ஆயினும், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஏற்கெனவே பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்புவதாக அறிவித்துவிட்டன. இதனைத் தனது தேர்தல் அறிக்கையில் முக்கிய அறிவிப்பாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்ததால், கர்நாடகமும் தெலங்கானாவும் இதே திசையில் செல்லத் தயாராகி வருகின்றன.
மத்திய அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி, அரசு ஊழியர்களின் தொடர் போராட்டத்தின் பயனாக ஒவ்வொரு மாநிலமாக பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறி வருகின்றன. இதைக் காணும்போது, மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. எனினும் ஓபிஎஸ் திட்டத்திற்கு சில தடைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
உதாரணமாக, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செüதரி, மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, "ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (பிஎஃப்ஆர்டிஏ) 2015 மற்றும் 2023 விதிமுறைகளின்படி, ஓபிஎஸ் முறைக்கு மாறும் மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களிலிருந்து என்பிஎஸ்-சுக்காக செலுத்தப்பட்ட தொகையை ஓய்வூதிய நிதியிலிருந்து திரும்பப் பெற இயலாது' என்று கூறியிருக்கிறார்.
இந்த விவகாரத்தை ஆழமாக ஆய்வு செய்வதற்கு முன்னதாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பற்றி சுருக்கமாக நினைவுகூர்வது அவசியம். ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே அரசு ஊழியர்கள் ஓய்வூதியத்தைப் பெற்றிருக்கிறார்கள்; முதல் முதலாக 1881-இல் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அறிமுகம் செய்யப்பட்டது.
அரசு நிறுவனங்களுக்கான அரச ஆணையம் (லீ ஆணையம்) 1924-இல் செய்த பரிந்துரையில், இந்தியாவில் ஆங்கிலேய அரசில் பணி புரிந்து ஓய்வு பெறுபவருக்கு, அவர் கடைசி மாதத்தில் வாங்கிய ஊதியத்தில் சரிபாதி தொகையை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்த லீஆணையப் பரிந்துரையை 1935-இல் அன்றைய ஆங்கிலேய - இந்திய அரசு சட்டபூர்வமாக அங்கீகரித்தது. அதாவது, நாட்டிலுள்ள அரசு ஊழியர்கள் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வூதியத்தை (பழைய ஓய்வூதியத் திட்டத்தில்) பெற்று வந்திருக்கிறார்கள்.
Esta historia es de la edición March 27, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición March 27, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.