பிரிட்டன் பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வலுவான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் 58-ஆவது பிரதமராக தொழிலாளர் கட்சியின் தலைவர் கியெர் ஸ்டார்மர் (61) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.
பிரிட்டனில் ஆளுங்கட்சியாக இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி, தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத தோல்வியைச் சந்தித்தது. இத்தோல் விக்கு பொறுப்பேற்று, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தரிஷி சுனக், பிரதமர் பதவியையும் ராஜி நாமா செய்தார்.
பிரிட்டனில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவந்த நிலையில், அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
‘பிரெக்ஸிட்'-க்கு பிறகு முதல் தேர்தல்: பிரிட்டன் நாடாளுமன்றக் கீழவையான மக்களவைக்கு (ஹவுஸ் ஆஃப்காமன்ஸ்) வியாழக் கிழமை தேர்தல் நடைபெற்றது.
ஐரோப்பியயூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய (பிரெக்ஸிட் பிறகு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தல் இதுவாகும். மொத்தமுள்ள 650 தொகுதிகளில் உள்ளூர் நேரப்படி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. சுமார் 4.6 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த இத்தேர்தல், வாக்குச் சீட்டு முறையில் நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிந்த பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக் கப்பட்டன.
தொழிலாளர் கட்சி அமோகம்: மொத்தமுள்ள 650 தொகுதிகளில் தொழிலாளர் கட்சி 412 இடங்களைக் கைப்பற்றியது. பெரும்பான் மைக்கு 326 தொகுதிகள் தேவை என்ற நிலையில், அக்கட்சிக்கு மிகப்பெரியபலம் கிடைத்துள்ளது.அதே நேரம், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 121 இடங்களே கிடைத்தன.
லிபரல் டெமாக்ரட்ஸ் (எல்.டி.) கட்சி 71 இடங்களிலும், ஸ்காட்டிய தேசியக் கட்சி (எஸ்.என்.பி.) 9 இடங்களிலும், பிறகட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 37 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
Esta historia es de la edición July 06, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 06, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
விளையாட்டுப் பல்கலை. 14-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ரவி, துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு
போருக்கு தயாராகும் இஸ்ரேல் - ஈரான்
‘ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய கிழக்கை அடியோடு மாற்றியமைக்க இஸ்ரேலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்தியாவை வென்றது நியூஸிலாந்து
மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெள்ளிக்கிழமை வென்றது.
தில்லி மருத்துவர் சுட்டுக் கொலை: மேலும் 2 சிறுவர்கள் கைது
தென்கிழக்கு தில்லியின் களிந்தி குஞ்ச் பகுதியில் உள்ள நா்ஸிங் ஹோமில் மருத்துவா் ஒருவா் வியாழக்கிழமை அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய மேலும் 2 சிறுவா்களை தில்லி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கனிம வளங்கள் மீது மாநிலங்களுக்கு வரி விதிப்பு அதிகாரம்: மறுஆய்வு மனுக்களை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
கனிம வளங்கள், கனிம வளம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுகளுக்கு சட்ட அதிகாரம் உள்ளது என கடந்த ஜூலை 25-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
மழைப் பொழிவால் அதிகரிக்கும் எலிக் காய்ச்சல்: 1,500 பேர் பாதிப்பு
தமிழகம் முழுவதும் பரவலாக மழைப் பொழிவு உள்ள நிலையில், லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் பாதிப்பு தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
50% இடஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்க வேண்டும்
மத்திய அரசுக்கு சரத் பவார் வலியுறுத்தல்|
வீட்டுவசதி வாரிய நில எடுப்பிலிருந்து 2,002 ஏக்கர் விடுவிப்பு
முதல்வருக்கு பொது மக்கள் நேரில் நன்றி
கோயில் அர்ச்சகர்கள் வாரிசுகளின் மேற்படிப்புக்கு உதவித் தொகை
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
2 தீயணைப்பு நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று
இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் உள்ள 2 தீயணைப்பு நிலையங்களுக்கு ஐஎஸ்ஒ தரச் சான்று கிடைத்துள்ளது.