திருவாரூர், ஜூன்21- எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி ஈடேறினால், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அகற்றப்படும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் காட்டூரில் நேற்று (20.6.2023) நடைபெற்ற கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில், உடல்நலக்குறைவு காரணத்தால் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து விழாவில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஆங்கில வாழ்த்துரையை மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா, தமிழில் மொழி பெயர்த்து வழங்கினார்.
அவ்வுரை வருமாறு:
கலைஞருக்கு என்னுடைய உளமார்ந்த நன்றியையும், நினைவேந்தலையும் நான் செலுத்துகிறேன். இந்நிகழ்ச்சியில் நான் பங்கேற்கும் அரிய வாய்ப்பைப் பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் டி.ஆர்.பாலு இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்க பாட்னாவிற்கு வந்தார்.
அண்மையில் ராஜா இவ்விழாவிற்கான அழைப்பிதழைக் கொடுப்பதற்காக பாட்னா வந்திருந்தார்.
கலைஞரின் 100ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காக உங்கள் அனைவருக்கும் என்னுடைய இதயத்தின் அடி தளத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
கலைஞர் அவர்கள் தன்னுடைய 14ஆவது வயதில் பொது வாழ்வில் அடியெடுத்து வைத்து அதற்குப்பின் 80 ஆண்டுகள் தீவிர, முழுநேர அரசியல் பணியில் ஈடுபட்டிருந்தார். அதற்கு மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 50 ஆண்டுகள் இருந்திருக்கிறார். இது இந்த நாட்டில் எந்த தேசியக் கட்சி தலைவருக்கும், மாநிலக் கட்சித் தலைவருக்கும் கிடைக்காத ஒரு மிகப்பெரிய பேறு.
Diese Geschichte stammt aus der June 21,2023-Ausgabe von Viduthalai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der June 21,2023-Ausgabe von Viduthalai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது ஆத்தூர் கழக மாவட்டம்!