![கொரியா சென்ற தமிழ் இளவரசி!](https://cdn.magzter.com/1353663969/1685422287/articles/ajb20kRfJ1685966276480/1685966790767.jpg)
சுமார் 2000ம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் கன்னியாகுமரி பகுதியில் இருந்து கடல் வழியாக கொரியா சென்ற தமிழ் இளவரசி ஒருவர், கொரிய மன்னனை மணந்து ராணியாகி, காயா என்கிற மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை அந்த மண்ணில் உருவாக்கியிருக்கிறார். கொரிய மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் இளவரசியின் வழி தோன்றல்களாக இருக்கிறார்கள். கொரியர்களால் ராஜ மாதாவாகவும், கடவுளாகவும் பார்க்கப்படும் ராணியின் கல்லறையைச் சுற்றி நினைவு மண்டபம் ஒன்றையும் எழுப்பி, அவரை தங்களின் கடவுளாகவே வழிபட்டு வருகிறார்கள் கொரியர்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து மிக நீண்ட தொலைவில் இருக்கிற கொரியாவுக்கு இளவரசி சென்றாரா? இது எப்படி சாத்தியம் என்றால்? கடல் வழி வாணிபத்தில் பண்டைய தமிழக மன்னர்கள் சிறந்து விளங்கினார்கள் என்றும், தமிழ் மன்னர்கள் நாடு கடந்து சுமேரியா, எகிப்து, கிரேக்கம், ரோம், சீனாவுடன் வாணிபம் செய்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் வாணிபத்தோடு நிறுத்தாமல், கொடுத்தல், கொள்ளல் என்கிற பண்டைய திருமண பந்தங்கள் மூலமாகவும் உறவுமுறைகளை வேற்று நாடுகளோடு ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
சீனர் மற்றும் ஜப்பானியர்களை போன்ற சாயல் கொண்டவர்களாக கொரியர்கள் இருந்தாலும், இரு நாட்டுக்கு இடையில் இருக்கும் கொரியர்களது பழக்கவழக்கம் சீன, ஜப்பான் நாட்டினர் பழக்கவழக்கத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்கிற வரலாற்று ஆய்வாளர்கள், கொரியர்களின் மொழி, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் தமிழர்களின் தாக்கமே அதிகமாக இருக்கிறது என்று அடித்துச் சொல்கின்றனர்.
Memorabilia of the three kingdom என்கிற கொரிய வரலாற்றுப் புத்தகத்தில் ஹோ ஹுவாங்-ஓக் (Heo Hwang-Ok) என்கிற இளவரசி குறித்தும் ஹிம் சுரோ (Gim Suro) என்கிற இளவரசன் குறித்தும் தரவுகள் இருக்கிறது. இளவரசி ஹோ ஹுவாங்-ஓக், தன்னுடைய 14 வயதில் ஆயுக்தா என்கிற நாட்டில் இருந்து கிளம்பி வந்து ஹிம் சுரோ என்கிற 16 வயது கொரிய இளவரசனை மணந்து கயா என்கிற மிகப்பெரிய பேரரசை கொரிய நாட்டில் உருவாக்கினார் என்கிறது இந்த வரலாற்று ஆய்வு நூல். இளவரசி ஹோ மற்றும் ஹிம் பெயரை கொண்ட அவர்களது வழித்தோன்றல்கள் மட்டுமே கொரியாவில் 60 லட்சம் பேர் வசிக்கிறார்களாம்.
Esta historia es de la edición June 01, 2023 de Thozhi.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición June 01, 2023 de Thozhi.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
![கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1601623/RvoEi-mf01707902220328/1707902511653.jpg)
கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!
பழங்காலத்தில் செய்து அதற்குள் செய்து வந்தோம்.
![பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1601623/bCSHAmg1l1707901865064/1707902205815.jpg)
பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?
ப்ளூ ஸ்டார்\" படத்தின் அறிமுக இயக்குநரான ஜெயக்குமார் ரயிலை | வைத்து காதலை பதிவு செய்து வெற்றிபெற்றிருக்கிறார்.
![மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1601623/57n4ppnYL1707901526178/1707901778034.jpg)
மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங் கூர் கிராமத்தில் அருள் பாலிக்கிறார் ஸ்ரீமதங்கீஸ்வரர்.
![பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1601623/3P_Pb_qk81707900690732/1707901507333.jpg)
பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!
புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன்
![சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1601623/Kv3E8tQq51707900079075/1707900574920.jpg)
சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி
சிறுதானிய உணவுகள்தான் நம் முன்னோர்கள் காலத்தில் அன்றாட உணவாக இருந்தது.
![ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1601623/xC7nHDc4H1707899775637/1707900044911.jpg)
ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையே அழகாகவும் வண்ணமய மாகவும் செய்து விற் பனை செய்து வருகிறார் ரெஜினா.
![ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1601623/Y-4rrSVFE1707899431451/1707899748421.jpg)
ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!
பெண்கள் படிக்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று நாம் சொன்னாலும், இன்றும் சில பெண்கள் தங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள்.
![முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1601623/wylc-m4rv1707896543442/1707896898260.jpg)
முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!
நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிவிப்பதைவிட, எப்படி இந்த இடத்தை அடைந்தீர்கள் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதே முக்கியம்...\"
![லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1601623/sRH2jt_El1707896059072/1707896367195.jpg)
லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!
கைவினைப் பொருட்களுக்கு என தனி மதிப்பும், தனி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
![கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1601623/2EQITQW8v1707895482823/1707895908962.jpg)
கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!
குழந்தை வளர்ப்பு முக்கியம். அதே போல் குழந்தை கருவில் இருக்கும் போது. பிறந்தவுடன் அம்மாக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம்.