இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் எழிச்சூர் அரவிந்தன். மாநில அரசு வழங்கிய ‘சிறந்த கதாசிரியர்’ விருது, மயிலாப்பூர் அகடமி விருது, கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் விருது, பல அடுக்குகளாக அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்கள் என எழிச்சூர் அரவிந்தனைச் சுற்றிலும் புத்தகங்களும், விருதுகளும் அடுக்கி வைக்க இடம் இல்லாதளவுக்கு நிறைந்திருந்தன. மனைவி ராஜேஸ்வரி, மகள் தூரிகா என குடும்பமாக நமக்கு வரவேற்பு கொடுத்தார்கள்.
டிராமா, சின்னத்திரை, சினிமா என பல தளங்களில் பிசியாக இருப்பவர். கதாசிரியர், வசனகர்த்தா என பன்முகத்துடன் பயணிக்கும் இவருடைய நகைச்சுவைக்கு ஷங்கர், பார்த்திபன், லிங்குசாமி, எழில் போன்ற ஜாம்பவான் இயக்குநர்கள் ரசிகர்கள் மட்டுமல்ல, தங்கள் படங்களின் கதை விவாதத்திலும் பங்கேற்க வாய்ப்பு அளித்துள்ளார்கள்.
அதுமட்டுமல்ல, தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் வசனகர்த்தா இவர்தான்!எழுத்து மீதான ஆர்வம் எப்படி வந்தது? சினிமாவுக்கு வசனம் எழுதுவதுதான் உங்கள் நோக்கமாக இருந்ததா? சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் எழிச்சூர். பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னை சிந்தாதிரிப்பேட்டை. எங்க ஏரியாவுல ‘காசினோ’, ‘கெயிட்டி’, ‘மெலடி’, ‘ஆல்பர்ட்’, ‘சாந்தி’, ‘தேவி’ என தியேட்டர்களுக்கு பஞ்சமே இருக்காது.அம்மா சிவாஜி சாரின் பரம ரசிகை.
சிவாஜி சார் படத்தை முதல் நாள் முதல் ஷோ தவறாமல் பார்த்து விடுவார். ‘சாந்தி’ தியேட்டர் மேனேஜர் வேணுகோபால் சாரிடம் முன்கூட்டியே டிக்கெட் எடுத்து வைக்கச் சொல்லுமளவுக்கு பரிச்சயம்.
அப்பாவுக்கு ஹை கோர்ட்ல வேலை. சகோதரர் கல்லூரி துணை முதல்வர். எப்படிப் பார்த்தாலும் என்னைத் தவிர குடும்பத்தில் உள்ள எல்லோரும் படிச்சவங்க. நான் அதிகமா படிக்கல. சினிமா தியேட்டர்தான் என்னுடைய ஸ்கூல். சினிமா ஹீரோ, டைரக்டர்கள்தான் என்னுடைய டீச்சர்ஸ்.
அப்படி எனக்குள் சினிமா ஆர்வம் அதிகமாகவே, எப்படியாவது நடிகராகிவிட வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். ஆர்வமிகுதியில் தனியார் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தேன். ரொம்ப தாமதமாகத்தான் அதெல்லாம் டூபாக்கூர் இன்ஸ்டிடியூட்ன்னு தெரிஞ்சுச்சு. நடிக்க சான்ஸ் தர்றேன்னு பணம் கொடுத்து ஏமாந்த அனுபவமும் இருக்கு.
Esta historia es de la edición 07-06-2024 de Kungumam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición 07-06-2024 de Kungumam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!