
அணியின் டாப், மிடில் ஆா்டா் பேட்டா்களை வங்கதேச வேகப்பந்து வீச்சாளா் ஹசன் மஹ்முத் முற்றிலுமாக முடக்க, 144 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. 7-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ரவிச்சந்திரன் அஸ்வின் - ரவீந்திர ஜடேஜா பாா்ட்னா்ஷிப், அணியை சரிவிலிருந்து மீட்டது.
அஸ்வின் தனது 6-ஆவது டெஸ்ட் சதத்தையும், சொந்த ஊரான சென்னையில் 2-ஆவது சதத்தையும் பதிவு செய்தாா். முதல் நாள் முடிவில் அவரோடு ஆட்டமிழக்காமல் நிற்கும் ஜடேஜாவும், 86 ரன்களுடன் தனது 5-ஆவது டெஸ்ட் சதத்தை நெருங்கியிருக்கிறாா்.
ஹசன் மஹ்முத் ஆதிக்கம்; ஜெய்ஸ்வால் நிதானம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம், பந்துவீசத் தீா்மானித்தது.
இந்தியாவின் இன்னிங்ஸை யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சா்மா தொடங்கினா். நிதானமாக ஆடிய இவா்களில் ரோஹித், 6-ஆவது ஓவரில் ஹசன் மஹ்முத் பந்துவீச்சில் ஷான்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். அவா் 1 பவுண்டரியுடன் 6 ரன்களே எடுத்திருந்தாா்.
தொடா்ந்து வந்த ஷுப்மன் கில்லும், ஹசன் மஹ்முத் வீசிய 8-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் லிட்டன் தாஸ் கைகளில் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். 4-ஆவது பேட்டராக விராட் கோலி விளையாட வர, ரசிகா்கள் உற்சாக கோஷத்துடன் வரவேற்றனா்.
ஆனால், அவரையும் 6 ரன்களுக்கே பெவிலியனுக்கு அனுப்பி ரசிகா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியது வங்கதேசம். அவரும் ஹசன் மஹ்முத் வீசிய 10-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்தாா். இதனால் 34 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து நின்றது இந்தியா.
Esta historia es de la edición September 20, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 20, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
வேளச்சேரி சாலையிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ. நீளத்துக்கு மேம்பாலம்
சென்னை வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ. நீளத்துக்கு ரூ. 310 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து போலீஸாருக்கு மோர் வழங்கும் திட்டம் - காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்
கோடைக்காலம் தொடங்கியதையொட்டி, போக்குவரத்து போலீஸாருக்கு மோர் வழங்கும் திட்டத்தை சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் ஏ.அருண் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

10 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்
தமிழகத்தில் ஆலந்தூர், குன்னூர் உள்ளிட்ட 10 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இபிஎஸ்க்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழக பட்ஜெட்: தொழில்துறையினரின் வரவேற்பும், எதிர்ப்பும்
தமிழக பட்ஜெட் குறித்து தொழில்துறையினர் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

மகளிர், மாணவர்களுக்கு புதிய திட்டங்கள்
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிர், மாணவர்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவுக்கட்டணம் குறைப்பு, மாணவர்களுக்கு மீண்டும் கணினி போன்ற திட்டங்களை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

கேரளம்: அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்
கேரள மாநிலம், களமசேரியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர் விடுதி அறைகளில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அரசியல்... அன்றும் இன்றும்!
இன்றைய அரசியல்வாதிகள் மக்களைப் பற்றி கவலைப்படுவது இல்லை. மக்களிடம் போவதும் இல்லை; மக்களை மதிப்பதும் இல்லை; தேடிவரும் மக்களைச் சந்திப்பதும் இல்லை. மக்களின் வாக்குகளைப் பெறுவதே இவர்களின் நோக்கமாகும்.
குடிக்க உகந்த குடிநீர்!
இந்திய நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பச் சந்தையில் 37 சதவீதத்தை மறு ஊடுகை (ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்) தொழில்நுட்பம் ஆக்கிரமித்துள்ளது என்று புணேவில் செயல்படும் சந்தையியல் நுண்ணறிவு நிறுவனமான ட்ரான்ஸ்பெரன்சி மார்க்கெட் ரிசர்ச் நிறுவனத்தின் 2017-ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது.
இந்திய பெருநகரங்கள், வெளிநாடுகளில் புத்தகக் காட்சி
தில்லி, மும்பை உள்ளிட்ட இந்திய பெருநகரங்கள் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தகக் காட்சிகள் நடைபெறும் என்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.