ஒரு மளிகைக் கடையில் பணம் கேட்டு தாக்குதலில் ஈடுபட்டதாக ரவுடி கைது செய்யப்பட்டார்.
1 min
இளையராஜாவுக்கு செல்வப்பெருந்தகை, தொல்.திருமாவளவன் வாழ்த்து
பிரிட்டன் தலைநகர் லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர்.
1 min
வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
1 min
கரோனா காலத்தில் அதிக வட்டி வசூல்: புகாரை பரிசீலிக்க ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு
கரோனா காலத்தில் அதிக வட்டி வசூலித்த தனியார் வங்கிக்கு எதிரான புகாரை பரிசீலிக்க ரிசர்வ் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
புழல் சிறையில் கஞ்சா பறிமுதல்: போலீஸார் விசாரணை
சென்னை புழல் சிறையிலிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
1 min
நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரி விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து சென்னை உயர்நீதிமன்றம்
நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரியை விடுவித்த மதுரை விசாரணை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.
1 min
வாகனச் சோதனையில் நிற்காமல் சென்றவரை விரட்டிப் பிடிக்க முயற்சி: ஆட்டோ மோதி இரு காவலர்கள் காயம்
சென்னை, செம்பியத்தில் வாகனச் சோதனையின்போது நிற்காமல் சென்றவரை விரட்டிச் சென்றபோது ஆட்டோ மோதியதில் இரு காவலர்கள் காயமடைந்தனர்.
1 min
பாதுகாப்புத் துறை அதிகாரி கொலை வழக்கு: 34 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி கைது
ஆவடியில் பாதுகாப்புத்துறை அதிகாரி கொலை வழக்கில், 34 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
திரையரங்கில் இளைஞர்கள் மீது தாக்குதல்: மூவர் கைது
சென்னை, வட பழனியில் உள்ள திரையரங்கில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
தமிழக அரசின் கடன் ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிக்க வாய்ப்பு
தமிழக அரசின் நேரடிக்கடன் வரும் 2026 மார்ச் 31 நிலவரப்படி ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிக்கக் கூடும் என்று பாமக சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
தயாளு அம்மாளுக்கு தொடர் சிகிச்சை: மருத்துவர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்
உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு (92) தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
1 min
முதல்வர் மருந்தகங்களில் இதுவரை ரூ. 27 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை
முதல்வர் மருந்தகங்களில் இதுவரை ரூ. 27 லட்சம் மதிப்பிலான மருந்துகள் விற்பனையாகி உள்ளதாகவும், 50,000 பேர் பயன் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
காலமானார் எழுத்தாளர் நந்தலாலா (69)
திருச்சியைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவருமான சி. நெடுஞ்செழியன் (எ) நந்தலாலா (69) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

1 min
எடப்பாடி பழனிசாமி பேட்டி: தேமுதிக கருத்து பதிவிட்டு நீக்கம்
தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் கொடுப்பதாக நாங்கள் ஏதாவது கூறினோமா என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியதைத் தொடர்ந்து, ஒரு கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தேமுதிக, பின்னர் அதை நீக்கியது.
1 min
திருவண்ணாமலை, ராஜபாளையம் பகுதிகளில் நிலத்துக்கு அடியில் தங்கம் இருக்கலாம்
திருவண்ணாமலை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
1 min
பள்ளி வேன் கவிழ்ந்ததில் 10 குழந்தைகள் படுகாயம்
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்ததில் 10 குழந்தைகள் காயமடைந்தனர்.
1 min
வேளாண் நிதிநிலை அறிக்கை: கருத்துகளைக் கேட்கும் அரசு
வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொது மக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
1 min
குளிர்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய அறிவுறுத்தல்
குளிர்பானங்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பழரசங்களின் தரத்தை ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
1 min
பலூனை விழுங்கிய குழந்தை உயிரிழப்பு
ஒரத்தநாடு அருகே ஊரணிபுரத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலூனை விழுங்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
1 min
பிரதமர் உரை: மருத்துவ மாணவர்கள் பங்கேற்க என்எம்சி அறிவுறுத்தல்
மருத்துவக் கல்வி தொடர்பாக பிரதமர் மோடி ஆற்றவுள்ள உரை மற்றும் கருத்தரங்க நிகழ்வுகளில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
1 min
தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்போது கள் இறக்க அனுமதி வழங்குவோம்
தமிழகத்தில் 2026-இல் ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு அளிக்கும்போது கள் இறக்க அனுமதி வழங்குவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கூறினார்.

1 min
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50 லட்சத்தை இழந்ததால் தற்கொலை முடிவு? மனைவி, 2 குழந்தைகளின் சடலங்கள் மீட்பு; கணவரை தேடும் போலீஸார்
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 50 லட்சத்தை இழந்துவிட்டதால், மனைவி, இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதாக கணவர் கடிதம் எழுதி வைத்திருந்த நிலையில், தாய், இரு குழந்தைகளின் சடலம் மீட்கப்பட்டது.

1 min
அரசுக்கு இஸ்லாமியர்கள் துணை நிற்க வேண்டும் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை, மார்ச் 4: திராவிட மாடல் அரசுக்கு இஸ்லாமியர்கள் துணை நிற்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்புத் திறப்பு நிகழ்ச்சி, சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஏழை மக்களுக்கு உணவுப் பொருள்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கிப் பேசியது:

1 min
எட்டாவது பொருளாதார கணக்கெடுப்பு பணியை ஒருங்கிணைக்க மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் தமிழக அரசு உத்தரவு
எட்டாவது பொருளாதார கணக்கெடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க மாநில, மாவட்ட அளவில் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
1 min
ஏரியா சபை... ஏமாற்றத்தில் முடிந்தது!
குறைந்தபட்சம் மக்கள் இந்த ஏரியா சபை நிகழ்வுகளில் கூடும்போது தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய, தங்கள் கருத்துகளை எடுத்து வைப்பார்கள். அங்கு மக்கள் பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்க ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வை சாதாரண மக்களுக்கு ஏற்படுத்த முடியும்.

4 mins
தேவை விழிப்புணர்வு...!
இணையவழி மோசடிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு சவாலாக உருவெடுத்து வருகின்றன.
2 mins
திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்றுத் தரப்படுவதற்கு காரணம் யார்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
சென்னை, மார்ச் 4: திமுகவினர் அனுமதி பெற்று நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தி மொழி கற்றுத் தரப்படுவதற்கு காரணம் யார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். ஹிந்தி மொழி விவகாரம் தொடர்பாக திமுகவினருக்கு அவர் ஏழாவது நாளாக செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்:
1 min
தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டும்
தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான 11 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவை தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

1 min
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப் பலன் வழங்க ரூ.265 கோடி ஒதுக்கீடு
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.265 கோடியை குறுகிய கால கடனாக போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
1 min
தேர்தல் வழக்கு: காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மனு தள்ளுபடி
மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் எதிர்த்து போட்டியிட்ட விஜய பிரபாகரன் தொடர்ந்த தேர்தல் வழக்கில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரி விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1 min
தமிழக கடல் பகுதியில் ஆழ்துளை எரிவாயுக் கிணறு அமைக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்
பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
1 min
உலகின் நம்பிக்கைக்குரிய நாடு இந்தியா - பிரதமர் மோடி
புது தில்லி, மார்ச் 4: தரமான பொருள்களை உற்பத்தி செய்யும் திறனுடன் உலகின் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா விளங்குகிறது; உலகளாவிய வாய்ப்புகளை இந்திய தொழில் துறையினர் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மிகப் பெரிய பாய்ச்சலை முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

1 min
ஒசூரில் சரக்கு ரயில் தடம்புரண்டது
ஒசூரில் சரக்கு ரயில் தடம்புரண்டதால் 'வந்தே பாரத்' ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
1 min
‘பேட் கேர்ள்’ திரைப்பட முன்னோட்டக் காட்சி: கூகுள் இந்திய நிறுவனம் பதிலளிக்க உத்தரவு
சிறுவர், சிறுமிகளை ஆபாசமாக சித்தரிக்கும் ‘பேட் கேர்ள்’ திரைப்பட முன்னோட்டக் காட்சிகளை (டீசர்) இணையதளத்திலிருந்து நீக்கக் கோரிய வழக்கில், கூகுள் இந்திய நிறுவனம், மத்திய அரசு, தமிழக காவல் துறை அதிகாரி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் திருச்சியில் 28-ஆம் ஆண்டு திருக்குறள் திருவிழா
முன்பதிவு செய்ய மாணவர்களுக்கு அழைப்பு
1 min
தென் மாவட்ட பேருந்துகளை தாம்பரம் வரை இயக்கினால் நடவடிக்கை
தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்கினால் ஓட்டுநர், நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min
இந்திய மத உணர்வுடன் விளையாட வேண்டாம்
சமாஜவாதி கட்சி இந்திய மத உணர்வுடன் விளையாடி வருகிறது என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்தார்.

1 min
பணி உயர்வில் பாரபட்சம் அதிகரிப்பு: ரயில்வே அமைச்சருக்கு ஊழியர்கள் சங்கம் கடிதம்
பணி உயர்வு என்பது கட்டாய இடமாற்றத்துடன் வருகிறது என்றும் மேலும் அதில் பாரபட்சம் அதிகரித்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டி துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு இந்திய ரயில்வே சிக்னல் மற்றும் டெலிகாம் பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
1 min
உ.பி. பேரவையில் பான் மசாலாவை உமிழ்ந்த எம்எல்ஏ
உத்தர பிரதேச சட்டப்பேரவையில் பான் மசாலாவை உமிழ்ந்த எம்எல்ஏவை பேரவைத் தலைவர் சதீஷ் மஹானா செவ்வாய்க்கிழமை கடிந்துகொண்டார்.
1 min
ஔரங்கசீப்பை புகழ்ந்த சமாஜவாதி எம்எல்ஏ: மகாராஷ்டிர பேரவையில் கடும் அமளி
முகலாய அரசர் ஒளரங்கசீப்பை சமாஜவாதி எம்எல்ஏ அபு அசீம் ஆஸ்மி புகழ்ந்து பேசியதற்கு ஆளும் பாஜக-சிவசேனை -தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் செவ்வாய்க்கிழமை முழுவதும் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

1 min
குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள்: தகுதிநீக்க விவரங்களை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிநீக்க காலத்தை நீக்கியது அல்லது குறைத்தது குறித்த தகவல்களை இரு வாரங்களில் சமர்ப்பிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு: சிறையிலிருந்து வெளிவரும் பிரிட்டன் இடைத்தரகர் - அமலாக்கத் துறை வழக்கிலும் உயர்நீதிமன்றம் ஜாமீன்
புது தில்லி, மார்ச் 4: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு தொடர்பான அமலாக்கத் துறை வழக்கிலும் இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல் ஜேம்ஸுக்கு தில்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
தவறை மூடி மறைக்கும் தேர்தல் ஆணையம்
வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கமளித்த நிலையில், தனது தவறை மூடி மறைக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.
1 min
நக்ஸல் தீவிரவாதிகளுக்குள் மோதல்: இருவர் சுட்டுக் கொலை
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
1 min
பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி
பிரபல பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயற்சித்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
இந்தியா-பெல்ஜியம் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு உறுதி
இந்தியா வந்துள்ள பெல்ஜியம் இளவரசி ஆஸ்ட்ரிட் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள், பிரதமர் நரேந்திர மோடியுடன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.

1 min
மும்பை சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் 4 வார கால தடை
பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவர் மாதபி புரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யுமாறு மும்பை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் 4 வார கால தடை விதித்துள்ளது.
1 min
ஆந்திர சட்டமேலவைத் தேர்தல்: ஆளும் கூட்டணி, சுயேச்சை வெற்றி
ஆந்திரத்தில் நடைபெற்ற பட்டதாரி தொகுதி சட்டமேலவைத் தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம்-பாஜக கூட்டணி வேட்பாளர்கள் ஏ.ராஜேந்திர பிரசாத், பி.ராஜசேகரம் ஆகியோர் வெற்றிபெற்றனர்.
1 min
போக்ஸோ வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை: உச்சநீதிமன்றம்
பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாக்கும் (போக்ஸோ) வழக்குகளை விசாரிக்க விசாரணை நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
1 min
சத்தீஸ்கர்: ஊராட்சி பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக கணவர்கள் பதவியேற்பு
சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டத்தில் கிராம ஊராட்சி ஒன்றில் புதிதாக தேர்வான 6 பெண் பிரதிநிதிகளுக்குப் பதிலாக அவர்களின் கணவர்கள் பதவியேற்றுள்ளனர்.
1 min
தேர்தல் விவகாரங்களுக்கு தீர்வு காண அனைத்துக் கட்சிக் கூட்டம்
தேர்தல் சார்ந்த எந்தவொரு விவகாரத்துக்கும் தீர்வுகாண எல்லா சட்டபூர்வ நிலைகளிலும் அனைத்துக் கட்சிக் கூட்டங்களை மாநில, யூனியன் பிரதேச தேர்தல் துறை அதிகாரிகள் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.
1 min
மேற்கு வங்கம்: கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி 2-ஆவது நாளாக போராட்டம்
மேற்கு வங்க மாநில கல்வி அமைச்சர் பிரத்யா பாஸு பதவி விலகக் கோரி தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்ஜெய் முண்டே பதவி விலகல்
கொலை வழக்கில் உதவியாளருக்கு தொடர்பு எதிரொலி

1 min
எஸ்டிபிஐ தேசியத் தலைவர் கைது: அமலாக்கத் துறை நடவடிக்கை
இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) தேசியத் தலைவர் எம்.கே. ஃபைஸியை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.
1 min
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: உத்தரகண்ட், சத்தீஸ்கர் வெற்றி
தேசிய மகளிர் சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் உத்தரகண்ட், சத்தீஸ்கர் அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
1 min
விலங்குகளிடம் பரிவு காட்டுங்கள்: மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்
குஜராத்தில் வன விலங்குகள்-பறவைகள் மீட்பு மையமான ‘வனதாரா’க்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விலங்குகளிடம் பரிவு காட்டுமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

1 min
நியூஸிலாந்து-தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் புதன்கிழமை நியூஸிலாந்து-தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.

1 min
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் 50-ஆவது வளர் தொழில் கிளை
முன்னணி வங்கியல்லா நிதி நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், வளர் தொழில் பிரிவில் தனது 50-ஆவது கிளையை தமிழகத்தில் திறந்துள்ளது.
1 min
மின் நுகர்வு 13,154 கோடி யூனிட்டுகளாக உயர்வு
இந்தியாவின் மின் நுகர்வு கடந்த பிப்ரவரி மாதத்தில் 13,154 கோடி யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.

1 min
ஸ்ரீ அன்னபூர்ணா ‘ஃபுட்ஸுடன் ‘ஜெமினி எடிபில்ஸ்’ கரம் கோர்ப்பு
கோவையைச் சேர்ந்த மசாலா தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ அன்னபூர்ணா ஃபுட்ஸின் 70 சதவீத பங்குகளைக் கையகப்படுத்தியுள்ள சூரிய காந்தி எண்ணெய் நிறுவனமான ஜெமினி எடிபில்ஸ் & ஃபேட்ஸ் இந்தியா, ஜெஃப் ஃபுட்ஸ் இந்தியா (பி) லிமிடெட் என்ற புதிய கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
1 min
செர்பியா நாடாளுமன்றத்தில் புகை குண்டு தாக்குதல்
பால்கன் தீபகற்பத்தைச் சேர்ந்த செர்பியாவின் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை புகை குண்டுகள் வீசப்பட்டதில் 3 எம்.பி.க்கள் காயமடைந்தனர்.
1 min
பஜாஜ் விற்பனை 2% உயர்வு
இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை பிப்ரவரி மாதத்தில் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
காங்கோ: 130 நோயாளிகள் கடத்தல்
இருந்து சுமார் 130 நோயாளிகளைக் கடத்திச் சென்றனர். காங்கோ ராணுவ வீரர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களை கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
1 min
111 புதிய கிளைகளை திறந்த பிஓஐ
நாடு முழுவதும் 111 புதிய கிளைகளைத் திறந்துள்ளதன் மூலம் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா (பிஓஐ) தன்னை குறிப்பிடத்தக்க விரிவாக்கம் செய்து கொண்டுள்ளது.
1 min
சூடான்: 221 சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் 221 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக் கப்பட்டிருப்பதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
1 min
காஸாவில் இருந்து ஹமாஸ் படை நீக்கம்: இஸ்ரேல் நிபந்தனை
காஸாவில் போர் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்துக்கு நீட்டிக்க வேண்டுமென்றால் அந்தப் பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பு படைவிலக்கல் மேற்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது.
1 min
அமலுக்கு வந்தது அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு
கனடா, மெக்ஸிகோ, சீனா ஆகிய நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த கூடுதல் இறக்குமதி வரி செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதற்குப் பதிலடியாக சீனாவும் கனடாவும் அமெரிக்கப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிப்பை அறிவித்துள்ளதால் அந்த நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

2 mins
நிகழாண்டில் புதிதாக 25 சிறு விளையாட்டு அரங்கங்கள்
நிகழாண்டில் 25 மினி விளையாட்டு அரங்கங்களை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
1 min
சட்டப் பல்கலை.யில் உயரிய ஆராய்ச்சிப் படிப்பு அறிமுகம்
விண்ணப்பப் பதிவு தொடக்கம்
1 min
மகளிர் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநராக ஸ்ரேயா பி.சிங் நியமனம்
மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநராக ஸ்ரேயா பி.சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் நா.முருகானந்தம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார்.
1 min
சாமிதோப்புக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலம்
அய்யா வைகுண்டர் 193-ஆவது அவதார தினத்தை முன்னிட்டு, நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்பு தலைமைப்பதிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் செவ்வாய்க்கிழமை ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர்.
1 min
பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று தொடக்கம்: 8.23 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு புதன்கிழமை (மார்ச் 5) முதல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை 8.23 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர்.
1 min
தென் மாவட்ட ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தம்
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.
1 min
Dinamani Chennai Newspaper Description:
出版社: Express Network Private Limited
カテゴリー: Newspaper
言語: Tamil
発行頻度: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
いつでもキャンセルOK [ 契約不要 ]
デジタルのみ