கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் சட்டரீதியான பாதுகாப்பு, இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கச் செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம், சட்டப்பேரவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.
கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் சலுகை கிடைக்கச் செய்வதற்குகளை மத்திய அரசை வலியுறுத்துவதற்கான அரசின் தனித் தீர்மானம், சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டது. கேள்வி நேரத்துக்குப் பிறகு, தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறிய பிறகும் தீண்டாமை உள்ளிட்ட ஜாதிய வன்கொடுமைகளுக்கு அவர்கள் உள்ளாவது தொடரவே செய்கிறது. இதைகனிவோடு கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நாட்டின் அரசியல் அமைப்பு சட்டப்படி, ஹிந்து, சீக்கிய, பௌத்த மதங்களைத் தவிர்த்து பிற மதங்களைச் சேர்ந்த யாரும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்களாகக் கருதப் படமுடியாது.
ஆதிதிராவிடர் இருக்கும்போது, வரலாற்று ரீதியாக அவர்கள் வகுப்பினராக அவர்களுக்குப் பட்டியலின வகுப்புக்கான உரிமைகளை வழங்குவதே சரியாக இருக்கும். அதன் மூலமாகத் தான் அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு ஆகியன கிடைத்து சமூகத்தில் உயர்வும் மேம்பாடும் அடைய முடியும்.
ஜாதிய ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே ஜாதியை வைத்தே இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம் தான் சமூகநீதித் தத்துவம்.
Esta historia es de la edición April 20, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición April 20, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
நட்பு நாடுகளின் அழைப்பை நிராகரித்தது இஸ்ரேல்
ஹிஸ்புல்லாக்களுடன் சண்டை நிறுத்தம்
சண்டிமல் சதம்: இலங்கை - 306/3
வீரர்களுடன் கலந்துரையாடல்
வங்கதேச டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
கான்பூரில் இன்று 2-ஆவது ஆட்டம் தொடக்கம்
மார்க்சிஸ்ட் தலைவர் எம்.எம்.லாரன்ஸ் உடலை ஏற்றுக்கொண்டது களமசேரி மருத்துவக் கல்லூரி
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் எம்.எம்.லாரன்ஸின் உடலை தானம் செய்வது குறித்து எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து, அவரது உடலை கலமசேரி மருத்துவக் கல்லூரி ஏற்க முடிவு செய்து, உடற்கூறியல் துறைக்கு உடலை மாற்றியது.
எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி
கடந்த 10 ஆண்டுகளில் எதிா்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த மோடி
ஹரியாணா பிரசாரத்தில் ராகுல்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் எழாது
‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் புதைக்கப்பட்டு விட்டது, அது மீண்டும் எழப்போவதில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை தொடர் ஆய்வு செய்ய வேண்டும்
தமிழகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிலுள்ள மருத்துவமனை மற்றும் பிற முக்கிய கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.
குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்
‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’, மதங்களைக் கடந்து அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.