அந்த நெய்யில் மாமிச கொழுப்பு எசென்ஸ் கலந்த மினரல் ஆயில் இருக்கிறது என்பது தான் இப்போது சர்ச்சைக்கு காரணம், யார் ஆட்சியில் இந்த தவறு நடந்தது என அரசியல் கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள்.
இந்த அரசியல் ஒருபுறம் இருக்கட்டும், திருப்பதி லட்டுக்கு ஒரு பாரம்பரிய வரலாறு இருக்கிறது, அது உங்களுக்கு தெரியுமா?
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் வழங்கப்படுவது மொழிவாரி மாநிலங்கள் பிரிவிக்கப்படுவதற்கு முன்பு இருந்தே சுமார் 310 ஆண்டு களாக நடைமுறையில் இருக்கிறது.
முதன்முறையாக பல்லவர்களின் காலத்தில் கி.பி.830-ல் வெங்கடேச பெருமாளுக்கு பிரசாதம் படைத்து பக்தர்களுக்கு வழங்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.
முறையான பாதை, உணவு உள்ளிட்ட வசதிகள் இல்லாத அந்த காலத்தில் பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு ஏழு மலைகள் ஏறி தரிசனம் செய்ய செல்ல வேண்டும். சாமி தரிசனம் செய்த பிறகு சில நாட்கள் மலையில் தங்கி ஓய்வு எடுத்துவிட்டு, பிறகு ஊர் திரும்புவது அன்றைய மக்களின் வழக்கம்.
அப்படி அவர்கள் மலையில் இருந்து மீண்டும் ஏழு மலைகளைக் கடந்து வீடு திரும்பும் வரை உணவின் தேவையை கருத்தில் கொண்டு, கோவிலில் பிரசாதம் வழங்கத் தொடங்கினர்.
பின்னர் இரண்டாம் தேவராயர் மூன்று கிராமங்களை கோவிலுக்கு மானியமாகவும் மற்றும் தினசரி பிரசாத செலவுக்கு நாணயங்களும் வழங்கியுள்ளார். இரண்டாம் தேவராயரின் மற்றொரு அதிகாரியான அமாத்ய சேகர மல்லண்ணா, வெங்கடேஸ்வர பெருமாளுக்கு நைவேத்தியம் மற்றும் நித்யதீபம் ஏற்பாடுகளைச் செய்தார். இறைவனுக்கு உணவு பிரசாதம் வழங்கும் நேர அட்டவணையை அறிமுகப்படுத்தினார்.
காலம் மாற மாற, பிரசாதத்தின் பெயர்களும் மாற்றம் கண்டன. கி.பி.1445ஆம் ஆண்டுக்கு முன்பு வரை திருப்பதி கோவிலில் 'திருப்பொங்கம்' என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது. அப்போது 'சுய்யம்' என்ற இனிப்பு பிரசாதத்தை வழங்கத் தொடங்கினர்.
அதன் பிறகு அப்பம் வழங்கினர். காரணம், மலையில் இருந்து பிரசாதம் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு செல்ல நீண்ட காலம் ஆகும் என்பதால் எளிதில் கெட்டுப் போகாமல் இருக்க, இனிப்பு பலகாரத்தை பிரசாதமாக வழங்கினர்.
Diese Geschichte stammt aus der October 09, 2024-Ausgabe von Kanmani.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 09, 2024-Ausgabe von Kanmani.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
குழந்தைகளை பாதிக்கும் கலப்பட உணவு!
டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது உலக உணவு கட்டுப்பாட்டாளர் உச்சி மாநாட்டிற்காக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டார். அதில் வெளியான தகவல் ஒன்று அதிர்ச்சிகரமானது.
என்னோட வாழ்க்கை ரொம்ப சிம்பிளானது!
தமிழில் பீல்டு அவுட் ஆன நிலையில்... தெலுங்கு, கன்னட படம் என தன் இருப்பை மாற்றிய பிரியா மணி, தற்போது இந்தியில் வெற்றிகரமாக பயணிக்கும் நடிகை. திரைத்துறையில் 22 ஆண்டுகளாக கோலாச்சும் பிரியாமணியுடன் ஒரு அழகான உரையாடல்.
அருகில் வசிக்கும் தேவதைகள்!
அன்றைய தினம் ஒரே நாளில் இரண்டு முதிய பெண்மணிகளுக்கு சிகிச்சை அளிக்க நேர்ந்தது. இருவரிடையே சில ஒற்றுமைகள், சில வேற்றுமைகள். முதலில் வந்தவர் முப்பிடாதி. அவருக்கு லேசான காய்ச்சல், சர்க்கரை அளவும் அதிகமாக இருந்தது. அசதியா இருந்துச்சு, அப்படியே மெல்ல நடந்து வந்துட்டேன் என்று தனியாக வந்தவர் அப்படியே படுத்து விட்டார்.
அந்நிய மொழி இந்தி அவசியமில்லை!
இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை பேரழிவுக்குள் தள்ளும் விதமாக இந்தி திணிப்பில் மிக மூர்க்கமாக இருக்கிறது. இந்தி பிரச்சினை இன்று நேற்றல்ல... வெகு காலமாகவே தமிழ்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தமிழ்நாட்டின் மக்களுடன் சேர்த்து அரசியல் கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஜெயலலிதா அரசியலில் காலடி எடுத்து வைத்த காலகட்டத்தில்... இந்தி, தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத விசயம் என தேவி வார இதழுக்கு அளித்த ப்ளாஷ் பேக் பேட்டி:-
அரசு உயர் அதிகாரிகளை உருவாக்கும் பழங்குடியின கிராமம்!
ஒரு கிராமம் முழுக்க அரசு அதிகாரிகள் அதிகமாக இருந்தால் அது வியப்பான விஷயம்தானே. அப்படி ஒரு கிராமம் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. தார் மாவட்டத்தில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பதியால் என்ற கிராமம் அதிகாரியோன் காகாவ் அல்லது நிர்வாகிகளின் கிராமம் என்று பிரபலமாக அறியப்படுகிறது.
நடிகை காதம்பரியும் காவல் அதிகாரிகளும்?
சினிமா நடிகைகளுக்கு இந்த சமூகம் பாதுகாப்பாக உள்ளதா? என்ற கேள்விக்கு இப்போதும் மவுனமே பதிலாக கிடைக்கிறது. சினிமாவைத் தாண்டி அரசியல் மட்டத்திலும் நடிகைகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளே சிறையில் வைத்து தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக ஒரு நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பி ஆந்திர மாநில அரசியலில் சூட்டைக் கிளப்பியுள்ளார்.
காதால் நெருஞ்சி!
அருண்சார்' என்று அழைத்தாள் ஆதிரை. “சொல்லுங்க ஆதிரை மேடம்” என்று அவள் பக்கம் திரும்பினான் அருண்குமார்.
கொல்கத்தாவின் அடையாளம்... பிரியாவிடை பெறும் டிராம் வண்டிகள்!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா என்றால் நினைவுக்கு வருவது அதன் வரலாற்று அடையாளங்கள் மற்றும் கட்டிடக்கலை அற்புதங்கள். அதில் முக்கியமாக அந்த நகரின் பெருமை டிராம் வண்டிகள் எனலாம். நம்ம ஊரில் குதிரை வண்டி, மாட்டு வண்டி, கூண்டு வண்டி எப்படி புகழ் பெற்றதோ அப்படி இந்த டிராமுக்கும் தனி சிறப்பு உண்டு.
என்னோட எல்லை எனக்கு தெரியும்
தமிழில் அறிமுகமாகி பல வருடங்கள் ஓடி விட்டாலும் 'நிகிலா விமலுக்கு வாழை படத்தின் பூங்கொடி டீச்சர்' கேரக்டர்தான் தனி அடையாளத்தை கொடுத்துள்ளது. நடன ஆசிரியரின் மகளான நிகிலாவுக்கு பரதம், குச்சுப்புடி பாரம்பரியக் கலைகள் அனைத்தும் அத்துப்படி. தமிழ், மலையாள சினிமாவில் பரபரப்பாக இருக்கும் நிகிலாவுடன் ஒரு அழகான சிட்சாட்.
திருப்பதி லட்டு....உருவான வரலாறு!
திருப்பதி லட்டு தான் இப்போது தேசிய அளவில் ஹாட் டாபிக். பாரம்பரியமிக்க பிரசாதத்தின் மீது இப்போது அரசியல் சாயம் பூசி கலப்படத்தின் லிஸ்டில் சேர்த்து விட்டார்கள். திருப்பதி லட்டில் தரம் குறைந்த நெய்யை பயன்படுத்தி இருக்கிறார்கள்.