
அவருக்குள் இருந்த எழுத்தாளனை வெளியில் கொண்டு வந்து சாதித்தார். சாகித்ய அகாடமி விருது பெற்றார். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று தனித்தடம் பதித்தார். இது சாத்தியமானதுக்கான காரணங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தான் இயற்றிய சுயசரிதையில் பதிவு செய்துள்ளார்.
திருநெல்வேலி அருகே உள்ள ராஜ வல்லிபுரம் என்ற ஊரில், 1920 ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் சுப்ரமணிய பிள்ளை -மகமாயி அம்மாள்.
இவருக்கு பத்து வயது இருக்கும் போது தந்தையார் மறைந்தார்.
அதனால் கல்லூரி படிப்பு கிட்டவில்லை. குடும்ப சூழ்நிலை,வேலைக்கு சென்று வருவாய் ஈட்டும் நெருக்கடியை அவருக்குக் கொடுத்தது.
பரமக்குடியில் இருந்த அரசு அலுவலகத்தில் வேலை கிடைத்தது. உப்பள ஆய்வாளராக சிலகாலம் பணியாற்றினார்.
முதல் மாதம் சம்பளமாக அவர் பெற்றது 19 ரூபாய். அதில் ஒன்பது ரூபாய் வீட்டிற்கு அனுப்பினார். தன்னுடைய செலவு போக உபரியாக 5 ரூபாய் இருந்தது. அந்தப் பணத்தில் பத்திரிகைகளும் ஏராளமான புத்தகங்களும் வாங்கிப் படித்தார். பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன் ஆகியோரின் படைப்புகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
சாதனை படைத்தவர்கள் ஆரம்ப நாட்களில் பயணித்தது போல இவருடைய தொடக்க காலமும் முட்கள் நிறைந்ததாக இருந்தது. பத்திரிகைகளுக்கு எழுதுவதிலும் இலக்கியத்தின் பால் இருந்த நாட்டத்தின் காரணமாகவும் அரசு வேலையை ராஜினாமா செய்தார்.
சென்னைக்குச் சென்றால் எழுத்தாளனாக ஆகி விடலாம் என்று இவருடைய உள்ளுணர்வு சொன்னது.
Esta historia es de la edición December 2024 de Penmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 2024 de Penmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

ஸ்ரீ வனபத்ரகாளி!-
பாண்டவரும் கௌரவரும் சூதின் காரணமாக பகை கொள்வதற்கு முந்தைய காலம் அது.

பூசத்திருவிழாவும் ஈசன் திருநாளும்!
முருகாவென ஓர் தரம் ஓதடியார் முடிமேல் இணை தாள் அருள்வோனே... என்று ஒரு முறை அவரை அழைத்தால் போதும்,தன் திருப்பாத மலரை அடியார் தலையில் வைத்து அருளுபவன் ஆறுமுகப் பெருமான்! மாமயிலோன் கால் பட்டழிந்தது என் தலைமேல் அயன் கையெழுத்தே.. என்று அருணகிரியார் கூறுவது போல், நம் தீவினைகளை அழித்து சீர்மிகு வாழ்வினை நல்குபவன் சிவபாலன்! அவரைப் போற்றிக் கொண்டாடும் விழாக்களில் தைப்பூசத் திருவிழாவும் ஒன்று!

பளபளக்கும் பனாரஸ் பட்டுப் புடவைகள்.!
முகலாயர் காலத்தில் சிக்கலான நெசவு கைநெசவு தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் குஜராத், ராஜஸ்தான் பகுதிகளிலிருந்து வாரணாசியில் வந்து குடியேறினர்.

மருத்துவ குணங்கள் நிறைந்த நுண்கீரைகள்!
மைக்ரோ கிரீன்ஸ் எனப்படும் தளிர்கீரைகளை, செடிகளில் அவை அரும்பாகி வளரத் தொடங்கும் சில நாட்களிலேயே அறுவடை செய்கிறார்கள்.

ஹைட்ரஜன் ரெயில்!
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. டீசல், மின்சாரத்தில் இயங்கும் ரெயில்களுக்கு மாற்றாக இது இருக்கும்.

தெய்வீக வாத்தியம் மிருதங்கம்!
தெய்வீக வாத்தியக் கருவியாகிய மிருதங்கத்தை அற்புதமாக கையாள்பவரும், சிறந்த குருக்களின் வழி காட்டுதலின் கீழ் செயல்பட்டவரும், ஆல் இந்தியா ரேடியோவின் ஏ - டாப் கிரேட் கலைஞரும், இசைத்துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டு பெரும் சேவை செய்து வருபவரும், கர்நாடக இசையில், தாள வாத்தியம் தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டவரும், சுஸ்வரலாயா இசைக் கல்லூரியின் நிறுவனர், அறங்காவலர் மற்றும் முதல்வராக விளங்குபவரும், உலகம் முழுவதிலும் இசை நிகழ்ச்சிகளை அமைதியாக நடத்தி வருபவருமாகிய மிருதங்க இசைக் கலைஞர் வித்வான் எச்.எஸ்.சுதீந்திரா, பெண்மணிக்காக அளித்த பேட்டி:

திருமணமா..மூச்...!
சின்னத்திரையில் சிறகடிக்கும் சங்கீதா, டாக்டருக்குப் படித்திருந்தாலும், டாக்டர் தொழிலைவிட நடிப்பு, மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதால் திரையில் நுழைந்ததாக கூறுகிறார்.

காதலா தினமும், ரோஜா மலர்களும்!
பூக்கள் என்றாலே மனதுக்கு ஒரு பரவசம் தான். எத்தனை விதமான மலர்கள், வண்ணங்கள், வாசனைகள்.

என் விழியில் நீ இருந்தாய்..!
சுற்றி வானம் நிலவை டார்ச்சாக்கி அடித்து அந்த மொட்டை மாடி முழுவதும் எதையோ துழாவுவதைப் போல் இருந்தது. சுற்று சுவரை விதவிதமான தொட்டி செடிகளில் சிரித்த பூக்களின் சிரிப்பை கண்டுப்பிடித்த நிலவு முழு பௌர்ணமியாக பதிலுக்கு சிரித்தது. மாடியின் நடுவில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் உணவுப் பாத்திரங்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு!
பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.