
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்தை தமிழகத்தின் அரவிந்த் சிதம்பரம் கைப்பற்றினார். சேலஞ்சர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டத்தை பிரணவ் வசப்படுத்தினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், செஸ் பேஸ், எம்ஜிடி 1 சார்பில் கோட்டூர்புரத்தில் கடந்த 5-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியின் கடைசி மற்றும் 7-ஆவது சுற்று ஆட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றன.
இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் முதல் போர்டில் அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன், ஈரானின் அமீன் தபதாபேயி மோதிய ஆட்டம் 15-ஆவது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
2-ஆவது போர்டில் செர்பியாவின் அலெக்ஸி சரானா, இந்தியாவின் விதித் குஜராத்தி ஆட்டம் 48-ஆவது நகர்த்தலின் போது டிரா ஆனது.
3-ஆவது போர்டில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரான்ஸின் மாக்சிம் வாச்சியர் லாதேரவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் அர்ஜுன் எரிகைசி 38-ஆவது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிரா செய்தார்.
4-ஆவது போர்டில் ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூ, இந்தியாவின் அரவிந்த் சிதம்பரத்தை எதிர்கொண்டார். இதில் அரவிந்த் சிதம்பரம் 64-ஆவது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.
Esta historia es de la edición November 12, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 12, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
பஞ்சாப் சிவசேனை தலைவர் கொலை: மூவரை சுட்டுப் பிடித்த போலீஸார்
பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனை கட்சியின் மாவட்டத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மூவரை போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர்.
பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை பயணம்
பிரதமர் மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு வருகை தரவிருப்பதாக, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் சனிக்கிழமை தெரிவித்தார்.

தமிழகத்தில் ரூ.1,112 கோடியில் இரு மின்னணு தொழிற்சாலைகள்
தமிழகத்தில் இரண்டு இடங்களில் மின்னணு தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரயில்வே, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மதச்சார்பற்ற எதிர்க்கட்சி கூட்டணி அவசியம்: பிரகாஷ் காரத்
எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டது. மாநிலத் தேர்தலுக்கானது அல்ல. எனவே, மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கப்படுவது அவசியம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்கால தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.
மாசாணியம்மன் கோயில் நிதியில் ரிசார்ட் கட்டுவதாக பிறப்பித்த அரசாணை வாபஸ்: வழக்கு முடித்துவைப்பு
மாசாணியம்மன் கோயில் நிதியில் இருந்து உதகையில் ரிசார்ட் கட்டுவதாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டதையடுத்து வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்நியச் செலாவணி கையிருப்பு 65,396 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 65,396 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
ரயில்வேக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்
சென்னையில் 3 இடங்களில் விபத்து நடக்கும் என தெற்கு ரயில்வேக்கு மின்னஞ்சல் அனுப்பிய நபரை ரயில்வே போலீஸார் தேடி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்கள் சேர்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை
கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.65,760-க்கு விற்பனையானது.

பாலின பேதமற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும்
மாணவர்கள் மத்தியில் பாலின பேதமற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என அவதார் குழுமத்தின் தலைவர் சௌந்தர்யா ராஜேஷ் தெரிவித்தார்.