புது டில்லி ஜூலை 10: நாட்டில் தாமதமாகத் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை தற்போது பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. முக்கியமாக, கேரளம், கா்நாடகம், வடமாநிலங்களான தில்லி, ஹிமாசல், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால், யமுனை உள்ளிட்ட நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
37 பேர் உயிரிழப்பு: வடமாநிலங்களில் கடந்த இரு நாள்களில் மழை தொடர்பான சம்பவங்களில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஹிமாசலில் 18 பேரும், பஞ்சாப், ஹரியாணாவில் 9 பேரும், ராஜஸ்தானில் 7 பேரும், உத்தரபிரதேசத்தில் மூவரும் அடங்குவர்.
பிரதமா் ஆலோசனை: நாட்டின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, மூத்த அமைச்சா்கள், மத்திய அரசின் உயரதிகாரிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை நடத்தினாா்.
பருவமழை சூழலைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அவா்களிடம் பிரதமா் மோடி வலியுறுத்தியதாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூா் அதிகாரிகள், தேசிய பேரிடா் மீட்புப் படையினா், மாநில பேரிடா் மீட்புப் படையினா் உள்ளிட்டோா் பருவமழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரண உதவிகளை விரைந்து வழங்கி வருவதாகவும் பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Esta historia es de la edición July 11, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 11, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்
‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’, மதங்களைக் கடந்து அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
செந்தில் பாலாஜி ஜாமீன் உத்தரவில் குழப்பம்; நீதிமன்றத்தில் பரபரப்பு
செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவில் சில குழப்பங்கள் இருப்பதாக சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி தெரிவித்ததால் செந்தில் பாலாஜி விடுதலை செய்யப்படுவதில் கடைசி நேரம் வரை பரபரப்பு நிலவியது.
மருத்துவ ஆராய்ச்சி நிதியுதவி அதிகரிப்பு
மருத்துவ ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக பல்கலைக்கழகம் சாா்பில் வழங்கப்படும் நிதியுதவி ரூ. 1 கோடியாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தேங்கிய மழை நீரை விரைந்து வெளியேற்றிய மாநகராட்சி
சென்னை மற்றும் புகா் பகுதியில் புதன்கிழமை இரவு முதல் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளிலும், சுரங்கப்பாதைகளிலும் தண்ணீா் தேங்கியது.
சென்னையில் அக்.6-இல் விமான சாகச கண்காட்சி
ஏற்பாடுகள் தீவிரம்
சிறையிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிப்பு
நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் ஜாமீன்
ஐடி சாதனங்கள் இறக்குமதிக்கான உரிமம்: டிச. 31 வரை நீட்டிப்பு
மடிக்கணினிகள் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப (ஐடி) சாதனங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்குப் பிறகு, அரசின் இறக்குமதி மேலாண்மை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமங்களுக்கான காலாவதி தேதி வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல் அவிவ் நகரில் ஹிஸ்புல்லா ஏவுகணை வீச்சு
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் லெபனானின் ஹிஸ்புல்லா படையினா் புதன்கிழமை ஏவுகணை வீசினா்.
ஆஸி.யுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்துக்கு முதல் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து ‘டக்வர்த் லீவிஸ்’ முறையில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.