விரைவில் தேர்தல் வரப்போகிறது என்கிற நிலையில் அதற்குப் பயன்படுமே என்று எங்களுடைய செய்தித்துறையின் மூலம் ஒரு புகைப்படம் எடுக்கச் சொன்னேன். அந்தப் படத்தைப் பார்த்ததற்குப் பிறகு நாங்கள் மிகப்பெரிய அதிர்ச்சியடைந்தோம்; ஆளுநரும் அதிர்ச்சியடைந்தார். இந்த அதிர்ச்சியைவிட எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது செல்வி. ஜெலலிதா அவர்கள் செய்த சதி வேலைகள்தான்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், புரூக் ளின் மருத்துவமனையில் டாக்டர் ப்ரீட்மேன் அவர்கள் தலைமையில் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மருத்துவ நிபுணர்கள் குழு, புரட்சித் தலைவர் அவர்களுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை அளித்தார்கள். சுமார் ஒரு மாத காலத்திற்குள் புரட்சித் தலைவரின் உடல்நிலையில் அதிசயத் தக்க வகையில், மருத்துவர்களே ஆச்சர்யப்படும் வகையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்த நேரத்தில்தான்... எதிர்பாராமல் அன்னை இந்திராகாந்தி அவர்கள் சுட்டுக் கொல் லப்பட்டார். நாடாளுமன்றத் தேர்தல் நடத்து வது என்கிற முடிவை எடுத்து தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெறத் தொடங்கிவிட்டன. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்கள் பாக்கியிருந்தன. ஜுன் மாதம்தான் தேர்தல் முறையாக நடைபெற வேண்டும்; என் அதோடு சேர்த்து சட்டமன்றத் தேர்த நடத்திவிடலாம் என்று நான் நினைத் தேன். அன்றைக்கு பொறுப்பேற்றுக்கொண் டிருந்த மூத்த அமைச்சர் நாவலரிடமும், மற்ற வர்களிடமும் சொல்லி அந்த முடிவை எடுப் பதற்காக அமைச்சரவை கூட்டப்பட்டது. ஆனால் அமைச்சரவையில் அனுபவமிக்க அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர், இந்தத் தேர்தலை இப்போது நடத்தவேண்டாம் என்று எண்ணினார்கள்.
அழுத்தத்தோடு பேசத் தொடங்கி னேன்... 'இரண்டு தேர்தலையும் ஒன்றாக இணைத்துதான் நடத்த வேண்டும்' என்று அழுத்தமாக, உறுதியாக நான் பேசியதற்குப் பிறகு எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். அமைச்சரவையின் முடிவை மத்திய அரசாங் கத்திற்கு அறிவித்தோம். மத்திய அரசாங்கமும் சட்டமன்றத் தேர்தலை சேர்த்து நடத்துவதற்கு ஒத்துக் கொண்டது. தேர்தல் வேலைகளில் ஈடுபட்டோம். வேட்பாளர் தேர்வுகள் நடைபெற்றன. நல்லவேளையாக ஜெயலலிதா அவர்கள் ஆட்சிமன்றக் குழுவிலோ தலைமைக் கழக நிர்வாகத்திலோ இல்லாத காரணத்தினால்
இந்தத் தேர்தல் நடவடிக்கைகளிலே நேரிடை யாக அவர்களாலே குறுக்கிட முடியவில்லை.
Esta historia es de la edición October 23-25, 2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 23-25, 2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
விஜய்யின் மாநாட்டு மூவ்!
ஹலோ தலைவரே, இதுவரை தேர்தலில் நின்றிராத பிரியங்கா காந்தி, முதல்முறையாக கேரளாவில் களமிறங்குகிறார்.\"
டிப்பர் லாரி டெண்டரில் ஊழல்!
கடலூரில், டிப்பர் லாரி கொள்முதல் டெண்டரில் குறைந்த விலைப் புள்ளிதாரரை விடுத்து, அதிக விலைப்புள்ளி குறிப்பு பட்ட நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கியதில் ஊழல் நடந்துள்ளது ஆதாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளது.
புதுக்கோட்டை! போலீசா வேட்டை! கால் உடையும் ரவுடிகள்!
கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க ரவுடிகள் வேட்டையைத் தொடங்கிய போலீஸ், சில என்கவுன்டர்களையும் செய்தது ரவுடிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மாவலி பதில்கள்
நடிகர் ரஜினிகாந்த் சமீபகாலமாக காவல்துறை சார்ந்த கதைக் களங்களையே தேர்வு செய்வது பற்றி? யாருக்குத் தெரியும், ரஜினிகாந்த் காவல்துறை சார்ந்த கதைகளைத் தேர்வு செய்கிறாரா, இல்லை இயக்குநர்கள் காவல்துறை கதைகளாகச் சொல்கிறார்களா? மொத்தத்தில் விருந்து காரசாரமாக இருந்தால் ரசித்துச் சாப்பிட்டுப் போகவேண்டியதுதான். 'கூலி'யில் லோகேஷ் கனகராஜ் என்ன கேரக்டர் கொடுக்கிறார் என பார்க்கலாம்!
போர்க் களம்
ஜெயலலிதா பற்றி 'எம்.ஜி.ஆர். யார்? நூலில் ஆர்.எம்.வீரப்பன் எழுதியது தொடர்கிறது...
முறைகேடு! கேள்வி கேட்டவருக்கு கொலை மிரட்டல்!
மதுரை மாவட்ட அலுவலகத்தின்024 காவல் கண்காணிப்பாளர் துர்காதேவி என்பவர், தனது கணவர் நவனி மற்றும் குழந்தைகளுடன் கண்ணீர்மல்க மதுரை மாவட்ட எஸ்.பி.யிடம், “என் கணவரின் உயிருக்கு ஆபத்து! காப்பாத்துங்க சார்!” என்று புகார் கொடுக்க, \"விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம்” என்று உறுதியளித்தார் எஸ்.பி.
ஆடினது குத்தமா?
ஒரேயொரு டான்ஸ்! தமன்னாவை அமலாக்கத்துறை விசாரணை வரை கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.
வெளியேறும் கவர்னர்? மோடி-அமித்ஷா நெருக்கடி!
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சையில் சிக்கிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அதிரடி கிடைத்துள்ளன.
அமைச்சர் Vs எம்.பி.முற்றும் மோதல்!
தி.மு.க. கூட்டணியிலிருக்கும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தீவிரமாகக் கையிலெடுத்தபோதே கூட்டணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறதோ என்ற ஐயப்பாடு எழுந்தது.
சைபர் குற்றவாளிகளின் புதிய அவதாரம்! உஷார் மக்களே!
முன்பெல்லாம் நமது செல்போனுக்கோ, தொலைபேசிக்கோ அழைத்து துல்லியமான வடஇந்திய சாயலுடனான தமிழில், 'உங்க ஏ.டி.எம்.கார்டுமேல இருக்கும் பதினாறு நம்பர் சொல்லுங்கோ' என ஆரம்பிப்பார்கள். இதற்கே ஆயிரக்கணக்கான பேர் ஏமாந்தபோதும், பலரும் சுதாரித்துக்கொண்டு இவர்களிடமிருந்து நழுவிவிடுவோம்.