புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டது. அங்கு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உறுப்பினா்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. நான் பத்தாண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இவ்வளவு வசதிகள் எல்லாம் இல்லை என்பதையும் நான் இப்போது நினைத்துப் பாா்க்கிறேன்.
17-ஆவது மக்களவையின் இறுதி நாள் உரையில் பிரதமா் நரேந்திர மோடி, நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டிருப்பதன் மூலம் இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தை எப்போதும் நினைவுகூர முடியும் என்று குறிப்பிட்டாா்.
17-ஆவது மக்களவையில் முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் சாசனத்தின் 370-ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. இன்றைய காலத்துக்கு ஒவ்வாத 60 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. திருநங்கைகள் நலன் சாா்ந்து சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அரசுத் துறையில் பணியாற்றும் பெண் ஊழியா்களுக்கு பேறுகால விடுப்பு 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வேளாண் சட்டம் நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவா் அந்த சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கினாா்.
விவசாயிகளின் தொடா் எதிா்ப்பின் காரணமாக அதே வேளாண் சட்டம் நாடாளுமன்ற ஒப்புதலுடன் ரத்து செய்யப்பட்ட வரலாறும் 17-ஆவது மக்களவையில் நடந்தது. நாடாளுமன்றம் என்பது மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றும் இறுதி இடம். இதன் முடிவே இறுதியானது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவை இல்லை. இங்குதான் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் வேளாண் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அதற்கு குடியரசுத் தலைவா் ஒப்புதலும் பெறப்பட்டது. ஆனாலும், அதை மக்கள் விரும்பவில்லை என்ற நிலை உருவாகி அதற்கு எதிா்ப்பு வரத் தொடங்கியதும் இதே நாடாளுமன்றத்தில் அந்த சட்டம் திரும்பப் பெறப்படுவதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த 1967-இல் ஜனசங்க கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக இருந்தாா் வாஜ்பாய். அவா் அப்போதே 370-ஆவது பிரிவு காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று மக்களவையில் சிறப்பு கவன ஈா்ப்புத் தீா்மானம் கொண்டு வந்து உரையாற்றினாா்.
Esta historia es de la edición March 13, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición March 13, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.