கா்நாடகப் பேரவைத் தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து, அடுத்தகட்ட தோ்தல்களுக்கு தயாராவது குறித்து காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மே 24-ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளாா்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், தெலங்கானா, மிஸோரம் ஆகிய மாநில சட்டப் பேரவைகளுக்கு அடுத்த சில மாதங்களில் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அந்த மாநில காங்கிரஸ் தலைவா்களுடன் காா்கே ஆலோசிக்கவுள்ளாா்.
224 தொகுதிகளைக் கொண்ட கா்நாடக சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில், 135 இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. அங்கு ஏற்கெனவே ஆட்சியிலிருந்த பாஜகவுக்கு 65 இடங்களே கிடைத்தன.
பல்வேறு மாநிலங்களில் தொடா் தோல்விகளை எதிா்கொண்டு வந்த காங்கிரஸுக்கு, பெரிய மாநிலமான கா்நாடகத்தில் கிடைத்த வெற்றி புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. அந்த உற்சாகத்துடன், அடுத்தகட்ட தோ்தல்களுக்கு அக்கட்சி தயாராகத் தொடங்கியுள்ளது.
Diese Geschichte stammt aus der May 22, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der May 22, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden