கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார்.
மேலும், அவர்களது பெயரில் ரூ.5 லட்சம் வரை வைப்புத் தொகை வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நேரமில்லாத நேரத்தில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதில், கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), ஜி.கே.மணி (பாமக), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), வீ.நாகைமாலி (மார்க்சிஸ்ட்), நயினார் நாகேந்திரன் (பாஜக), வைத்திலிங்கம் (ஓபிஎஸ் அணி), சதன் திரு மலைக்குமார் (மதிமுக), சிந்தனைச் செல்வன் (விசிக), ராமச்சந்திரன் (இ.கம்யூ.), அப்துல் சமது (மனித நேய மக்கள் கட்சி) ஆகியோர் பேசினர்.
அவரது விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 164 நபர்களில் 117 பேர் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 47 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய கோவிந்தராஜ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்.
சட்டரீதியாக நடவடிக்கை: எதிர்கால சமுதாயத்தை மிக மோசமான வகையில் பாதிக்கும் போதைப் பொருள்களை எந்தவ கையிலும் அனுமதிக்க இயலாது. அவற்றை விற்பனை செய்பவர்கள் மீது சட்டரீதியாக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இதுபோன்ற சம்பவம் சிபிசிஐடி விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.
Esta historia es de la edición June 22, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición June 22, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 37-ஆக உயர்வு
லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதியில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக உயா்ந்தது.
எஃப்ஐஎச் ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் சிங்
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி மீண்டும் வெண்கலம் வெல்ல உதவிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஎச்) ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நிலையான வாழ்க்கை முறைக்கு உலகளாவிய மாற்றம்
நிலையான வாழ்க்கை முறைகளை உலக அளவில் ஏற்றுக் கொண்டால் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பல சவால்களைச் சமாளிக்க முடியும்' என்று ஐ.நா.வின் உச்சி மாநாட்டில் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் எங்களை அச்சுறுத்துகின்றனர்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான ஆா்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமா்ந்திருந்தவா்கள் தற்போது எங்களை அச்சுறுத்துகின்றனா்’ என்று விமா்சித்தாா்.
இந்திய பெருங்கடலில் போர்த்திறனை மேம்படுத்த கடற்படை முடிவு
இந்தோ-பசிபிக்பிராந்தியத்தின் புவிசார் அரசியல் மற்றும் இந்திய பெருங்கடலில் அதிகரித்து வரும் சீன ஊடுருவலின் பின்னணியில் அங்கு இந்தியாவின் போர்த் திறனை மேம்படுத்த கடற்படைதளபதிகள் முடிவெடுத்துள்ளனர்.
பிரதமர் மோடியைக் கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது
'பிரதமர் நரேந்திர மோடி மீது பாகிஸ்தானுக்கு உள்ள பயம் காரணமாக எல்லை பகுதிகளில் தற்போது அமைதி நிலவி வருகிறது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி
'க்வாட்' உச்சிமாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சனிக்கிழமை சென்றார்.
3 ஆண்டுகளில் 2.7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
கடந்த 3 ஆண்டுகளில் 238 தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 2.07 லட்சம் பேருக்கு வேலை வழங் கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்தார்.
அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை
அதிமுகவில் இணைப்பு பேச்சுக்கே இடமில்லை என்று கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முன் வர வேண்டும்
மாணவர்கள் சொந்தமாக புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் அளவுக்கு தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வலியுறுத்தினார்.