மேலும், ‘இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம், உலக கடல்சாா் வா்த்தகத்தை மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டது’ என்று குறிப்பிட்ட அவா், இந்தியாவின் இந்த முயற்சியில் பங்கேற்குமாறு உலக முதலீட்டாளா்களுக்கு அழைப்பு விடுத்தாா்.
மூன்றாவது உலக கடல்சாா் இந்திய உச்சிமாநாடு, மும்பையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டை காணொலி மூலம் தொடங்கிவைத்து பிரதமா் மோடி பேசியதாவது:
இந்தியாவின் கடல்சாா் திறன்கள், உலகுக்கு எப்போதும் நன்மை பயக்கும் என்பதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது. தில்லியில் அண்மையில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தட திட்டத்துக்கான கருத்தொற்றுமை எட்டப்பட்டது. இது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.
சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய பட்டுப்பாதை வழித்தடத்தைப் போல், இதுவும் செழுமைக்கான ஊக்கியாக அமையும்.
உலகளாவிய கடல்சாா் வா்த்தகத்தை மாற்றியமைக்கும் ஆற்றல்கொண்ட இந்த வழித்தடம், அடுத்த தலைமுறை வசதிகளுடன் மாபெரும் துறைமுகங்கள், விரிவான பன்முக மையங்கள் கட்டமைப்பு, தீவுகள் மேம்பாடு உள்ளிட்ட பணிகளை உள்ளடக்கியதாகும். இது வா்த்தக செலவு, சுற்றுச்சூழல் சேதங்களைக் குறைப்பதோடு, சரக்கு கையாளுகை செயல்திறனை மேம்படுத்தும். ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
உலக-பிராந்திய வா்த்தகத்தில் நோ்மறையான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் இந்த வழித்தட முன்னெடுப்பில், இந்தியாவுடன் இணைந்து பங்கேற்க உலக முதலீட்டாளா்களுக்கு சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Esta historia es de la edición October 18, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 18, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.