ஈரான், ஈராக் இரங்கல்; மத்திய கிழக்கில் போர் தீவிரம்
பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் நீண்டகால தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். அவரது மரணத்தை ஹிஸ்புல்லா அமைப்பு உறுதி செய்தது. நஸ்ரல்லா மறைவுக்கு ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.
பாலஸ்தீனர்கள் வாழும் காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி போர் மூண்டது. இதில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் பெரும்பாலான பகுதியை இஸ்ரேல் குண்டு வீசி அழித்து விட்டது. இதைத் தொடர்ந்து, இப்போரைக் கண்டித்து, ஹமாசுக்கு ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகள் இஸ்ரேலுக்கு எதிராக கடந்த ஓராண்டாக சண்டையிட்டு வந்த நிலையில், தற்போது இஸ்ரேல், லெபனானை குறிவைத்து போரை விரிவுபடுத்தி உள்ளது.கடந்த 2 வாரமாக தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கண்டனம் தெரிவித்திருந்தார்.
ஹிஸ்புல்லா அமைப்பும் பதில் தாக்குதல் நடத்தி வந்தது.இந்நிலையில், பெய்ரூட்டின் தெற்கில் உள்ள தஹியே பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தில் அவ்வமைப்பின் தலைவர் நஸ்ரல்லா தலைமையில் உயர்மட்ட கூட்டத்திற்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த தகவலை அறிந்த இஸ்ரேல் ராணுவம் மிகப்பெரிய அளவிலான வான்வழி தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லாவின் தலைமையகம் அமைந்துள்ள பகுதியை குறிவைத்து நடத்தப்பட்ட துல்லிய தாக்குதலில் குண்டுமழை பொழிந்தது.
Esta historia es de la edición September 29, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 29, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
மழைநீர் கால்வாய் பணியால் கடும் நெரிசல்
கும்மிடிப்பூண்டி, அக். 2: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பஜார் பகுதிக்கு ஆத்துப் பாக்கம், மாதர்பாக்கம், வலுதலம்பேடு, புதூர், ரெட்டம்பேடு, ஆரம்பாக்கம், மங்காவரம், பொன்னேரி, தேவம்பேடு, பட்டுப்புள்ளி, அப்பாவரம், மேலகழனி, நத்தம், தேர்வழி, அயநெல்லூர், பெத்தி குப்பம், சுண்ணாம்புகுளம், மெதிபாளையம், ஓபசமுத்திரம் உள்ளிட்ட 150 கிராமங்களைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் தங்கள் தேவைக்கு கார், லாரி, இருசக்கர வாகனங்கள் மூலம் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
சேதமடைந்து காணப்படும் விஏஓ அலுவலக கட்டிடம்
கிருஷ்ணாகுப்பம் கிராமத்தில் சேதமடைந்து முட்புதர்கள் சூழ்ந்து காணப்படும் விஏஓ அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சாலையில் பள்ளம் தோண்டியதால் 16 மணிநேரம் போக்குவரத்து நிறுத்தம்
மணலியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக மணலி பகுதி முழுவதும் சிறிய, பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள்
மாவட்ட அளவிலான 'தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை' விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா திருவள்ளூரில் நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர் த.பிரபு தலைமை தாங்கினார்.
புதிய டிரான்ஸ்பார்மர்கள்
செங்குன்றம் அடுத்த பாடிய நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மொண்டியம்மன் நகர், நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர், ஆட்டம் தாங்கள் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று பொன்னேரி நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெண்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி
பழவேற் காடு மீனவப் பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு சுய தொழில் மூலம் வாழ்க் கையில் முன்னேறுவதற்கு சுய தொழில் பயிற்சிகள் இந்தியன் வங்கி சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திராவிலிருந்து குட்கா கடத்திய வாலிபர் கைது
திரு வள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு தடுக்கும் வகையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெட்ரோ ரயில்களில் 92.77 லட்சம் பேர் பயணம்
செப்டம்பர் மாதத்தில் 92,77,697 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்காததால் பயணிகள் கடும் அவதி
ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடந்து செல்கின்றனர்.