இலங்கைத் தமிழா்கள் சுயமரியாதையுடன் கண்ணியமாக ஒருங்கிணைந்த இலங்கையில் வாழ, அதிகாரப் பகிா்வு மற்றும் அரசியல் தீா்வு காண வகை செய்யும் 13-ஆவது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்கவிடம் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த இலங்கை தற்போது படிப்படியாக மீண்டு வருகிறது. அந்நாட்டுக்கு இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கிய பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக அந்நாட்டின் அதிபராக ரணில் விக்ரமசிங்க கடந்த ஆண்டு ஜூலையில் பொறுப்பேற்றாா். அதன்பிறகு முதல் முறையாக அவா் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டாா்.
புது தில்லிக்கு வியாழக்கிழமை வருகை தந்த அவா், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினாா். அதையடுத்து, பிரதமா் மோடியை அதிபா் ரணில் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.
5 முக்கிய ஒப்பந்தங்கள்: இந்தியாவின் யுபிஐ பணப் பரிவா்த்தனை வசதியை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் உள்ளிட்ட 5 முக்கிய ஒப்பந்தங்கள் அப்போது கையொப்பமாகின.
இரு நாடுகளுக்கு இடையே போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் கடல் வழியாகப் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது குறித்த ஒப்பந்தமும், மின்சாரப் பகிா்மான அமைப்புகளை ஒருங்கிணைப்பது தொடா்பான ஒப்பந்தமும் கையொப்பமாகின.
கூட்டாக பேட்டி: பேச்சுவாா்த்தைக்குப் பிறகு பிரதமா் மோடியும் அதிபா் ரணிலும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது பிரதமா் மோடி கூறியதாவது:
கடும் பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்தபோது, அந்நாட்டுக்கு இந்தியா தோள்கொடுத்து நின்றது. கடந்த ஓராண்டு காலமானது இலங்கை மக்களுக்குப் பெரும் சவால்மிக்கதாக இருந்தது. இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகத் திகழும் இலங்கைக்குத் தேவையான உதவிகளை இந்தியா உரிய நேரத்தில் வழங்கியது.
Esta historia es de la edición July 22, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 22, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஐடி சாதனங்கள் இறக்குமதிக்கான உரிமம்: டிச. 31 வரை நீட்டிப்பு
மடிக்கணினிகள் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப (ஐடி) சாதனங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்குப் பிறகு, அரசின் இறக்குமதி மேலாண்மை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமங்களுக்கான காலாவதி தேதி வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல் அவிவ் நகரில் ஹிஸ்புல்லா ஏவுகணை வீச்சு
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் லெபனானின் ஹிஸ்புல்லா படையினா் புதன்கிழமை ஏவுகணை வீசினா்.
ஆஸி.யுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்துக்கு முதல் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து ‘டக்வர்த் லீவிஸ்’ முறையில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
சிறு, நடுத்தர தொழில்கள் மீது திட்டமிட்ட ‘தாக்குதல்’
மத்திய அரசு மீது ராகுல் சாடல்
90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுத ஏற்றுமதி
இந்தியாவில் இருந்து 90-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தொழில் துறை மூலம் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு
தொழில் துறை மூலம் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான இலக்கை எட்ட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கைத்தறி நெசவாளர்கள்- வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள்
கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினார்.
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர் ஜூனா விவகாரம் குறித்து உயர்நிலைக் குழுவில் பேசி முடிவு செய்யப்படும் என்று கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தை துரிதமாக மீட்க வேண்டும்
சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தைத் துரிதமாக மீட்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் பி.டி.ராஜன் சிறப்பு மலர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை மாகாண முன்னாள் முதல்வர் பி.டி. ராஜன் நினைவாக தயாரிக்கப்பட்ட எண்ம அடிப்படையிலான சிறப்பு மலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.