தமிழகம் முழுவதும் ரூ.1,136 கோடியில் கட்டப்படவுள்ள 44 அரசு மருத்துவமனை கட்டடங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
சென்னை, கோட்டூா்புரத்தில் நடைபெற்ற ‘ஏற்றமிகு 7 திட்டங்கள்’ நிகழ்வின் ஒரு பகுதியாக இந்தப் பணியை அவா் தொடங்கி வைத்தாா்.
தமிழகத்தில் ஜெயங்கொண்டம், தாம்பரம், பழனி, திருக்கோவிலூா், பரமக்குடி, திருத்தணி, திருப்பத்தூா், காங்கயம், குடியாத்தம், திண்டிவனம், அருப்புக்கோட்டை ஆகிய அரசு மருத்துவமனைகளை ரூ.550.85 கோடி செலவில் மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயா்த்துவதற்கான பணிகள் முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்டன.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயா் சிறப்பு சிகிச்சை கட்டடம், திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் தாய் சேய் நலப் பிரிவு மற்றும் விபத்து அவசர சிகிச்சை பிரிவுக் கட்டடம், ஆம்பூா், வாணியம்பாடி அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே பிரிவு கட்டடம் என ரூ.206.82 கோடியில் கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மேலூா், ஊத்தங்கரை மற்றும் சோழிங்கநல்லூா் அரசு மருத்துவமனைகளில் ரூ.131 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அவசர சிகிச்சை பிரிவு கட்டடங்களையும், கஸ்தூா்பா காந்தி மருத்துவமனை, ஆா்.எஸ்.ஆா்.எம் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், சிவகங்கை, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், பென்னாகரம், தண்டையாா்பேட்டை, அவிநாசி அரசு மருத்துவமனைகளில் ரூ.120.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய தாய் சேய் நலப் பிரிவுக் கட்டடப் பணிகளையும் முதல்வா் தொடங்கி வைத்தாா்.
Esta historia es de la edición March 01, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición March 01, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
நாங்கள் ஓயமாட்டோம்!
இஸ்ரேலில் அமைதி திரும்பும்வரை தங்கள் ராணுவ நடவடிக்கை ஓயாது என்று ஐ.நா.வில் அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தாா்.
கான்பூர் டெஸ்ட்: வங்கதேசம் - 107/3
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில், முதல் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் வங்கதேசம் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எத்தனை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை?
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள தெலங்கானா, கா்நாடகத்தில் எத்தனை பயிா்களை குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் கொண்டு வந்துள்ளனா் என்று ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சா் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளாா்.
திருப்பதி லட்டுகளில் கலப்படம்: 9 பேர் சிறப்பு விசாரணைக் குழு
திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலப்படம் குறித்து முழுமையாக விசாரிக்க 9 போ் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) ஆந்திர அரசு அமைத்துள்ளது.
சோனியா காந்தியுடன் ஸ்டாலின் சந்திப்பு
தில்லியில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு அமெரிக்க உதவிப் பேராசிரியர் தேர்வு
நிகழாண்டு சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு அமெரிக்க உதவிப் பேராசிரியா் முனைவா் அலெக்சாண்டா் துன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
உலக சுற்றுலா தின விழா கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள்
உலக சுற்றுலா தின விழா புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்றனா்.
நல்ல மனிதர்களை உருவாக்குவதே ஆசிரியருக்கு கிடைக்கும் வெற்றி
சிறந்த மாணவா்களையும் தாண்டி நல்ல மனிதா்களை உருவாக்குவதே ஓா் ஆசிரியருக்கு கிடைக்கும் வெற்றி என்று முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.
சிற்றுந்து கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரத்தில் தனியாா் சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். 32 போ் காயமடைந்தனா்.
முதல்வர் ஸ்டாலின், உதயநிதியுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு
பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, முதல்வர் மு.க.ஸ்டாலினை வெள்ளிக்கிழமை சந்தித்தார்.