அவர் இந்தியப்பிரதமராக உயர்ந்த போதிலும் அவரது பார்வை கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சரின் கண்ணோட்டமாகவே இருந்தது. அதை தாண்டி அவரால் நோக்க முடியவில்லை.
ஒரு கட்சியின் தலைவராக இருந்த போதிலும் தனது குடும்பத்தின் நலனைத்தாண்டி வேறு எதையும் அவரால் சிந்திக்க முடியவில்லை. அவரது மகன் குமாரசாமி முன்னாள் முதலமைச்சர் ஆவார். அவர் சென்னப்பட்டினா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இத்தொகுதியில் பா.ஜ.க. சார்பில் சி.பி.யோகஸ்வர் போட்டியிடுகிறார். அவரது சகோதரர் எச்.டி ரேவண்ணாவும் களத்தில் உள்ளார். அதுமட்டுமல்லாமல் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி, மகன் நிகில் குமாரசாமி ஆகியோரும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் வலுவான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள்.
நிகில் குமாரசாமி இத்தேர்தலில் ராமநகரம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். ரேவண்ணாவின் மனைவி பவானி, மகன் சுரேஜ் ரேவண்ணா எம்.எல்.சி, மற்றொரு மகன் பிரஜ்வால் ரேவண்ணா எம்.பி. ஆகியோரும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் முக்கிய புள்ளிகளாக செயல்பட்டு வருகின்றனர். ஒட்டுமொத்தமாக பார்த்தால் தேவகவுடா குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் அஷ்ட திசை எங்கும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
குடும்ப அரசியலை ஏற்காத கட்சி பா.ஜ.க. என்று பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாய்நோகாமல் வார்த்தை பந்தல் போட்டாலும் உண்மை இதற்கு புறம்பானது. அநேகமாக எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.க.வில் வாரிசு அரசியல் கொடி கட்டிப்பறக்கிறது. இதற்கு கர்நாடகாவும் விதிவிலக்கு அல்ல.
கர்நாடகாவில் இப்போது முதலமைச்சராக உள்ள பசவராஜ் பொம்மையின் தந்தை சோமப்ப ராயப்ப பொம்மையும் கர்நாடக முதலமைச்சராக செயல்பட்டுள்ளார். ஆனால் அவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் கிடையாது. தனது தந்தை மறைந்து பல ஆண்டுகளான பிறகே பா.ஜ.க. பசவராஜ் பொம்மை சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
குழந்தைகளை பாதிக்கும் கலப்பட உணவு!
டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது உலக உணவு கட்டுப்பாட்டாளர் உச்சி மாநாட்டிற்காக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டார். அதில் வெளியான தகவல் ஒன்று அதிர்ச்சிகரமானது.
என்னோட வாழ்க்கை ரொம்ப சிம்பிளானது!
தமிழில் பீல்டு அவுட் ஆன நிலையில்... தெலுங்கு, கன்னட படம் என தன் இருப்பை மாற்றிய பிரியா மணி, தற்போது இந்தியில் வெற்றிகரமாக பயணிக்கும் நடிகை. திரைத்துறையில் 22 ஆண்டுகளாக கோலாச்சும் பிரியாமணியுடன் ஒரு அழகான உரையாடல்.
அருகில் வசிக்கும் தேவதைகள்!
அன்றைய தினம் ஒரே நாளில் இரண்டு முதிய பெண்மணிகளுக்கு சிகிச்சை அளிக்க நேர்ந்தது. இருவரிடையே சில ஒற்றுமைகள், சில வேற்றுமைகள். முதலில் வந்தவர் முப்பிடாதி. அவருக்கு லேசான காய்ச்சல், சர்க்கரை அளவும் அதிகமாக இருந்தது. அசதியா இருந்துச்சு, அப்படியே மெல்ல நடந்து வந்துட்டேன் என்று தனியாக வந்தவர் அப்படியே படுத்து விட்டார்.
அந்நிய மொழி இந்தி அவசியமில்லை!
இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை பேரழிவுக்குள் தள்ளும் விதமாக இந்தி திணிப்பில் மிக மூர்க்கமாக இருக்கிறது. இந்தி பிரச்சினை இன்று நேற்றல்ல... வெகு காலமாகவே தமிழ்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தமிழ்நாட்டின் மக்களுடன் சேர்த்து அரசியல் கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஜெயலலிதா அரசியலில் காலடி எடுத்து வைத்த காலகட்டத்தில்... இந்தி, தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத விசயம் என தேவி வார இதழுக்கு அளித்த ப்ளாஷ் பேக் பேட்டி:-
அரசு உயர் அதிகாரிகளை உருவாக்கும் பழங்குடியின கிராமம்!
ஒரு கிராமம் முழுக்க அரசு அதிகாரிகள் அதிகமாக இருந்தால் அது வியப்பான விஷயம்தானே. அப்படி ஒரு கிராமம் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. தார் மாவட்டத்தில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பதியால் என்ற கிராமம் அதிகாரியோன் காகாவ் அல்லது நிர்வாகிகளின் கிராமம் என்று பிரபலமாக அறியப்படுகிறது.
நடிகை காதம்பரியும் காவல் அதிகாரிகளும்?
சினிமா நடிகைகளுக்கு இந்த சமூகம் பாதுகாப்பாக உள்ளதா? என்ற கேள்விக்கு இப்போதும் மவுனமே பதிலாக கிடைக்கிறது. சினிமாவைத் தாண்டி அரசியல் மட்டத்திலும் நடிகைகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளே சிறையில் வைத்து தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக ஒரு நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பி ஆந்திர மாநில அரசியலில் சூட்டைக் கிளப்பியுள்ளார்.
காதால் நெருஞ்சி!
அருண்சார்' என்று அழைத்தாள் ஆதிரை. “சொல்லுங்க ஆதிரை மேடம்” என்று அவள் பக்கம் திரும்பினான் அருண்குமார்.
கொல்கத்தாவின் அடையாளம்... பிரியாவிடை பெறும் டிராம் வண்டிகள்!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா என்றால் நினைவுக்கு வருவது அதன் வரலாற்று அடையாளங்கள் மற்றும் கட்டிடக்கலை அற்புதங்கள். அதில் முக்கியமாக அந்த நகரின் பெருமை டிராம் வண்டிகள் எனலாம். நம்ம ஊரில் குதிரை வண்டி, மாட்டு வண்டி, கூண்டு வண்டி எப்படி புகழ் பெற்றதோ அப்படி இந்த டிராமுக்கும் தனி சிறப்பு உண்டு.
என்னோட எல்லை எனக்கு தெரியும்
தமிழில் அறிமுகமாகி பல வருடங்கள் ஓடி விட்டாலும் 'நிகிலா விமலுக்கு வாழை படத்தின் பூங்கொடி டீச்சர்' கேரக்டர்தான் தனி அடையாளத்தை கொடுத்துள்ளது. நடன ஆசிரியரின் மகளான நிகிலாவுக்கு பரதம், குச்சுப்புடி பாரம்பரியக் கலைகள் அனைத்தும் அத்துப்படி. தமிழ், மலையாள சினிமாவில் பரபரப்பாக இருக்கும் நிகிலாவுடன் ஒரு அழகான சிட்சாட்.
திருப்பதி லட்டு....உருவான வரலாறு!
திருப்பதி லட்டு தான் இப்போது தேசிய அளவில் ஹாட் டாபிக். பாரம்பரியமிக்க பிரசாதத்தின் மீது இப்போது அரசியல் சாயம் பூசி கலப்படத்தின் லிஸ்டில் சேர்த்து விட்டார்கள். திருப்பதி லட்டில் தரம் குறைந்த நெய்யை பயன்படுத்தி இருக்கிறார்கள்.