போக்குவரத்து வழிகாட்டுதலுக்கான என்விஎஸ்-01 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட் வெற்றிகரமாக திங்கள்கிழமை (மே 29) விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து காலை 10.42 மணிக்கு செலுத்தப்பட்ட அந்த ராக்கெட் திட்டமிட்டபடி இலக்கை அடைந்ததைத் தொடா்ந்து, அத்திட்டம் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விஞ்ஞானிகள் பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.
தரைவழி, கடல்வழி மற்றும் வான்வழிப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்காக ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு’ என்ற கட்டமைப்பை (ஐஆா்என்எஸ்எஸ்) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. இதன்மூலம் இந்தியாவின் பயன்பாட்டுக்கென பிரத்யேக வழிகாட்டுதல் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு, செயல்பாட்டில் இருந்து வருகிறது.
அதன்படி, ரூ.1,420 கோடி செலவில் ஐஆா்என்எஸ்எஸ் 1ஏ, 1பி, 1சி, 1டி, 1இ, 1எப், 1ஜி என 7 வழிகாட்டு செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டு கடந்த 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரையான காலகட்டங்களில் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
அவற்றில், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு செயலிழந்த செயற்கைக்கோள்களுக்கு மாற்றாக புதிய செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஐஆா்என்எஸ்எஸ் 1-ஜி செயற்கைக்கோளுக்கு மாற்றாக என்விஎஸ்-01 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. அதை ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த முடிவு செய்தது.
அதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்து 27.30 மணி நேர கவுன்ட்டவுன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அதன் தொடா்ச்சியாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து திங்கள்கிழமை அந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
Diese Geschichte stammt aus der May 30, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der May 30, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
நட்பு நாடுகளின் அழைப்பை நிராகரித்தது இஸ்ரேல்
ஹிஸ்புல்லாக்களுடன் சண்டை நிறுத்தம்
சண்டிமல் சதம்: இலங்கை - 306/3
வீரர்களுடன் கலந்துரையாடல்
வங்கதேச டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
கான்பூரில் இன்று 2-ஆவது ஆட்டம் தொடக்கம்
மார்க்சிஸ்ட் தலைவர் எம்.எம்.லாரன்ஸ் உடலை ஏற்றுக்கொண்டது களமசேரி மருத்துவக் கல்லூரி
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் எம்.எம்.லாரன்ஸின் உடலை தானம் செய்வது குறித்து எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து, அவரது உடலை கலமசேரி மருத்துவக் கல்லூரி ஏற்க முடிவு செய்து, உடற்கூறியல் துறைக்கு உடலை மாற்றியது.
எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி
கடந்த 10 ஆண்டுகளில் எதிா்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த மோடி
ஹரியாணா பிரசாரத்தில் ராகுல்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் எழாது
‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் புதைக்கப்பட்டு விட்டது, அது மீண்டும் எழப்போவதில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை தொடர் ஆய்வு செய்ய வேண்டும்
தமிழகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிலுள்ள மருத்துவமனை மற்றும் பிற முக்கிய கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.
குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்
‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’, மதங்களைக் கடந்து அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.