பக்தி மணம் கமழும் காஞ்சி மாநகரம்...!
Penmani|August 2024
காஞ்சி மாநகரம் என்று பெருமையுடன் காஞ்சிபுரம், பஞ்சபூத அழைக்கப்படும் திருத்தலங்களில் ஒன்று.புராதன சிறப்பு வாய்ந்த நகரம் ; நம் கலாசாரத்தையும் பாரம்பரியப் பெருமையையும் பறை சாற்றும் நகரம்; அவற்றை இன்றும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் நகரம்; சோழ, பல்லவ மன்னர்களால் சிறப்புடன் ஆட்சி செய்யப்பட்ட நகரம்; கட்டிடக்கலையிலும், சிற்பக்கலையிலும் மேன்மையுற்ற நகரம்; உலகமே பாராட்டும் பட்டுப்புடவைகளை உற்பத்தி செய்யும் நகரம்;கண்கவரும் காஞ்சிபுரப் பட்டுப் புடவைகளை விரும்பாத கன்னியரும் உண்டோ!
மாலதி சுந்தரராஜன்
பக்தி மணம் கமழும் காஞ்சி மாநகரம்...!

இப்படி பல விதங்களில் தலை நிமிர்ந்து நிற்கும் காஞ்சி மாநகரைக் காணும் ஆவலில் இந்த வருடம் ஜனவரி மாதம் ஒரு பயணம் மேற்கொண்டோம்.சென்னையில் ஒரு கல்யாணம். அது முடிந்து எங்களுக்குக் கிடைத்த இரண்டே நாட்களில் காஞ்சிபுரம் முழுவதும் பார்க்க ஆசை! ஆனால் அது பேராசை என்று கூறிவிட்டார் எங்களைக் கூட்டிக் கொண்டு போக வந்த நண்பர்! காஞ்சிபுரத் திலுள்ள கோவில்கள் அனைத்தையும் காண ஒரு மாதம் வேண்டும் என்றாரே பார்க்கலாம்! ஆகவே பிரசித்தி பெற்ற கோவில்கள் மட்டும் போக முடிவு செய்தோம். முதலில் நின்றது புகழ் வாய்ந்த ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோவில்!.

நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க.. என்று போற்றப்படும் தெய்வம்; எந்நாட்டவர்க்கும் இறைவனாக இருந்து அருள் பாலிக்கும் ஈசனின் பிரம்மாண்டமான உறைவிடம் ! பஞ்ச பூதங்களில் மண் வடிவமாக ஈசன் அமர்ந்து அருள் புரியும் புண்ணிய திருத்தலம்! இந்த மண்ணில் பிறக்கின்றோம்; இதனுடன் இணைந்து வாழ்கிறோம்; இறுதியில் நம்மை தாங்குவதும் இதே மண் தான்! மண் எனும் இம்மூலாதாரக் கருத்தை எடுத்துரைப்பது பிருத்வி லிங்கம் எனப்படும் ஸ்ரீஏகாம்பரேஸ்வர நாதர்!

நான்கு கம்பீரமான நுழை வாசல்கள்; அதற்கேற்றாற் போல் கம்பீரமான கோபுரங்கள்....பிரமிக்க வைக்கும் ராஜகோபுரம். கிருஷ்ண தேவராய மன்னனால் கட்டப்பட்டது என்கிறது குறிப்பு! உள்ளே நுழைந்தவுடன், அம்பாள் சிவபெருமானைத் தழுவிக் கொண்டிருக்கும் ஓவியம் நம்மை ஈர்க்கின்றது! அதுதான் இக்கோவிலின் வரலாறு!

ஒருமுறை பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை விளையாட்டாக பொத்தியதால், உலகம் இருளில் மூழ்க, கோபமுற்ற ஈசன் தேவியை பூலோகத்தில், காஞ்சியில் தவமிருக்கச் செய்தார். பார்வதியும் காஞ்சியில் உள்ள கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார்.தேவியின் தவத்தின் மகிமையை உலகுக்கு எடுத்துக் காட்ட, தன் சிரசின் மேல் அமர்ந்திருந்த கங்கையை வெள்ளமாகப் பாயச் செய்தார். உடனே பார்வதி தேவி மணல் லிங்கத்தை மார்புறத் தழுவிக் காத்தார்! இதைத்தான் அபிராமி பட்டர்,

செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி... என்று பக்தியுடன் குறிப்பிடுகின்றார்! அந்தக்குறி இன்றும் காணலாம்!தேவியின் மணலால் இச்செயலால் மனமகிழ்ந்த ஈசன்,அவருக்கு காட்சியளித்து, அவரைத் திருமணம் புரிந்து கொள்கிறார்!

Diese Geschichte stammt aus der August 2024-Ausgabe von Penmani.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der August 2024-Ausgabe von Penmani.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS PENMANIAlle anzeigen
பழமையான விநாயகர் கோவில்கள்!
Penmani

பழமையான விநாயகர் கோவில்கள்!

புனேயிலிருந்து 27 கி.மீ. தொலைவிலுள்ள தேயூர் என்ற ஊரில் இருக்கும் சிந்தாமணி விநாயகர் கோவில் 100 வருடம் பழமையானது. விநாயகரின் கண்கள், தும்பிக்கை ஆகியவைகளில் நகைகள் பதிக்கப்பட்டு ஜொலிக்கின்றன. சக்தி வாய்ந்த கணபதியாக விளங்கும் இவர், பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வைப்பவர்.

time-read
1 min  |
September 2024
இக்கட்டான நிலையில் இருந்து நாட்டை மீட்ட பொருளாதார மேதை மன்மோகன் சிங்!
Penmani

இக்கட்டான நிலையில் இருந்து நாட்டை மீட்ட பொருளாதார மேதை மன்மோகன் சிங்!

இந்திய நாட்டின் தலைமைப்பொருளாதார ஆலோசகர்‌, ரிசர்வ்‌ வங்கியின்‌ ஆளுநர்‌, இட்டக்குழுதலைவர்‌, நிதிஅமைச்சர்‌, பிரகம மந்திரி- இவ்வளவு பதவிகள்‌ வகித்தும்‌ \"நேர்மை' என்னும்‌ தம்‌ அடிப்படைப்‌ பண்பில்‌ இருந்து மாறாதவர்‌ டாக்டர்‌ மன்மோகன்‌சிங்‌.

time-read
2 Minuten  |
September 2024
அன்பு மலர்கள்!
Penmani

அன்பு மலர்கள்!

வாசலில் கால் டாக்சி வந்து நின்று விட்டது. சம்பத் ஷூவை மாட்டிக் கொண்டிருந்தான். சிந்து அவனிடம் வந்து நின்றாள். கண்களில் ஈர மினுமினுப்பு.\"புறப்படட்டுமா.?' என்றான் அவன்.

time-read
2 Minuten  |
September 2024
நுண்ணூட்ட சத்து உணவு வல்லுனர் படிப்பு!
Penmani

நுண்ணூட்ட சத்து உணவு வல்லுனர் படிப்பு!

நாள்முழுவதும் உட்கார்ந்த இடத்திலேயே பணியாற்றுதல், வாழ்க்கை முறை சூழல் ஆகியவற்றின் காரணமாக உடல் பருமன் என்பது அதிகரித்து வருகிறது. அதே போல இரண்டு தலைமுறைக்கு முன்பு மாரடைப்பு, இதய நோய் என்பதெல்லாம் வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டுமே வரும் என்றிருந்த காலமும் இப்போது மாறிவிட்டது.

time-read
2 Minuten  |
September 2024
சில்க் நகரம் சூரத்
Penmani

சில்க் நகரம் சூரத்

ஒரு இடத்திறகு நண்பர்களுடனோ, தனியாகவோ அல்லது குடும்பத்தினருடனோ சுற்றுலாவாகச் செல்கையில், அந்த இடத்தி லுள்ள சிறப்பான அம்சங்களைப் பார்த்து ரசிப்பதோடு மட்டுமல்லாமல், 2-3 மணி நேரப் பயணத்திலிருக்கும் மற்றொரு இடத் திற்கும் சென்று அங்கே இருப்பவைகளையும் பார்ப்பது சகஜம்.

time-read
2 Minuten  |
September 2024
அழுதும் தேனும் கலந்த பி.சுசீலாவின் பாடல்கள்!
Penmani

அழுதும் தேனும் கலந்த பி.சுசீலாவின் பாடல்கள்!

இந்தியாவின் முன்ன ணி திரைப்பட பின்னணிப் பாடகி பி.சுசீலா. தென்னிந்தியாவின் 'இசைக்குயில்' என்றும் மெல்லிசை அரசி' என்றும் இசையரசி எனவும் 'கான கோகிலா' எனவும் 'கான சரஸ்வதி' என்றும் அழைக்கப்படுகிறார்.

time-read
1 min  |
September 2024
பிருகன்னனை
Penmani

பிருகன்னனை

இந்துமதிக்குத் திருமணம் நிச்சயமானதில் வாசுவுக்குப் பெருநிம்மதி. தன்னோடு படிக்கிற முத்துவைக் காதலிப்பதை வாசுவிடம் தான் இந்துமதி முதலில் சொன்னாள். வேறு சாதி என்பதால் அம்மா மறுத்து விடுவாளோ என்கிற பயம் அவளுக்கு இருந்திருக்க வேண்டும்.

time-read
1 min  |
September 2024
இசைக் கலைஞர்களுக்கு தளராத மனம் வேண்டும்! பரதநாட்டியக் கலைஞர் கலா ஸ்ரீனிவாசன்
Penmani

இசைக் கலைஞர்களுக்கு தளராத மனம் வேண்டும்! பரதநாட்டியக் கலைஞர் கலா ஸ்ரீனிவாசன்

சண்முகா ஆர்ட்ஸ் எனும் அமைப்பை கடந்த 15 ஆண்டு களாக நடத்தி வருபவரும், உலக நடன தினத்தன்று தன்னுடைய 23 மாணாக்கர்களை வைத்து நடனமாடச் செய்து India Book; Asia Book; World Book ஆகிய மூன்று புத்தகங்களில் இடம்பெறச் செய்தவரும், செட்டாநகர் திருமுருகன் கோவிலில் 50 வருட காலத்துக்கும் மேலாக செயலாளராகவும் பணிபுரிந்து வரும் முருக பக்தர் பி. எஸ். சுப்பிரமணியம் அவர்களின் புதல்வியுமாகிய திருமதி கலா ஸ்ரீனிவாசன், பெண்மணிக்கு அளித்த பேட்டி:

time-read
1 min  |
September 2024
வேடிக்கை ஆகிப்போன அரசரின் ஆணை!
Penmani

வேடிக்கை ஆகிப்போன அரசரின் ஆணை!

அக்பர் தன் மகளை ஓர் அரசக் குமாரனுக்கு திருமணம் செய்து வைத்தார். அன்புடன் குடும்பம் நடத்தி வந்த அவர்களின் வாழ்வில் ஏதோ ஒரு காரணத்திற்காக சண்டையும் சச்சரவும் ஏற்பட்டுவிட்டது.

time-read
1 min  |
September 2024
வினைதீர்க்கும் விநாயகன்!
Penmani

வினைதீர்க்கும் விநாயகன்!

விநாயகனே வினைதீர்ப்பவனே.. வேழ முகத்தோனே.. ஞான முதல்வனே.

time-read
2 Minuten  |
September 2024