மேற்காசியாவின் காஸா உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் செய்து கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் இயக்கத்தினரைக் குறிவைத்தே இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் கூறினாலும், இதில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1948-க்கும் முன்னர் வரை பாலஸ்தீனப் பகுதியானது, பிரிட்டனின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லரின் அதிரடி நடவடிக்கையால் உயிருக்குப் பயந்து அந்த நாட்டிலிருந்து வெளியேறிய யூதர்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். இத்தகைய சூழலில், அகதிகளாகப் பரிதவித்த யூத மக்கள் அனைவரும் அமெரிக்காவின் தலையீட்டால் பாலஸ்தீனத்தின் மற்றொரு பகுதியில் குடியமர்த்தப்பட்டனர்.
ஏற்கெனவே, பாலஸ்தீனப் பகுதியில் நீண்ட காலமாக வசித்துவரும் இஸ்லாமியர்களுக்கும், புதிதாகக் குடியமர்த்தப்பட்ட யூதர்களுக்கும் இடையே அவ்வப்போது பிரச்னைகள் எழுந்தன. இதையடுத்து, யூதர்கள் குடியமர்த்தப்பட்ட பகுதியை தனி நாடாக, அதாவது இஸ்ரேல் என்ற புதிய நாட்டை உருவாக்க அமெரிக்கா முன்முயற்சிகளை மேற்கொண்டது. அமெரிக்கா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, இஸ்ரேல் நாட்டுக்கு ஐ.நா. சபையின் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது.
ஆனால், இஸ்லாமியர்கள் நீண்ட காலமாக வசித்துவரும் பகுதிகளை உள்ளடக்கிய பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என இந்தியா தலைமையிலான அணிசாரா நாடுகள் குரல் கொடுத்தன. ஆனால், இதற்கு ஐ.நா. சபையின் அங்கீகாரம் கிடைக்காததால், பாலஸ்தீன பிரச்னை இன்னமும் நீடிக்கிறது.
Esta historia es de la edición March 22, 2025 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición March 22, 2025 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

ஐசிஎஃப் ரயில் கண்காட்சி நிறைவு
சென்னை ஐசிஎஃப்- பில் 3 நாள்கள் நடைபெற்ற ரயில் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது. இந்தக் கண்காட்சியை நூற்றுக்கணக்கானோர் பார்வையிட்டனர்.
அதிகரிக்கும் வெறிநாய்க்கடி பாதிப்புகள்!
மழை வெள்ளம், அடர் பனி ஆகியவற்றைத் தொடர்ந்து வெயிலின் கொடுமையை எதிர்கொள்ள மக்கள் அனைவரும் தயாராகிவரும் நேரத்தில் திடீரென்று ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி பிரச்னை தலைதூக்கியுள்ளது.

1,000 பேருக்கு நல உதவிகள்: அமைச்சர் நாசர் வழங்கினார்
திருவேற்காட்டில் திமுக சார்பில் 1,000 பேருக்கு நல உதவிகளை அமைச்சர் சா.மு.நாசர் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
மக்கள் நலனைவிட இணையவழி விளையாட்டு நிறுவனங்கள்தான் அரசுக்கு முக்கியமா? - ராமதாஸ் கேள்வி
மக்கள் நலனை விட, இணையவழி சூதாட்ட நிறுவனங்கள்தான் அரசுக்கு முக்கியமா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்பட மூவர் கைது
லஞ்ச வழக்கில் சிபிஐ நடவடிக்கை
பொதுத்துறை வங்கிகளின் பங்கு ஈவுத்தொகை 33% அதிகரிப்பு
பொதுத்துறை வங்கிகள் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் பங்கு ஈவுத்தொகை 2023-24 நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

நாடாளுமன்றம் - அன்றும் இன்றும்..
நாடாளுமன்ற ஜனநாயகம் வலுப்பட உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜனநாயக அணுகுமுறையுடன் பதில் சொல்லப்பட வேண்டும். குறிப்பிட்ட விஷயங்களை மட்டும்தான் சொல்லுவேன் என்று பிடிவாதம் பிடிப்பது ஜனநாயகமாகாது.

மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு
மியூசிக் அகாதெமியின் 99-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயலின் இசைக் கலைஞர் ஆர்.கே. ஸ்ரீராம்குமாருக்கு 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்படவுள்ளது.

அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தவே தேசிய கல்விக் கொள்கை
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை உயர்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.

டி20 தொடரை வென்றது நியூஸிலாந்து: பாகிஸ்தானுக்கு வரலாற்று தோல்வி
பாகிஸ்தானுக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.