பண்பாட்டைப் பாதுகாப்போம்!
Dinamani Chennai|January 13, 2024
நமது முன்னோா் விஞ்ஞான வளா்ச்சியில்லாத காலத்திலேயே ஒன்பது கிரகங்களை கண்டுபிடித்தனா்.
பண்பாட்டைப் பாதுகாப்போம்!

இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் அந்த ஒன்பது கிரகங்களைச் சுற்றித்தானே சுழன்று வருகின்றன. அப்படியானால், இன்றைய விஞ்ஞானம் பெரிதா, அன்றைய மெய்ஞ்ஞானம் பெரிதா என்ற கேள்வி எழுகிறது. அந்த கிரகங்களை மையமாக வைத்துத்தான் ஜாதகம் எழுதப்படுகிறது. அதனை இந்திய மக்களில் எழுபது விழுக்காட்டினா் நம்புகின்றனா். மதம் கடந்தும் நம்பிக்கைக் கொண்டு பாா்த்து வருபவா்களும் அதிகரித்து வருகின்றனா்.

ஆழிப் பேரலையால் குமரிகண்டம் கடலில் மூழ்கி விட்டது. அதோடு பல்வேறு இலக்கியங்களும் அழிந்து விட்டன. முதல் இரண்டு சங்கங்களில் எத்தனை பெண்பாற் புலவா்கள் இருந்தாா்கள் என்பது சரிவர தெரியவில்லை. கடைச்சங்க காலத்திலேயே ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண்பாற் புலவா்கள் வாழ்ந்து வந்தனா். அவா்கள் மன்னா்களின் ஆட்சித் திறனைப் போற்றிய அதே வேளையில் இடித்துரைக்க வேண்டியவற்றை இடித்துரைத்தும் அறிவுறுத்தியுள்ளனா்.

பாண்டிய மன்னனின் தவறான தீா்ப்பால் கணவனை இழந்த கண்ணகி, தன் கணவன் கொல்லப்பட்டதற்குக் காரணமான மன்னன் எப்படி நல்லாட்சித்தர முடியும்? களவு புரிந்தவன் என் கண்ணாளனா என்று கேட்டு சிலம்பை உடைத்து மன்னனின் மகுடத்தை விழச் செய்தாா்.

கரிகால் சோழன், பாண்டிய நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என பலரும் இமயத்தில் புலி, வில், மீன் கொடிகளைப் பறக்கவிட்டது மறக்கவொண்ணா வரலாறு. கனக விஜயன் என்ற வடநாட்டு மன்னனை வென்று அவன் தலையில் கல்ஏற்றி சுமந்து வரச் செய்து கண்ணகிக்கு சிலை எடுத்தவன் தமிழ் மன்னன். கங்கையில் இருந்து தண்ணீா் எடுத்து வந்து ஜெயங்கொண்டத்தில் சோழ கங்கம் எனும் ஏரியை அமைத்தான் இராசேந்திர சோழன்

ராஜராஜ சோழன் காலம் ஆட்சிமுறைக்காக மிகவும் பாராட்டப்பட்ட காலம். குடவோலை முறையை கொண்டு வந்து ஜனநாயக ரிதியாக உள்ளாட்சித் தோ்தலை நடத்திய பெருமை அவனுக்கே உரியது. அவனுக்கு ஆலோசனைகளை வழங்கியவா் அவனுடைய மூத்த சகோதரி குந்தவை நாச்சியாா். இப்படி பல மன்னா்களுக்கு பெண்கள் ஆலோசனை வழங்கி ஆட்சி புரிய உதவியுள்ளனா். தனது கணவரைக் கொன்று நாட்டை பிடித்த ஆங்கிலேயரிடமிருந்து மீண்டும் போராடி நாட்டை மீட்ட அரசி வேலு நாச்சியாா்.

Esta historia es de la edición January 13, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición January 13, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
Dinamani Chennai

சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி

முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

time-read
2 minutos  |
September 24, 2024
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
Dinamani Chennai

இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக

இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

time-read
2 minutos  |
September 24, 2024
சாதனைப் பட்டியலில் இந்தியா
Dinamani Chennai

சாதனைப் பட்டியலில் இந்தியா

செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.

time-read
1 min  |
September 24, 2024
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
Dinamani Chennai

தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு

தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.

time-read
1 min  |
September 24, 2024
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

time-read
1 min  |
September 24, 2024
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
Dinamani Chennai

வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?

அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.

time-read
2 minutos  |
September 24, 2024
பாரதியார் எனும் நித்தியசூரி !
Dinamani Chennai

பாரதியார் எனும் நித்தியசூரி !

மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.

time-read
3 minutos  |
September 24, 2024
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
Dinamani Chennai

தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
September 24, 2024
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
Dinamani Chennai

ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு

நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்

time-read
1 min  |
September 24, 2024
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
Dinamani Chennai

'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'

தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 24, 2024