முன்னதாக, அவரது உடலுக்கு அக்கட்சியின் தேசியத் தலைவா் மாயாவதி உள்ளிட்ட தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் வெள்ளிக்கிழமை மாலை ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டாா். அவரது உடலை பெரம்பூா் பந்தா் காா்டன் தெருவில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சனிக்கிழமை மனு அளித்தாா். அந்த மனு பரிசீலிக்கப்படாததால், சென்னை உயா்நீதிமன்றத்தில் அவா் அவசர வழக்கை தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா்கள் சங்கரசுப்பு, ஆா்.கிருஷ்ணகுமாா் ஆகியோா் ஆஜராகி, ‘2,700 சதுர அடி நிலம் கொண்ட பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டனா்.
அதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ‘மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலித்த மாநகராட்சி நிா்வாகம், அதை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. அதற்கு மாறாக மூலகொத்தளம் மயானத்தில், அரசு இடம் ஒதுக்கியுள்ளது. அங்கு ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்யலாம். ஏற்கெனவே மொழிப்போா் தியாகி தாளமுத்து நடராஜன் சமாதியும் அங்குதான் உள்ளது’ என்று கூறினாா்.
Esta historia es de la edición July 08, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 08, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
வங்கதேசம்: கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது
வங்கதேச மாணவா் போராட்டத்தின்போது பொற்கொல்லா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அந்த நாட்டின் முன்னாள் வா்த்தகத் துறை அமைச்சா் திப்பு முன்ஷியும், நாடாளுமன்ற முன்னாள் அவைத் தலைவா் ஷிரின் ஷா்மின் சௌத்ரியும் கைது செய்யப்பட்டனா்.
3-ஆவது சுற்றில் சபலென்கா, கௌஃப்
ஜோகோவிச் புதிய சாதனை
ரேங்கிங் சுற்றில் ஷீத்தல் தேவிக்கு 2-ஆம் இடம்
பாரீஸ் பாராலிம் பிக் போட்டியில் மகளிர் வில்வித் தைக்கான ரேங்கிங் சுற்றில் இந்தியாவின் ஷத்தல் தேவி 2-ஆம் இடம் பிடித்தார். இதன் மூலம் அவர், நேரடியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதிபெற்றார்.
கேரளம்: மார்க்சிஸ்ட் எம்எல்ஏ முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு
பதவி விலக வலியுறுத்தல்
இஸ்லாமாபாதில் எஸ்சிஓ மாநாடு: பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு
பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் அக்டோபா் மாதம் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடிக்கு அந்நாட்டு அரசு வியாழக்கிழமை அழைப்பு விடுத்தது.
தேசிய கல்விக் கொள்கையின் கீழ் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழக வளாகம்
பிரிட்டன் கல்வி நிறுவனத்துக்கு ஒப்புதல்
மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழகம் முதன்மை மாநிலம்
உணவு பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்
தமிழ்நாட்டில்தான் மின்சாரக் கட்டணம் குறைவு
மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில்தான் மின்சார கட்டணம் குறைவாக உள்ளது என்று குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.