ஈரோடு மாவட்டத்தில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு மற்றும் இவ்விரண்டு நோயால் பாதிக்கப்பட்ட 5,98,189 நோயாளிகள் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருந்துகள் பெற்று, பயனடைந்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சரால் "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டம் 05.08.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், சமணப்பள்ளி கிராமத்தில் தொடங்கி வைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் நோக்கம் தொற்றா நோய்களான உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் வாயிலாக உரிய பரிசோதனை செய்யப்பட்டு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு வீடு தேடி சென்று மருந்து, மாத்திரைகள் மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படுகிறது. 2 மாதத்துக்கு ஒருமுறை இந்நோயாளிகள் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி நோய் தாக்கம் குறித்து நிலையறிந்து, தொடர் சிகிச்சை பெற இத்திட்டம் வழிவகுக்கிறது. நோயின் தாக்கத்தால் நோயாளிகளுக்கு இருதயம், சிறுநீரகம், கண்கள் மற்றும் பாதம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிப்புகளை தவிர்த்து நோயினை கட்டுக்குள் வைத்து கொள்வதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
Diese Geschichte stammt aus der September 30, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der September 30, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
விடு தேடி வந்து மருத்துவ பரிசோதனை செய்ய சிறப்பான திட்டத்தை உருவாக்கிய முதல்வர்
ஈரோடு மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
தேசிய ஊட்டச்சத்து மாத விழா உணவுப்பொருட்கள் கண்காட்சி
தேசிய ஊட்டச்சத்து மாத விழாவினை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டிருந்த பொருட்கள் கண்காட்சி உணவுப் பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி தொடங்கி வைத்தார்.
உழவர்கரை நகராட்சி சார்பில் கனகன் ஏரியில் துப்புரவு பணி
உழவர்கரை நகராட்சி சார்பில் கனகன் ஏரியில் நடந்த சிறப்பு துப்புரவு பணியில், 400 கிலோ குப்பைகள் பட்டன.
கோவில் நில மோசடி வழக்கில் அரசு நில அளவையர் கைது
காரைக்கால் ஸ்ரீபார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில், அரசு நில அளவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
த.வெ.க. கொடியில் யானை: பகுஜன் சமாஜ் புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில்
நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
பரந்தூர் விமான நிலையம்: நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு
காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அறிவித்து, தமிழக அரசும் மத்திய அரசும் பணிகளை தொடங்கி உள்ளது.
மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது : பிரதமர் மோடி வாழ்த்து
பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் விடிய விடிய கனமழை: இரவு முழுவதும் மின்தடை
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 1 மாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் திடீரென மழை பெய்தது.
வடகிழக்கு பருவமழையின்போது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத ட வகையில் செயல்பட வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் 30.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா, ஆனைக்கவுண்டன்பட்டி மற்றும் கருப்பூர் கிராமத்தில் 29.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மினி டைடல் பூங்காக்கள் கட்டப்பட்டுள்ளன.