வழக்குப் பதிவு செய்யப்படாமல், வெளி உலகுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்ட பாலியல் குற்றங்கள் இதைவிட அதிக எண்ணிக்கையில் இருக்கலாம் என்கின்றனர்.
தவிர, நாடு முழுவதும் சராசரியாக தினமும் 86 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகியிருக்கிறது. 2020ம் வருடத்தில் 28,046 வழக்குகள் மட்டுமே பதிவாகின. மட்டுமல்ல, 89 சதவீத பாலியல் ரீதியான குற்றங்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தெரிந்தவர்களாலேயே நடந்திருக்கிறது; நடக்கிறது.
18 வயதுக்குட்பட்ட மைனர் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் முன்பைவிட அதிகரித்துள்ளன. இந்தியாவில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பத்து பெண்களில் ஒரு பெண் 18 வயதுக்குட்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2021ம் வருட ஆய்வின்படி இந்தியாவிலேயே அதிகமாக பாலியல் வன்புணர்வுகள் நடக்கும் மாநிலம் என்ற அவப்பெயரைப் பெற்றது, இராஜஸ்தான்.
பாலியல் வன்புணர்வுகள் அதிகமாக நடக்கும் பெருநகரங்களின் பட்டியலில் தில்லி முதல் இடத்தைப் பிடித்தது. அங்கே 2021ல் மட்டுமே 1,226 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பெருநகரங்களிலேயே குறைவான வழக்குகள் பதிவு செய்யப்பட்ட ஒரு நகரம்தான், கொல்கத்தா.
இப்படியான கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவருக்கு நடந்த பாலியல் ரீதியான கொடூர நிகழ்வு நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.
கொல்கத்தாவில் அமைந்துள்ளது ஆர்ஜிகர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை. ஆசியாவின் முதல் தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை இதுதான்.
சுதந்திரத்துக்குப் பிறகான வருடங்களில்தான் இந்தக் கல்லூரி அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 138 வருடங்கள் பழமையான இக்கல்லூரியில் இரண்டாம் வருடம் முதுகலைப் படிப்பை படித்துக்கொண்டும், பயிற்சி மருத்துவராகவும் பணிபுரிந்து வந்தார், மெளமிதா டெப்நாத்.
ஏழ்மையான குடும்பப் பின்னணியில் வந்தவர் இவர். வீட்டிலிருந்து ஒரு மணி நேரம் பேருந்து பயணத்தில் மருத்துவமனையை அடைந்துவிடலாம் என்பதாலேயே இந்த மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் மெளமிதா.
Diese Geschichte stammt aus der 30-08-2024-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der 30-08-2024-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!