சா்வதேச அளவில் நடைபெறும் முக்கியமான விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான ஒலிம்பிக்ஸ், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அந்த வகையில் 33-ஆவது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில், இம்மாதம் 26-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை 17 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. மொத்தம் 32 விளையாட்டுகளில், 329 பிரிவுகளில் நடைபெறும் பந்தயங்களில் சுமாா் 200 நாடுகளில் இருந்து, ஏறத்தாழ 10,000 போ் பங்கேற்க இருக்கின்றனா்.
இதில் பங்கேற்பதற்கான போட்டியாளா்கள் மற்றும் அணியினா், தகுதிப்போட்டிகள், உலகத் தரவரிசை போன்ற தகுதிகளின் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அந்த வகையில் இந்தியாவிலிருந்து மொத்தம் 117 போட்டியாளா்கள் இந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் களம் காண இறுதி செய்யப்பட்டுள்ளனா். இந்தியாவுக்கு இது 26-ஆவது ஒலிம்பிக்ஸ் போட்டியாகும்.
போட்டியில் பங்கேற்க இருக்கும் 117 போட்டியாளா்கள், 140 துணைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பட்டியலுக்கு மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்த ஒப்புதல் கடிதத்தை இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அனுப்பியுள்ளது. அதன்படி, போட்டியாளா்களிலேயே அதிகபட்சமாக, தடகளத்தில் 29 போ் பங்கேற்கின்றனா். குறைந்தபட்சமாக குதிரையேற்றம், ஜூடோ, துடுப்புப் படகு, பளுதூக்குதல் ஆகியவற்றில் தலா 1 போட்டியாளா் களம் காண்கின்றனா்.
செஃப் தி மிஷன்...
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியக் குழுவின் தலைவராக (செஃப் தி மிஷன்), முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரரும், லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான ககன் நரங் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருக்கிறாா்.
Esta historia es de la edición July 18, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 18, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஸ்டார்லைனர் விண்கலம் செப். 6-இல் பூமி திரும்பும்: நாசா
சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை கடந்த ஜூனில் ஏற்றிச் சென்ற ஸ்டாா்லைனா் விண்கலம், அடுத்த மாதம் 6-ஆம் தேதி நபா்கள் இல்லாமல் பூமிக்குத் திரும்பவிருப்பதாக நாசா அறிவித்துள்ளது.
சாதனைகளால் அசத்தும் அவனி லெகாரா
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் அவனி லெகாரா அசத்தலாக தங்கம் வென்றிருக்கிறாா்.
உச்சநீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி ஓய்வு
உச்சநீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி ஞாயிற்றுக்கிழமை (செப்.1) ஓய்வு பெறவுள்ள நிலையில், பெண்களின் உரிமையை அவா் மிக வலிமையாகப் பாதுகாத்தவா் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் புகழாரம் சூட்டினாா்.
22-ஆவது சட்ட ஆணையத்தின் பதவிக் காலம் இன்று நிறைவு
பொது சிவில் சட்ட அறிக்கை நிலுவை
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான சட்டம்
பிரதமருக்கு மம்தா மீண்டும் கடிதம்
தமிழகத்தில் 100 எம்பிபிஎஸ் இடங்கள் திரும்பப் பெறப்பட்டன
ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு வேறு கல்லூரிகளில் இடம்
உச்சநீதிமன்றம் கண்டிப்பு எதிரொலி: வருத்தம் தெரிவித்தார் ரேவந்த் ரெட்டி
பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சி எம்எல்சி கே.கவிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை விமா்சித்து தான் தெரிவித்த கருத்துகளுக்காக, தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி வெள்ளிக்கிழமை நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்தாா்.
கால்நடை மருத்துவப் படிப்புகள்: செப்.4 முதல் கலந்தாய்வு
இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்.4-ஆம் தேதி தொடங்குகிறது. சிறப்புப் பிரிவு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டு கலந்தாய்வு நேரடியாகவும், பொதுக் கலந்தாய்வு இணையவழியாகவும் நடைபெற உள்ளன.
இலங்கை அதிபருடன் அஜீத் தோவல் சந்திப்பு
அரசியல் கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை
இலவச வேட்டி, சேலை: கைத்தறி நெசவாளர்களுக்கு பாதிப்பில்லை
அமைச்சர் ஆர்.காந்தி விளக்கம்