தேர்தல் ஆணையத்தை இன்று சந்திக்கிறது 'இந்தியா' கூட்டணி
Dinamani Chennai|June 02, 2024
மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அது தொடா்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து முறையிட தோ்தல் ஆணைய அதிகாரிகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) சந்திக்க எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தலைவா்கள் முடிவு செய்துள்ளனா்.
தேர்தல் ஆணையத்தை இன்று சந்திக்கிறது 'இந்தியா' கூட்டணி

இந்தத் தகவலை, தில்லியில் தனது இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணி தலைவா்கள் கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலில் இறுதிக் கட்டமான ஏழாம் கட்ட வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற்ற நிலையில், ‘இந்தியா’ கூட்டணி தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, அக் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) தலைவா் சரத் பவாா், சமஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி மூத்த தலைவா் தேஜஸ்வி யாதவ், தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல் பகவந்த் மான், ஜாா்க்கண்ட் முதல்வா் சம்பயி சோரன், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் மூத்த தலைவா் கல்பனா சோரன், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் டி.ராஜா மற்றும் சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) பிரதிநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி பங்கேற்கவில்லை. மாநிலத்தில் தோ்தல் நடைபெறும் நிலையில், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று அவா் ஏற்கெனவே தெரிவித்திருந்தாா். அதுபோல, உடல்நிலை காரணங்களைச் சுட்டிக்காட்டி ஜம்மு-காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெகபூபா முஃப்தியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

Esta historia es de la edición June 02, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición June 02, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 37-ஆக உயர்வு
Dinamani Chennai

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 37-ஆக உயர்வு

லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதியில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக உயா்ந்தது.

time-read
1 min  |
September 22, 2024
எஃப்ஐஎச் ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் சிங்
Dinamani Chennai

எஃப்ஐஎச் ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் சிங்

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி மீண்டும் வெண்கலம் வெல்ல உதவிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஎச்) ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
September 22, 2024
Dinamani Chennai

நிலையான வாழ்க்கை முறைக்கு உலகளாவிய மாற்றம்

நிலையான வாழ்க்கை முறைகளை உலக அளவில் ஏற்றுக் கொண்டால் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பல சவால்களைச் சமாளிக்க முடியும்' என்று ஐ.நா.வின் உச்சி மாநாட்டில் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

time-read
1 min  |
September 22, 2024
சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் எங்களை அச்சுறுத்துகின்றனர்
Dinamani Chennai

சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் எங்களை அச்சுறுத்துகின்றனர்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான ஆா்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமா்ந்திருந்தவா்கள் தற்போது எங்களை அச்சுறுத்துகின்றனா்’ என்று விமா்சித்தாா்.

time-read
1 min  |
September 22, 2024
Dinamani Chennai

இந்திய பெருங்கடலில் போர்த்திறனை மேம்படுத்த கடற்படை முடிவு

இந்தோ-பசிபிக்பிராந்தியத்தின் புவிசார் அரசியல் மற்றும் இந்திய பெருங்கடலில் அதிகரித்து வரும் சீன ஊடுருவலின் பின்னணியில் அங்கு இந்தியாவின் போர்த் திறனை மேம்படுத்த கடற்படைதளபதிகள் முடிவெடுத்துள்ளனர்.

time-read
1 min  |
September 22, 2024
பிரதமர் மோடியைக் கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது
Dinamani Chennai

பிரதமர் மோடியைக் கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது

'பிரதமர் நரேந்திர மோடி மீது பாகிஸ்தானுக்கு உள்ள பயம் காரணமாக எல்லை பகுதிகளில் தற்போது அமைதி நிலவி வருகிறது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

time-read
1 min  |
September 22, 2024
மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி
Dinamani Chennai

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி

'க்வாட்' உச்சிமாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சனிக்கிழமை சென்றார்.

time-read
2 minutos  |
September 22, 2024
3 ஆண்டுகளில் 2.7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
Dinamani Chennai

3 ஆண்டுகளில் 2.7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

கடந்த 3 ஆண்டுகளில் 238 தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 2.07 லட்சம் பேருக்கு வேலை வழங் கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 22, 2024
அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை
Dinamani Chennai

அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை

அதிமுகவில் இணைப்பு பேச்சுக்கே இடமில்லை என்று கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 22, 2024
மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முன் வர வேண்டும்
Dinamani Chennai

மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முன் வர வேண்டும்

மாணவர்கள் சொந்தமாக புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் அளவுக்கு தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வலியுறுத்தினார்.

time-read
1 min  |
September 22, 2024