
கொல்கத்தா என்றாலே காளிகாட் காளிகோவில், டிராம் ரெயில் நினைவுக்கு வரும். கொல்கத்தாவிற்கு சுற்றுலா செல்கையில், சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகமும் (Sundarbans National Park) பார்க்க வேண்டியது அவசியம்.
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் அமைந்துள்ள உயிர்க்கோளக் காப்பகம். கல்கத்தாவிலிருந்து தென்கிழக்குத்திசையில் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. உலகளவில் பெரும்பரப்பளவில் காணப்படும் சதுப்புநிலக்காடுகளைக் கொண்ட சுந்தரவனம், யுனெஸ்கோவின் மனிதனும் உயிர்க்கோளமும் (MAB) என்ற திட்டத்தின் கீழ் 1989ஆம் ஆண்டு உயிர்க்கோளக் காப்பகமாகவும், உலக பாரம்பரியக் களமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தென் கொல்கத்தாவில் கங்கையின் கழிமுகத்தில் காணப்படும் இதன் பரப்பளவு, 9630 ச.கி.மீட்டராகும். உலகளவில் புலிகளுக்கு உறைவிடம் தரும் மிகப்பெரிய சதுப்புநிலகாடுகள் இக்காப்பகத்தில் மட்டும் காணப்படுகிறது. வங்காளப்புலி காப்புப்பகுதி, சுந்தரவனம் தேசியப்பூங்கா ஆகியன இதன் மையமண்டலத்தில் அமைந்து உள்ளன. மேலும் சச்னேகாலி வனவிலங்கு சரணாலயம், லோத்தியன் தீவு வனவிலங்கு சரணாலயம் மற்றும் ஹாலிடே தீவு வனவிலங்கு சரணாலயம் ஆகிய மூன்று சரணாலயங்களும் இக்காப்பகத்தினுள் உள்ளன. பார்க்க இரண்டு நாட்கள் தேவைப்படும். சுற்றுலா பேக்கேஜ் வழியாகவும் செல்லலாம்.
எந்த மாநிலத்திலும் இல்லாத டிராம் ரெயில் பயணம் மேற்கொள்ள கொல்கத்தா வரும் ரெயில் பயணிகள் விரும்புகின்றனர்.
Esta historia es de la edición December 2024 de Penmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 2024 de Penmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

ஸ்ரீ வனபத்ரகாளி!-
பாண்டவரும் கௌரவரும் சூதின் காரணமாக பகை கொள்வதற்கு முந்தைய காலம் அது.

பூசத்திருவிழாவும் ஈசன் திருநாளும்!
முருகாவென ஓர் தரம் ஓதடியார் முடிமேல் இணை தாள் அருள்வோனே... என்று ஒரு முறை அவரை அழைத்தால் போதும்,தன் திருப்பாத மலரை அடியார் தலையில் வைத்து அருளுபவன் ஆறுமுகப் பெருமான்! மாமயிலோன் கால் பட்டழிந்தது என் தலைமேல் அயன் கையெழுத்தே.. என்று அருணகிரியார் கூறுவது போல், நம் தீவினைகளை அழித்து சீர்மிகு வாழ்வினை நல்குபவன் சிவபாலன்! அவரைப் போற்றிக் கொண்டாடும் விழாக்களில் தைப்பூசத் திருவிழாவும் ஒன்று!

பளபளக்கும் பனாரஸ் பட்டுப் புடவைகள்.!
முகலாயர் காலத்தில் சிக்கலான நெசவு கைநெசவு தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் குஜராத், ராஜஸ்தான் பகுதிகளிலிருந்து வாரணாசியில் வந்து குடியேறினர்.

மருத்துவ குணங்கள் நிறைந்த நுண்கீரைகள்!
மைக்ரோ கிரீன்ஸ் எனப்படும் தளிர்கீரைகளை, செடிகளில் அவை அரும்பாகி வளரத் தொடங்கும் சில நாட்களிலேயே அறுவடை செய்கிறார்கள்.

ஹைட்ரஜன் ரெயில்!
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. டீசல், மின்சாரத்தில் இயங்கும் ரெயில்களுக்கு மாற்றாக இது இருக்கும்.

தெய்வீக வாத்தியம் மிருதங்கம்!
தெய்வீக வாத்தியக் கருவியாகிய மிருதங்கத்தை அற்புதமாக கையாள்பவரும், சிறந்த குருக்களின் வழி காட்டுதலின் கீழ் செயல்பட்டவரும், ஆல் இந்தியா ரேடியோவின் ஏ - டாப் கிரேட் கலைஞரும், இசைத்துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டு பெரும் சேவை செய்து வருபவரும், கர்நாடக இசையில், தாள வாத்தியம் தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டவரும், சுஸ்வரலாயா இசைக் கல்லூரியின் நிறுவனர், அறங்காவலர் மற்றும் முதல்வராக விளங்குபவரும், உலகம் முழுவதிலும் இசை நிகழ்ச்சிகளை அமைதியாக நடத்தி வருபவருமாகிய மிருதங்க இசைக் கலைஞர் வித்வான் எச்.எஸ்.சுதீந்திரா, பெண்மணிக்காக அளித்த பேட்டி:

திருமணமா..மூச்...!
சின்னத்திரையில் சிறகடிக்கும் சங்கீதா, டாக்டருக்குப் படித்திருந்தாலும், டாக்டர் தொழிலைவிட நடிப்பு, மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதால் திரையில் நுழைந்ததாக கூறுகிறார்.

காதலா தினமும், ரோஜா மலர்களும்!
பூக்கள் என்றாலே மனதுக்கு ஒரு பரவசம் தான். எத்தனை விதமான மலர்கள், வண்ணங்கள், வாசனைகள்.

என் விழியில் நீ இருந்தாய்..!
சுற்றி வானம் நிலவை டார்ச்சாக்கி அடித்து அந்த மொட்டை மாடி முழுவதும் எதையோ துழாவுவதைப் போல் இருந்தது. சுற்று சுவரை விதவிதமான தொட்டி செடிகளில் சிரித்த பூக்களின் சிரிப்பை கண்டுப்பிடித்த நிலவு முழு பௌர்ணமியாக பதிலுக்கு சிரித்தது. மாடியின் நடுவில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் உணவுப் பாத்திரங்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு!
பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.