கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணத்தை வழங்கியபோது அதை செந்தில் பாலாஜி பெற மறுத்தது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதி சி.வி.காா்த்திகேயன், கைது நடவடிக்கை சட்டத்தை மீறி மேற்கொள்ளப்பட்டிருந்தால் அமலாக்கத் துறை அதிகாரிகளை கூண்டில் ஏற்றி அதற்கான இழப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.
அமைச்சா் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனு, மூன்றாவது நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் திங்கள்கிழமை இறுதி விசாரணைக்கு வந்தது.
கபில் சிபல் வாதம்: அப்போது, மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரமும் இல்லை. ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறையினரால் கைது செய்ய முடியும். கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, ஆதாரங்களை சீல்வைத்த கவரில் நீதிமன்றத்தில் சமா்ப்பித்து, கைதுக்கான காரணங்களைத் தெரிவித்து நீதிமன்றக் காவலில் வைக்க கோரலாம்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டப் பிரிவுகளின்படி அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என வாதிட்டாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளபோது, ஆள்கொணா்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்? நீதிமன்றக் காவலில் உள்ள செந்தில் பாலாஜியை ஆஜா்படுத்தி விடுவிக்கும்படி அமலாக்கத் துறைக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?’ எனக் கேள்வி எழுப்பினாா்.
Esta historia es de la edición July 12, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 12, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
தேங்கிய மழை நீரை விரைந்து வெளியேற்றிய மாநகராட்சி
சென்னை மற்றும் புகா் பகுதியில் புதன்கிழமை இரவு முதல் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளிலும், சுரங்கப்பாதைகளிலும் தண்ணீா் தேங்கியது.
சென்னையில் அக்.6-இல் விமான சாகச கண்காட்சி
ஏற்பாடுகள் தீவிரம்
சிறையிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிப்பு
நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் ஜாமீன்
ஐடி சாதனங்கள் இறக்குமதிக்கான உரிமம்: டிச. 31 வரை நீட்டிப்பு
மடிக்கணினிகள் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப (ஐடி) சாதனங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்குப் பிறகு, அரசின் இறக்குமதி மேலாண்மை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமங்களுக்கான காலாவதி தேதி வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல் அவிவ் நகரில் ஹிஸ்புல்லா ஏவுகணை வீச்சு
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் லெபனானின் ஹிஸ்புல்லா படையினா் புதன்கிழமை ஏவுகணை வீசினா்.
ஆஸி.யுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்துக்கு முதல் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து ‘டக்வர்த் லீவிஸ்’ முறையில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
சிறு, நடுத்தர தொழில்கள் மீது திட்டமிட்ட ‘தாக்குதல்’
மத்திய அரசு மீது ராகுல் சாடல்
90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுத ஏற்றுமதி
இந்தியாவில் இருந்து 90-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தொழில் துறை மூலம் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு
தொழில் துறை மூலம் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான இலக்கை எட்ட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கைத்தறி நெசவாளர்கள்- வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள்
கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினார்.