எம்ஜிஆர்-கருணாநிதி காலத்தில் பெரும் பகுதி கிறிஸ்தவர்கள் எம்ஜிஆருக்கும், இஸ்லாமியர்களில் பெரும் பகுதியினர் கருணாநிதிக்கும் ஆதரவாக இருந்தனர். இந்தச் சூழல் 1996 வரை நீடித்தது. மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்ததுமுதல் மத சிறுபான்மையினர் தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு என்ற புள்ளியில் ஒருமுகமாக வாக்களித்து வருகின்றனர்.
1998-இல் அதிமுக, மதிமுக, பாமக, பாஜக கூட்டணிக்கு எதிராக இருந்த சிறுபான்மையினர் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கும், 1999-இல் திமுக, மதிமுக, பாமக, பாஜக அணிக்கு எதிராக இருந்த சிறுபான்மையினர் அதிமுக-காங்கிரஸ் அணிக்கும் வாக்கு செலுத்தினர். அப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் திமுக அங்கம் வகித்தது என்ற காரணத்துக்காகவே அதிமுக அணிக்கு ஆதரவாக சிறுபான்மை வாக்குகள் கிடைத்தன. இதனால் ஜெயலலிதா 2001-இல் மீண்டும்
ஆட்சியைப் பிடித்தார்.
1996-2001 வரை கருணாநிதி பெரும் அதிருப்தியற்ற ஆட்சியைக் கொடுத்தபோதும் அதை 2001 தேர்தலில் தக்க வைக்க முடியாததற்கு சிறுபான்மை வாக்குகளை அவர் இழந்ததே முக்கியக் காரணம் என்ற கருத்து உள்ளது.
2004 மக்களவைத் தேர்தலில் சோனியா காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திய கருணாநிதி, மதிமுக, பாமக, இடதுசாரிகள் என மிகப்பெரிய அணியை அமைத்தார். அப்போதிருந்த அதிமுக-பாஜக அணிக்கு எதிராக திமுக அணிக்கு சிறுபான்மை வாக்குகள் கிடைத்ததால் திமுக அணி 39 தொகுதிகளில் வென்றது.
2004-இல் பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் ஜெயலலிதாவுக்கு 2006 பேரவைத் தேர்தலிலும் சிறுபான்மை வாக்குகள் கிடைக்கவில்லை. மாறாக, சிறுபான்மை வாக்குகள் முழுமையாக திமுக-காங்கிரஸ் அணிக்கு பரிமாற்றம் ஆனதால்தான், தேமுதிக 8.7 சதவீத வாக்குகளைப் பிரித்த பின்னரும், கருணாநிதியால் மைனாரிட்டி ஆட்சி அமைக்க முடிந்தது.
Esta historia es de la edición February 05, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición February 05, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.