அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பலம் வாய்ந்த பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த சரத் பவார், திடீரென கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது அவரது கட்சித் தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், தேசிய அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
1999-ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய சரத் பவார், நான்கு முறை மகாராஷ்டிர முதல்வராகவும், மத்தியில் பாதுகாப்பு மற்றும் வேளாண் துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
2019- மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கு பிறகு பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனை கட்சியை விலக வைத்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் இணைத்து மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி அமைத்ததில் சரத் பவார் முக்கியப் பங்காற்றினார். எனினும், அதிருப்தி சிவசேனை எம்எல்ஏக்களின் தலைவர் ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவுடன் மகாராஷ்டிரத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே, "15 நாள்களில் தில்லி, மகாராஷ்டிர அரசியலில் அரசியல் வெடிகுண்டு வெடிக்க உள்ளது' என்று கூறியிருந்தார்.
அதற்கு ஏற்ப, மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தனது வாழ்க்கை வரலாற்று நூலின் கூடுதல் தகவல்கள் அடங்கிய பிரதியை வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சரத் பவார், யாரும் எதிர்பாராத வகையில் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார்.
Esta historia es de la edición May 03, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición May 03, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
நட்பு நாடுகளின் அழைப்பை நிராகரித்தது இஸ்ரேல்
ஹிஸ்புல்லாக்களுடன் சண்டை நிறுத்தம்
சண்டிமல் சதம்: இலங்கை - 306/3
வீரர்களுடன் கலந்துரையாடல்
வங்கதேச டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
கான்பூரில் இன்று 2-ஆவது ஆட்டம் தொடக்கம்
மார்க்சிஸ்ட் தலைவர் எம்.எம்.லாரன்ஸ் உடலை ஏற்றுக்கொண்டது களமசேரி மருத்துவக் கல்லூரி
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் எம்.எம்.லாரன்ஸின் உடலை தானம் செய்வது குறித்து எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து, அவரது உடலை கலமசேரி மருத்துவக் கல்லூரி ஏற்க முடிவு செய்து, உடற்கூறியல் துறைக்கு உடலை மாற்றியது.
எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி
கடந்த 10 ஆண்டுகளில் எதிா்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த மோடி
ஹரியாணா பிரசாரத்தில் ராகுல்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் எழாது
‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் புதைக்கப்பட்டு விட்டது, அது மீண்டும் எழப்போவதில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை தொடர் ஆய்வு செய்ய வேண்டும்
தமிழகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிலுள்ள மருத்துவமனை மற்றும் பிற முக்கிய கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.
குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்
‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’, மதங்களைக் கடந்து அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.